புதுமுக இயக்குனர் அன்பு இயக்கும் படைத்தலைவன் படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். இப்படம் இந்தாண்டு ஏப்ரலில் வெளியாகும் எனத் தகவல் வந்துள்ளது.
படைத்தலைவன் படத்திற்குத் திரைக்கதை மற்றும் வசனத்தை பார்த்திபன் எழுதியிருக்கிறார். சத்தமில்லாமல் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இன்னும் சில நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர். இப்படத்தில் மொத்தம் ஐந்து சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சண்முக பாண்டியன் விஜயகாந்தையே மிஞ்சும் அளவிற்கு சண்டைக் காட்சிகளில் மாஸ் செய்திருக்கிறாராம். படம் வெளியானதும் சண்டைக் காட்சிகள் மூலமே அவர் மிகவும் பேசப்படுவார் என்று கூறப்படுகிறது.
சினிமாவில் அவர் வலம் வர இதுவே பெரிய ப்ளஸ் ஆக அமையும் என்றும் கூறுகின்றனர். மேலும் சண்முக பாண்டியன் முழு நேரமும் சினிமாவில் இருக்கப்போவதாகவும், அவ்வப்போது மட்டும் அரசியலில் தலைக்காட்டப் போவதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து படங்கள் நடித்து அப்பாவின் இடத்தை நோக்கிப் போக ஆசைப்படுகிறாராம்.
படைத்தலைவன் படத்தின் கதையை விஜயகாந்த் கேட்டு அவர் விருப்பத்தின் பேரில் தான் சண்முக பாண்டியன் கதைக்கு ஓகே கூறியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காடும் காடு சார்ந்த இடங்களில்தான் எடுக்கப்படுகிறது என்றும், முழு படப்பிடிப்பும் கேரளா காடுகளில்தான் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் வந்துள்ளது. கும்கிப் படத்தில் யானையோடு ஹீரோ பழகித் திரிவதுப் போன்றக் காட்சிகள் இப்படத்திலும் உள்ளனவாம். மேலும் இப்படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால் இப்படத்தில் நிறைய காட்சிகளுக்கு க்ராபிக் பணித் தேவைப்படுவதால், வெளியீட்டு தேதி தள்ளிப்போகும் என்று கூறியுள்ளனர்.
முதல் நாள் படப்பிடிப்பின்போது சண்முக பாண்டியனின் தாயார் பிரேமலதா சென்று விழாவில் கலந்துக்கொண்டு திரும்பியிருக்கிறார். அந்த சமையத்தில் விஜய்காந்தின் உடல் சரியில்லாததால் அவர் அங்குச் செல்லவில்லை. இருப்பினும் அவரின் ஆசிர்வாதத்தாலும் அவருக்குக் கதைப் பிடித்துவிட்டதாலும் சண்முக பாண்டியன் முழு கவனத்துடன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின்னர் சண்முக பாண்டியன் நிச்சயம் ஆக்ஷன் கிங்காக வலம் வருவார் என்றுப் படக்குழுவினர் பேசிக்கொள்கிறார்கள்.