இன்று சொகுசு ஹோட்டல்களாக மாறியிருக்கும் அன்றைய 7 அரண்மனைகள்!

கட்டடக்கலைக்கு பெயர் பெற்று, அரண்மனைகளாக இருந்து, சொகுசு ஹோட்டல்களாக மாற்றப்பட்ட 7 இந்திய ஹோட்டல்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
7 Indian Palace
7 Indian Palace

நம் நாட்டில் மன்னர் காலத்தில் ஏராளமான அரண்மனைகள் அதனுடைய தனித்துவமான வரலாறு கட்டடக்கலை மற்றும் வசதிகளின் அடிப்படையில் பிரபலமாக விளங்கின. அந்த வகையில் கட்டடக்கலைக்கு பெயர் பெற்று அரண்மனைகளாக இருந்து சொகுசு ஹோட்டல்களாக மாற்றப்பட்ட 7 இந்திய ஹோட்டல்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. உமைத் பவன் பேலஸ், ஜோத்பூர்

Umaid Bhawan Palace, Jodhpur
Umaid Bhawan Palace, Jodhpur

1928 மற்றும் 1943க்கு இடையில் உமைத் சிங் மகாராஜாவால் இந்தோ - காலனிய கலை அம்சங்கள் மற்றும் ஆர்ட் டெகோ பாணியில் கட்டப்பட்ட ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸ் இன்று உலகின் மிகப்பெரிய தனியார் இல்லங்களில் ஒன்றாக உள்ளது. தாஜ் ஹோட்டல் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் இது ஒரு அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது.

2. லேக் பேலஸ், உதய்பூர்

Lake Palace, Udaipur
Lake Palace, Udaipur

முன்பு 'ஜக் நிவாஸ்' என்று அழைக்கப்பட்டு உதய்பூரில் பிச்சோலா ஏரியின் நடுவே வெண்மையான பளிங்கு கற்களால் கட்டப்பட்ட 'லேக் பேலஸ்' அரண்மனை ஏரியின் நீல நிற நீரில் பிரதிபலிக்கும் போது மாயாஜால தோற்றத்தை அளிக்கும் அற்புதமான கட்டடக்கலை மற்றும் அலங்காரங்களை கொண்டுள்ளது. தற்போது தாஜ் ஹோட்டல் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் இந்த சொகுசு விடுதியில் உலகத்தரம் வாய்ந்த உணவு மற்றும் தங்கும் வசதிகள் உள்ளன. படகு சவாரி மற்றும் ஏரியின் அழகை ரசிக்கும் படி இங்குள்ள அறைகள் மற்றும் கூடங்கள் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

3. ராம்பாக் பேலஸ், ஜெய்ப்பூர்

Rambagh Palace, Jaipur
Rambagh Palace, Jaipur

1835 ஆம் ஆண்டில் இளவரசர் ராம் சிங் II இன் ஈரமான செவிலியருக்காக ஒரு தோட்ட வீடாக கட்டப்பட்டு ,ஜெய்ப்பூர் மகாராஜாவின் வசிப்பிடமாக இருந்த 'ராம் பாக் பேலஸ்' தற்போது விடுதியாக மாற்றப்பட்டது. இந்தோ-சரசனிக் பாணியில் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் 79 அறைகள் உள்ளன.

4. ஃபலகனுமா பேலஸ், ஹைதராபாத்

Falaknuma Palace, Hyderabad
Falaknuma Palace, HyderabadImg Credit: Wikipedia

ஹைதராபாததின் ஃபலக்னுமா பகுதியில் அமைந்துள்ள நிஜாம்களின் இல்லமாக இருந்த இந்த அரண்மனை, இப்போது தாஜ் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் ஹோட்டலாக மாறி உள்ளது.

5. லக்ஷ்மி விலாஸ் அரண்மனை

Lakshmi Vilas Palace
Lakshmi Vilas Palace

குஜராத் மாநிலம் வதோதராவில் (பரோடா) கெய்க்வாட் வம்சத்தின் மகாராஜாக்களால் 700 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட லட்சுமி விலாஸ் அரண்மனை தற்போது உலகின் மிகப்பெரிய தனியார் குடியிருப்பாக கருதப்படுகிறது. அரண்மனை வளாகத்தில் அழகிய தோட்டங்கள், நீச்சல் குளம், கிளப் ஹவுஸ் மற்றும் ஒரு கோல்ஃப் மைதானம் மோதி பாக் அரண்மனை மற்றும் மகாராஜா ஃபதே சிங் அருங்காட்சியகம் அமைந்துள்ளன.

6. நீம்ரானா கோட்டை

Neemrana Fort
Neemrana Fort

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பழமையான கோட்டையான நீம்ரானா கோட்டை இந்திய மற்றும் முகலாய பாணிகளின் கட்டிட கலவையாக காணப்படுகிறது. சொகுசு விடுதியாக இருக்கும் கோட்டையில் நீச்சல் குளங்கள் தொங்கும் தோட்டங்கள் போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளன. கோட்டையின் சுவர்களில் இருந்து சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை ரசிப்பது ஒரு அற்புதமான அனுபவமாகும்.

இதையும் படியுங்கள்:
'அரண்மனைகளின் நகரம்' எது தெரியுமா?
7 Indian Palace

7. சாமோட் அரண்மனை

Samode palace
Samode palace

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பாரம்பரியமிக்க சாமோட் அரண்மனை. ராஜபுத்திர மற்றும் முகலாய கட்டிடக்கலை பாணிகளின் அற்புதமான கலவையாக இருக்கும் அரண்மனையின் சுவர்களில் சிக்கலான வேலைப்பாடுகள், ஓவியங்கள் மற்றும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு பாரம்பரிய சொகுசு விடுதியாக செயல்படுகிறது. இங்குள்ள திவான்-இ-காஸ் (பொது பார்வையாளர் கூடம்) மற்றும் ஷீஷ் மஹால் (கண்ணாடி அரண்மனை) ஆகியவை மிகவும் பிரபலமான பகுதிகள்.

இப்போது சொகுசு விடுதிகளாக இருக்கும் பாரம்பரிய அரண்மனைகள் அனைத்தும் உலகில் உள்ள சுற்றுலா பயணிகளை கவரும் சிறப்பம்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளன.

(Source: Native Planet)

இதையும் படியுங்கள்:
சிதிலமடையும் ஆரணியின் இரண்டு அரண்மனைகள்... தமிழக அரசு புனரமைக்குமா?
7 Indian Palace

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com