கிருமி நாசினி தெரியும்! ஆனால் இந்த நாசினி அது அல்ல!

Meditation
Meditation
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

சில்லா-நாசினி (Chilla-Nashini) என்பது தன்னை அறிவதற்கான சமயம் சார்ந்த ஒரு சுய பரிசோதனை நடைமுறையாகும். இந்திய மரபிலும் பாரசீக மரபிலும், சில்லா- நாசினி முறை வழக்கத்திலிருக்கிறது. 'சில்லா' எனும் பாரசீக மொழிச் சொல்லுக்குத் தமிழில் நாற்பது என்று பொருள். இதே போல் 'நாசினி' எனும் பாரசீகச் சொல் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கும் நபரைக் குறிக்கின்றது. அதாவது, தியானத்தின் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்தி, நாற்பது நாட்கள் உணவு உட்கொள்ளாமல் அமைதியாக இருப்பதை சில்லா-நாசினி என்று குறிப்பிடுகின்றனர்.

சில்லா-நாசினி முறையைக் கடைப்பிடிப்பவர்கள் இதை முழுமையாகச் செய்து முடிக்காவிட்டால், அவர்களுக்கு மரணமோ, மனநிலைப் பிறழ்வோ ஏற்படும் என்கிற நம்பிக்கை இந்திய மற்றும் பாரசீக மரபிலும் இருந்திருக்கிறது. இந்நடைமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் அடையும் இறுதி நிலையானது, இதைக் கடைப்பிடிப்பவரைக் கொண்டும், கடைப்பிடிக்கும் முறைகளைக் கொண்டும் அமையும் என்பதும் கூடுதல் நம்பிக்கையாகும்.

சில்லா-நாசினி கடைப்பிடிக்கும் வழிமுறை மிகக் கடுமையானது என்றும், இதனை மேற்கொள்பவர்கள் தனது கையால் தரையில் ரு வட்டம் வரைந்து, அவ்வட்டத்தினுள் நாற்பது நாட்கள் வரை உணவு அருந்தாமலும், உறக்கமின்றியும் இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் வரைந்த வட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது. இது சூஃபி மரபிலும், இந்து சமய வேதாந்த மரபிலும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
விமான ஓட்டிகளாக மிளிரும் இந்தியத் தாரகைகள்!
Meditation

சில்லா-நாசினி எனும் முறையைப் பின்பற்றி இசைக் கலைஞர்கள் ஒரு கடுமையான பயிற்சியைச் செய்வதுண்டு. இந்தப் பயிற்சியில் மூடிய அறைக்குள் இசைக்கலைஞர் நாற்பது நாட்கள் தனது இசைக்கருவியை மீட்டியபடி அமர்ந்திருப்பார். இந்த நாற்பது நாட்களும் வெளியுலகுக்குத் தொடர்பின்றி, மிகக் குறைந்த அளவு உணவை மட்டுமே உண்டு வாழ்வர். இந்த நாற்பது நாட்களிலும் தூங்கி விடாமல் இருப்பதற்காக, இசைக்கலைஞர் தனது முடியைச் சுவருடன் அல்லது கூரையுடன் கட்டி வைத்திருப்பர். இப்பயிற்சி மிக உயர்ந்த திறனுடைய இசைக் கலைஞர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

வரலாற்றில் பதினான்காம் நூற்றாண்டின் சுய வரலாற்று நூல்களில் சில்லா-நாசினியை மேற்கொண்டவர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

சவ்தாத் இஸ்மைலோவா (Saodat Ismailova) என்கிற திரைப்பட இயக்குநர் இயக்கிய, உஸ்பெக்கிஸ்தான் நாட்டுத் திரைப்படம் ஒன்றின் பெயர் சில்லா. 88 நிமிடங்கள் திரையில் ஓடும் இத்திரைப்படத்தின் நாயகியான பதின்ம வயதுப் பெண் திடீரென யாரிடமும் பேசாமல் 40 நாட்கள் மெளனமாக இருப்பதே இத்திரைப்படத்தின் கருவாகும். பெண்களின் மீதான மதம் மற்றும் நம்பிக்கைகளின் தாக்கத்தை பற்றிய இத்திரைப்படம், நான்கு தலைமுறைப் பெண்களின் வாழ்வையும் பேசுகிறது. இத்திரைப்படம் பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பரிசுகளைப் பெற்றது. பன்னாட்டு அளவில் இத்திரைப்படம் மௌனத்தின் 40 நாட்கள் (40 Days of Silence) என்றே அறியப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com