Vedivelu vs Saroja Devi
Vedivelu vs Saroja Devi

தன் சொந்த வசனத்தால் சரோஜா தேவியை வம்புக்கு இழுத்த வடிவேலு! 

Published on

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தவர் நடிகர் வடிவேலு. தன்னுடைய தனித்துவமான பாணியாலும், உடல்மொழியாலும் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். அப்படிப்பட்ட வடிவேலு ஒரு படத்தில் பேசிய வசனம், பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை வருத்தப்பட வைத்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சூர்யா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான "ஆதவன்" திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி. அந்த காட்சியில் வடிவேலு பேசும் வசனம் ஒன்று நடிகை சரோஜா தேவியை குறிப்பிட்டு பேசியது போல் அமைந்திருந்தது. இது படத்தில் இடம்பெற்றிருந்தாலும், உண்மையில் அது திரைக்கதையில் எழுதப்படாத வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு அந்த காட்சியில் சரோஜா தேவியைப் பற்றி பேசும்போது, "மேலே போ ஒரு அம்மா ஃபுல் மேக்கப்புடன் படுத்திருக்கும்" என்று வசனம் பேசியுள்ளார். இந்த வசனம் படத்தில் நகைச்சுவையாக பார்க்கப்பட்டாலும், நடிகை சரோஜா தேவிக்கு இது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக படத்தின் உதவி இயக்குனரும், கதை ஆசிரியருமான ரமேஷ் கண்ணாவை தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
இனி படங்களில் நடிக்க மாட்டேன் - நடிகர் அஜித் குமார்!
Vedivelu vs Saroja Devi

"நான் உங்களிடம் வாய்ப்பு கேட்டு வந்தேனா? நீங்கள்தானே என்னை நடிக்க அழைத்தீர்கள். இப்போது நானே மேக்கப் போட்டுக்கொண்டு நடிப்பது போல் கிண்டல் செய்கிறீர்களா?" என்று சரோஜா தேவி தனது வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். பழம்பெரும் நடிகை தனக்கு போன் செய்து வருத்தம் தெரிவித்ததை கேட்டு ரமேஷ் கண்ணா அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக சரோஜா தேவியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ரமேஷ் கண்ணாவே ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். வடிவேலுவின் நகைச்சுவை உணர்வுக்காக பேசப்பட்ட வசனம், மூத்த நடிகை சரோஜா தேவியை காயப்படுத்தியது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. 

இதையும் படியுங்கள்:
8 வயதில் சினிமா வாய்ப்புத் தேடி அலைந்த கோவை சரளா!
Vedivelu vs Saroja Devi

சினிமா உலகில் நகைச்சுவை என்பது இன்றியமையாத ஒன்று. ஆனால், அந்த நகைச்சுவை மற்றவர்களை காயப்படுத்தும் விதமாக அமைந்துவிடக்கூடாது. குறிப்பாக, மூத்த கலைஞர்களை மதித்து, அவர்களை கௌரவிக்கும் விதமாக நமது செயல்கள் இருக்க வேண்டும். இதற்கு, வடிவேலுவின் இந்த வசனம் ஒரு சிறிய உதாரணம்.

logo
Kalki Online
kalkionline.com