என்னை நோக்கி பாயும் தோட்டா படம் என்னுடையது இல்லை என்று சொன்னதற்கு இதுதான் காரணம்!

GVM
GVM
Published on

சில நாட்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் ஜிவிஎம் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை நான் இயக்கவில்லை என்பது போல் கூறினார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, நான் சொன்னதற்கு இதுதான் காரணம் என்று கூறியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

கோலிவுட்டின் பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பல நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். காதல் படங்கள் என்றால் பலருக்கு படித்தமானவை ஜிவிஎம் படங்கள்தான். இயக்குநர் ராஜீவ் மேனனின் உதவியாளராக பணியாற்றிய இவர், பின்னர் மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கினார்.

முதல் படமே பெரிய ஹிட் அடித்தது. இன்றைய ரசிகர்களின் ஃபேவரெட் படம் மின்னலே. அதன் பின்னர் இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார்.

இயக்குநராக மட்டுமல்ல நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 கடந்த ஆண்டு ஜோஸ்வா இமை போல் காக்க என்ற இடம் இவரின் இயக்கத்தில் வெளியானது. ஆனால், அந்த அளவிற்கு இந்தப் படம் வெற்றியடையவில்லை.

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் படம் ‘Dominic and the Ladies Purse’. இந்த படத்தின் மூலம் தான் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆக இருக்கிறார். இந்தப் படத்தை மம்முட்டியே தயாரித்திருக்கிறார். இப்படம் வரும் 23 அன்று வெளியாகிறது. ஆகையால், படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஐ ஆம் காதலன் - நல்ல கதை; பலவீனமான திரைக்கதையால் 'ஸோ ஸோ' என்றான படம்!
GVM

அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கௌதம் மேனன், பதிலளிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின் அவர், அந்த படத்தின் பெயர் என்ன சொன்னீர்கள்? எனக்கு அதில் ஒரு பாடல் மட்டும் தான்  தெரியும். அந்தப் படத்தை நான் இயக்கவில்லை. வேறு யாராவது இயக்கி இருப்பார்கள் என்று கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்:
பூடானின் பரோ விமான நிலையத்தில் விமானிகள் எதிர்கொள்ளும் சவால்கள்!
GVM

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் இதனால் தனுஷ் மற்றும் ஜிவிஎம் ஆகியோருக்கிடையே ஏதோ பிரச்சனை இருப்பதாக கருத்து தெரிவித்தார்கள். ஆனால், இப்போது இதுகுறித்து ஜிவிஎம் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

"நான் ஜோக்காக தான் அந்த விஷயத்தை சொன்னேன். அது என்னுடைய சொந்த படம். நான் தான் அந்த படத்தை தயாரித்தேன். அந்த ஒரு படத்தை மட்டும் என்னால் நினைத்த அளவுக்கு எடுக்க முடியவில்லை. நான் ஜோக்காக சொன்ன விஷயத்தை இப்படி எடுத்து பெரியதாகி விட்டார்கள்.” என்று பேசியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com