சித்திரக்கதை (COMICS) தமிழுக்கு வந்த கதை!

Tamil comics
Tamil comics
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

வரைகதை அல்லது சித்திரக்கதை (Comics) என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு, அக்கதையின் கதைப்பாத்திரங்களுக்கிடையான உரையாடல்கள் பெட்டிகளில் அல்லது ஊதுபைகளில் (balloons) தரப்படும். இக்கதை ஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும். தமிழில் வரைகதை அல்லது படக்கதை என்று சொல்லப்பட்டாலும், காமிக்ஸ் (Comics) என்ற ஆங்கில சொல்லைத் தமிழ்படுத்திப் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆங்கில மொழியில் 'காமிக்ஸ்' (Comics) என்ற வார்த்தை நகைச்சுவை என்ற பொருளைத் தருகிறது. இது ஆரம்பகால அமெரிக்க பத்திரிகைகளில் அதிக ஆதிக்கம் செலுத்தியது. 'வரைகதைப் புத்தகம்' என்ற சொல், குழப்பமான வரலாற்றைப் பெற்றுள்ளது. வரைகதை புத்தகங்கள் பெரும்பாலும் நகைச்சுவையானதாக இல்லை. இவை வழக்கமான புத்தகங்களோ அல்லது பருவ வெளியீடுகளோ அல்ல. 

வரைகதைகள், ஜப்பானீய மொழியில், மங்கா (manga) என்றும், பிரஞ்சு மற்றும் பெல்ஜியன் வரைகதை பந்தேஸ் டெஸ்ஸினீஸ் (Bandes Dessinées - BDs) அல்லது Franco-Belgian Comics என்றும் அழைக்கப்படுகின்றன. வேறுபட்ட பண்பாடுகளில், அவரவர்களின் மொழிகளில் வெவ்வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலும், 'காமிக்ஸ்' எனும் ஆங்கில வார்த்தை அனைவராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகள் வரைகதைத் துறையில் வெவ்வேறு பாதைகளைக் கொண்டுள்ளன. ஐரோப்பியர்களைப் பொருத்தமட்டில், 1827 ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டின் ரோடால்ஃப் டாப்ஃபெர் (Rodolphe Töpffer) வரைகதைகளைத் துவக்கி வைத்தார். 1890 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ரிச்சர்டு எஃப் அவுட்கால்ட் (Richard F. Outcault) வெளியிட்ட 'மஞ்சள் குழந்தை' எனும் செய்தித்தாள், அமெரிக்க வரைகதைத் துறையின் அடித்தளமாகும். இருப்பினும், பல அமெரிக்கர்கள், ரோடால்ஃப் டாப்ஃபெர் தான் முன்னோடி என அங்கீகரிக்கின்றனர். 

ஜப்பான் நாட்டு நையாண்டி கார்ட்டூன்களும், வரைகதைகளும், நீண்ட வரலாற்றைப் பெற்றுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யுகியோ-இ (ukiyo-e) கலையின், ஜப்பானிய வரைகலைஞர் ஒக்குசாய், கேலிச்சித்திரங்களையும், வரைகதைகளையும் பிரபலப்படுத்தினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின், நவீன ஜப்பானிய வரைகதைகள், செழுமையுற்று தழைத்தோங்கத் தொடங்கின. ஒசாமு தெசூகா வளமிக்க வரைகதைகளை, உருவாக்கினார். 

1956 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் ஜீமந்தார் மகன் என்ற சித்திரக்கதை வெளிவந்தது. இதுவே தமிழ் பத்திரிகையில் வெளிவந்த முதல் சித்திரைக்கதையாகும். 1970 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டின் முற்பகுதி வரையிலான காலத்தை, தமிழ் வரைகதைகளின் பொற்காலம் என்கின்றனர். இக்காலத்தில் லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் (1984-1995), வாண்டுமாமா சித்திரக் கதைகள் உட்பட பல தமிழ் வரைகதை இதழ்கள் வெளிவந்தன. அம்புலிமாமா, பாலமித்திரா, கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களிலும் வரைகதைகள் வெளிவந்தன. 

துப்பறியும் கதைகள், வெளிக்கிரகக் கதைகள், குதிரை வீரர்- செவ்விந்தியர் கதைகள் ஆகியவை தமிழில் பெரிதும் வெளி வந்தன. வாண்டுமாமாவின் தமிழ் சித்திரக்கதைகள், பூந்தளிர் (சித்திரக்கதை), தமிழ்வாணன் சித்திரக் கதைகள் ஆகியவை தமிழில், தமிழ்ச் சூழலுடன் தொடர்பான பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் கொண்டு வரையப்பட்டு வெளியாகின. தமிழ்நாட்டில் இருந்து ஆக்கப்பட்ட வரைகதைகள் தமிழ்ச் சூழலில் இருந்து கதைகளைப் பெற்றன. எழுத்தாளர் கல்கி எழுதி, பெரும் வரவேற்பைப் பெற்ற மோகினித் தீவு புதினத்தின் சித்திரக்கதை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. வாண்டுமாமாவின் கதைகளும் தமிழ் சிறுவர்களை, அல்லது கதா பாத்திரங்களைக் கொண்டவைகளே.

இதையும் படியுங்கள்:
சிதிலமடையும் ஆரணியின் இரண்டு அரண்மனைகள்... தமிழக அரசு புனரமைக்குமா?
Tamil comics

1990 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றின் வருகையால், தமிழ் வரைகதைகள் மட்டுமின்றி, இதழ்கள் வாசிப்பு பழக்கம் பெருமளவில் குறைந்து போயின. தமிழில் வெளியான பல வரைகதை இதழ்கள் நின்று போயின. தமிழில் வாசிப்பதைத் தவிர்த்து, ஆங்கில மொழியில் வாசிக்கும் வழக்கம் பெருகியதும், இதழ்கள் விற்பனை குறைய முக்கிய காரணம் எனலாம்.

அதன் பின்னர், 2015 ஆம் ஆண்டின் காலப் பகுதியில் எண்ணிம வரைகதைகளும், வரைகலைப் புதினங்களும் தமிழில் வெளிவரத் தொடங்கின. சிவப்புக்கல் மூக்குத்தி தமிழில் வெளிவந்த முதல் எண்ணிம வரைகதைப் புதினமாக அறியப்படுகின்றது. விகடன் வெளியிட்ட சந்திரஹாசம் வரைகலைப் புதினம் புத்தகக் கண்காட்சிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

logo
Kalki Online
kalkionline.com