சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்: முக்கிய குற்றவாளி கைது!

Saif Ali Khan stabbing suspect
Saif Ali Khan stabbing suspectMint
Published on

நடிகர் சைஃப் அலி கானின் பாந்த்ரா இல்லத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் குற்றம் சாற்றட்டபட்டவர் புகுந்தார். அந்த நபருடன் சைஃப் அலிகான் போராடும் போது ஆறு கத்திக் காயங்களுக்கு ஆளானார் .

தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார், அதைத் தொடர்ந்து நடிகரின் மகன் இப்ராகிம் அலி கான் அவரை மும்பையின் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அங்கு அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆபத்தில்லை என்று கூறப்பட்ட சைஃப் அலி கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மகாராஷ்டிராவின் தானே மேற்கு பகுதியில் இருந்து சைஃப் அலி கான் கத்தியால் குத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜய் தாஸ் என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்தனர்.

டிசிபி மண்டலம்-6 நவ்நாத் தவாலே குழுவினர் மற்றும் காசர்வடவலி போலீஸார் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், தானே மேற்கில் உள்ள ஹிராநந்தனி தோட்டத்தில் உள்ள டிசிஎஸ் கால் சென்டருக்குப் பின்னால், மெட்ரோ கட்டுமானப் பகுதிக்கு அருகிலுள்ள தொழிலாளர் முகாமில் விஜய் தாஸ் (எல்) கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
நல்ல மணமும் சுவையும் கொண்ட மைசூர் கொழுந்து வெற்றிலை!
Saif Ali Khan stabbing suspect

சைஃப் அலி கான் வழக்கு குற்றவாளி கைது: யார் அவர்?

1. முக்கிய குற்றவாளியான விஜய் தாஸ், முன்பு மும்பையில் உள்ள ஒரு பப்பில் பணிபுரிந்து வந்தார். இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரை காவலில் வைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

2. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விஜய் தாஸ், பிஜோய் தாஸ் மற்றும் முகமது இலியாஸ் உள்ளிட்ட பல பெயர்களைப் பயன்படுத்தியதாக மும்பை காவல்துறை கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

3. நடிகர் சைஃப் அலி கான் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கும் சத்குரு ஷரன் கட்டிடத்தின் சிசிடிவி காட்சிகளில் தாக்குதல் நடத்தியவர் சிக்கினார். டிசிபி மண்டலம்-9 தீக்ஷித் கெடம், தாக்குதல் நடத்தியவர் சயீப்பின் 12வது மாடி அடுக்குமாடிக்குச் செல்ல படிக்கட்டுகளைப் பயன்படுத்தியதை வெளிப்படுத்தினார் .

4. சம்பவத்தின் போது சைஃப் அலி கானின் வீட்டுப் பணியாளர் எலியம்மா பிலிப்ஸ் என்ற லீமா வீட்டில் இருந்தார், மேலும் இவர் குற்றம் சாட்டப்பட்டவரை முதலில் கண்டுபிடித்தவர் ஆவார் . அவரைத் தடுக்கும் முயற்சியில், அவர் அவரிடம் கைகலப்பில் ஈடுபட்டார், இதனால் அவரது கையில் காயம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
இளவட்டக்கல் தூக்கும் போட்டி: ஆண்களுக்கு நிகராக சாதனை படைத்து வரும் பெண்கள்! பலே பலே!
Saif Ali Khan stabbing suspect

5. லீமாவின் அலறல் சத்தம் கேட்டு பயந்துபோன சைஃப் அலி கான் தனது அறையை விட்டு வெளியே வந்தார். அவர் குற்றம் சாட்டப்பட்டவருடன் சண்டையிட்டபோது, அவர் நடிகரை கூர்மையான கத்தியால் ஆறு முறை தாக்கினார். இதனையடுத்து தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

6. மும்பை காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், லிமா, தாக்குதலாளியை முப்பதுகளின் இறுதியில், 5 அடி 5 அங்குல உயரம் கொண்ட மெலிதான, கருமை நிறமுள்ள மனிதர் என்று விவரித்துள்ளார்.

7. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் தாதரில் உள்ள ஒரு கடையில் நீலச் சட்டையில் ஹெட்ஃபோன்களை வாங்குவது சிசிடிவி கேமராவில் சிக்கியது . முன்னதாக, அவர் பாந்த்ரா ரயில் நிலையத்திலும் காணப்பட்டார், அங்கு அவர் ரயிலில் ஏறியதாக நம்பப்படுகிறது.

8. கூடுதலாக, சைஃப் அலிகானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் கான், சைஃப் உடனான சண்டையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் 'மிகவும் ஆக்ரோஷமாக' மாறி நடிகரை பலமுறை கத்தியால் குத்தியதாக காவல்துறையிடம் கூறியிருந்தார். ஆனால், திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் எதையும் அவர் தொடவில்லை என்றும் அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com