அஜித், வடிவேலுவுடன் நடிக்க மறுப்பது ஏன்?... 22 ஆண்டுகளாகத் தொடரும் பகை! 

Ajith refuse to act with Vadivelu
Ajith refuse to act with Vadivelu
Published on

தமிழ் திரையுலகில் நகைச்சுவைக்கென தனியிடம் பிடித்தவர் வைகைப்புயல் வடிவேலு. 90-களில் தொடங்கி 2010 வரை, தமிழ் சினிமாவின் காமெடி சக்கரவர்த்தியாக வலம் வந்தார். ஆனால், அரசியல் சார்பு, விஜயகாந்த் உடனான மோதல், இயக்குனர் ஷங்கருடனான கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் சுமார் பத்து ஆண்டுகள் திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் மூலம் மீண்டும் வந்த வடிவேலுவுக்கு, ஆரம்பத்தில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும், 'மாமன்னன்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால், தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க விருப்பமில்லாத வடிவேலு, தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சுந்தர் சி உடன் ஏற்பட்ட பிரச்சனையால், அவரது படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது அவருடன் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல மாற்றங்கள் வடிவேலுவின் திரை வாழ்க்கையில் நிகழ்ந்தாலும், கடந்த 22 ஆண்டுகளாக நடிகர் அஜித் குமார் படங்களில் அவர் நடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த வடிவேலுவை, அஜித் குமார் மட்டும் ஏன் புறக்கணிக்கிறார் என்ற கேள்வி பலரது மனதிலும் உண்டு. இதற்கான காரணம் 2002-ல் வெளியான 'ராஜா' திரைப்படம்தான்.

இதையும் படியுங்கள்:
பசியால் துடித்த அஜித்… ஆடு மேய்ப்பவர் சொன்ன அந்த வார்த்தை!  
Ajith refuse to act with Vadivelu

எழில் இயக்கத்தில் அஜித் குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராஜா' படத்தில், வடிவேலு அஜித் குமாருக்கு மாமாவாக நடித்திருந்தார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு, அஜித் குமாரை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. பலமுறை அஜித் குமார் கூறியும், வடிவேலு தனது பேச்சில் மாற்றத்தைக் காட்டவில்லை. இயக்குனர் எழில் அறிவுரை கூறியும், வடிவேலு அதை பொருட்படுத்தவில்லை. இந்த சம்பவம் அஜித் குமாரை மிகவும் வருத்தமடையச் செய்தது.

இதனால், வடிவேலு இனி தனது படங்களில் நடிக்கக்கூடாது என்ற முடிவை அஜித் குமார் எடுத்ததாக கூறப்படுகிறது. அன்று எடுக்கப்பட்ட அந்த முடிவு, இன்று வரை அதாவது 22 ஆண்டுகளாக தொடர்கிறது. ஒரு சிலர், வடிவேலுதான் அஜித்துடன் சேர்ந்து நடிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். ஒரு சிறிய கருத்து வேறுபாடு அல்லது மரியாதைக் குறைவான அணுகுமுறை, இவ்வளவு காலம் வரை ஒரு நடிகரின் வாய்ப்பைப் பறிக்கும் அளவிற்கு சென்றிருப்பது ஆச்சரியமாகவும், அதே நேரத்தில் வருத்தமளிப்பதாகவும் உள்ளது. 

இதையும் படியுங்கள்:
பணி ஓய்விற்குப் பின் வரும் காலம் பயனற்றதா?
Ajith refuse to act with Vadivelu

இந்த சம்பவத்தின் மூலம், பணிபுரியும் இடத்தில் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்கிறோம். இது வடிவேலு மற்றும் அஜித் குமார் இருவரது திரை வாழ்க்கையிலும் ஒரு கரும்புள்ளியாகவே கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com