4 மணி நேரம் ஓடிய முதல் தமிழ்ப்படம்! நீ....ளமான படங்களை அன்றே மக்கள் ரசித்தது எப்படி?

Haridas Movie
Haridas Movie
Published on

தற்போதைய படங்களின் ரன் டைமானது 2.30 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகதான் இருக்கும். ஆனால், பழைய தமிழ் திரைப்படங்களைப் பார்த்தோமானால், தொடர்ந்து நான்கு மணி நேரம் இருந்திருக்கின்றன. அப்படியானால், அப்போதைய தணிக்கை விதிகளில் (Censorship Rules) படத்தின் நீளம் குறித்து விதிகள் இருந்திருக்குமா? மக்கள் எப்படி அத்தகைய படங்களை வரவேற்தார்கள் என்பது குறித்து பார்ப்போமா?

சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படமானது 3 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது பெரும் விவாதத்தை கிளப்பியது. எவ்வளவுதான் கதை நன்றாக இருந்தாலும் பார்வையாளர்களால் அவ்வளவு நேரம் பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்றே விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் படங்கள் 4 மணி நேரம் கூட ஓடியது. அப்போது மக்களால் விரும்பிப்பார்க்கப்பட்ட முழு நீளப் படங்கள், ஏன் இப்போது விரும்பப்படுவது இல்லை?

தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 1930கள் மற்றும் 1940களில், படங்கள் நீண்ட நேரம் ஓடுவதற்குப் பல காரணங்கள் இருந்தன:

  • சினிமா என்பது நாடக கலையின் வளர்ச்சி என்று நம் அனைவருக்குமே தெரியும். அக்காலத்தில் நாடகம் விடிய விடிய நடைபெறும். இதன் விளைவாகத்தான், நாடகத்தை தளவி எடுக்கப்பட்ட படங்களின் கால அளவும் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை இருந்திருக்கிறது.

  • பாகவதரின் படங்களும், பக்திப் படங்களும் (உதாரணமாக, ஹரிதாஸ்) மிகவும் நீளமானவை. 1944-ல் வெளியான ஹரிதாஸ், 78 வாரங்கள் ஓடிச் சாதனை படைத்தபோது, அதன் நீளம் மிக அதிகமாகவே இருந்தது.

  • அந்த நாட்களில், படத்தின் கதையைவிட பாடல் மற்றும் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நடிகர்களே பாடகர்களாக (Actor-Singers) இருந்தனர். சில படங்களில் 50-க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெற்றன.

  • இந்த நீளமான பாடல்களும், நடனக் காட்சிகளும் படத்தின் நீளத்தை அதிகப்படுத்தின. ரசிகர்கள் நடிகர்கள் பாடுவதைப் பார்ப்பதற்காகவே மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வந்தனர்.

தணிக்கை விதிகள் (Early Censorship Rules)

இன்றைய நவீன சென்சார் வாரியம் (CBFC) போல, ஆரம்ப காலத் தணிக்கை விதிகள் படங்களின் நீளத்தைக் கட்டுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தவில்லை. மாறாக, அவற்றின் முக்கிய கவனம் வேறு விஷயங்களில் இருந்தது. அதாவது,

  • நாடகம் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்ற ஆபாசமற்ற நடனங்கள், சமூக அமைதிக்கு கேடு விளைவிக்காத வகையில் வசனங்கள் போன்றவற்றின் மீதுதான் இருந்தது.

  • 1920-கள் மற்றும் 30-களில், தணிக்கை விதிகள் பெரும்பாலும் பிரிட்டிஷ் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. தேசபக்தி உணர்வைத் தூண்டும் அல்லது பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான செய்திகளைக் கொண்ட காட்சிகளை நீக்குவதில்தான் அவர்கள் அதிக கவனம் செலுத்தினர். படத்தின் நீளம் ஒரு பெரிய பிரச்னையாகக் கருதப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
"அப்பா-அம்மா என்னை வளர்த்த மாதிரி, நான் என் பையனை வளர்க்க முடியல!" - மாதவன் ஓபன் டாக்!
Haridas Movie
  • மக்கள் நீண்ட நேரம் தியேட்டரில் அமர்ந்து பொழுதுபோக்க விரும்பியதால், தணிக்கைத் துறை நீளத்தைக் குறைக்கச் சொல்லவில்லை. அது ஒரு கௌரவமான கலை வடிவமாகவே கருதப்பட்டது.

  • சில படங்கள் நீண்ட நேரம் ஓடும்போது, தியேட்டர்களில் நாள் முழுவதும் குறைவான காட்சிகள் மட்டுமே திரையிடப்படும்.

  • அந்த காலகட்டத்தில், பொழுதுபோக்குக்குக் குறைவான வாய்ப்புகளே இருந்ததால், மக்கள் அதிகக் கட்டணம் கொடுத்து நீண்ட படங்களைப் பார்க்கத் தயாராக இருந்தனர்.

படத்தின் நீளம் குறைந்ததன் பின்னணி

  • 1950கள் மற்றும் 60களில் நிலைமை மெல்ல மாறத் தொடங்கியது திரைக்கதையில் மாற்றம் ஏற்பட்டு, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்: கோவா சென்றார் நடிகர் சிவகார்த்திகேயன்..!
Haridas Movie
  • தியேட்டர் உரிமையாளர்கள் அதிக லாபம் ஈட்ட, ஒரு நாளில் அதிக காட்சிகள் திரையிட விரும்பினர். நீண்ட படங்கள் இதற்குத் தடையாக இருந்தன.

  • தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, படத்தொகுப்பு எளிதானது, மேலும் தேவையற்ற காட்சிகளையும் பாடல்களையும் நீக்க முடிந்தது.

இப்படியாக, 4 மணி நேரம் ஓடிய படங்கள் படிப்படியாக குறைந்து, இன்று நாம் பார்க்கும் 2 முதல் 2.30 மணி நேரப் படங்களாக மாறின.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com