சீனாவில் இல்லாத சீனா கொட்டாரம்! பின் எங்குள்ளது?

Cheena Kottaram
Cheena Kottaram
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

திருவாங்கூர் மன்னராக இருந்த ஸ்ரீ முலாம் திருநாள் ராம வர்மாவின் ஓய்வுக்காக 1904 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஓய்வு இல்லத்தை, சீனா கொட்டாரம் (Cheena Kottaram) என்று அழைக்கின்றனர். பண்டைய சீனக் கட்டிடங்களின் கட்டடக் கலைப்பாணியைக் கொண்டு அமைந்திருந்ததால் இந்த பெயர். இங்கு கொட்டாரம் என்பது அரண்மனை என்று பொருள் தரும். 

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர், திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் வணிகத் தலைநகராக கொல்லம் இருந்தது. திருவிதாங்கூர் - மலபார் கடற்கரைப் பகுதியில் அதிக அளவிலான வணிக மற்றும் வணிகம் சார்ந்த நடவடிக்கைகளைக் கொண்ட நகரமாக கொல்லம் இருந்திருக்கிறது. மேலும், கொல்லம் துறைமுகத்தின் வழியாக அதிக அளவிலான ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கொல்லம் நகரத்தில் பல அரண்மனைகள் இருந்ததால், கொல்லம் நகரமானது அரண்மனை நகரம் என்றே அழைக்கப்பட்டது.

திருவிதாங்கூர் - மலபார் கடற்கரையில் அமைந்த ஒரே ஒரு விமான நிலையம் கொல்லம் நகரில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில், திருவனந்தபுரத்திற்கு ரயில் இணைப்போ, விமான இணைப்போ இல்லை. திருவாங்கூர் மன்னர்கள் கொல்லத்திலிருந்து பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதற்காக அவர்கள் கொல்லம் தொடருந்து நிலையத்திற்கு அருகில் சீனா கொட்டாரம் எனப்படுகின்ற இந்த அரண்மனையைக் கட்டியுள்ளனர்.

சீனா கொட்டாராமின் கட்டிடக்கலை இந்தோ - சரசெனிக் பாணியில் அமைந்ததாகும். இந்த பாணியானது பொதுவாக இந்திய கட்டிடக்கலை மற்றும் ஐரோப்பிய, இஸ்லாமிய மற்றும் மூரிஷ் கட்டிடக்கலைகளின் ஒன்று சேர்ந்த ஒரு கலவையாகும். சீனா கொட்டாரத்தை வெளியில் இருந்து பார்ப்பதற்கு இரட்டை மாடிக் கட்டிடம் போல் தோன்றினாலும், இது உண்மையில் ஒற்றை மாடியினைக் கொண்டே அமைந்துள்ளது. இந்த ஓய்வு இல்லத்தில் ஏழு அறைகள் அமைந்துள்ளன. முன் புறத்திலும் கட்டிடத்தின் பின்புறத்திலும் வராண்டாக்கள் உள்ளன. தெற்குப் பக்கத்தில் இருக்கும் தாழ்வாரப்பகுதியானது மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளது. 

அங்கிருந்து கொல்லம் போக்குவரத்திற்கான பாலத்தினைக் காணமுடியும். வடக்குப் புறத்தில், இப்போது ஒரே நுழைவாயில் உள்ளது. உள்ளேச் செல்லவும் வெளியே வருவதற்கும் அந்தப் பாதை பயன்படுத்தப்படுகிறது. அங்கே உள்ள ஒரு சிறிய தளத்தில் இருந்து மகாராஜா தனது காரில் ஏறுகின்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. அந்தப் பாதை தொடருந்து நிலையத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.  

இதையும் படியுங்கள்:
அமெரிக்க பாலைவனத்தில் நடைபெறும் எரியும் மனிதன் திருவிழா தெரியுமா?
Cheena Kottaram

மாளிகையின் நடுவில் நேர்த்தியாக அமைந்துள்ள கோதிக் வளைவுகள் உள்ளன. அனைத்துப் புறங்களிலும் அலுமினியச் சட்டங்களில் படிந்த கண்ணாடி அமைப்புகளைக் கொண்டு உள்ளன. அழகான கண்ணாடிச் சுவரோவியங்கள், வெனிஸ் மாடி ஓடுகள், விண்டேஜ் கேரளா பாணியில் அமைந்த மரச் செதுக்குதல் மற்றும் கூரைகளுக்கு தனித்துவமான டிராகன் போன்ற மர அமைப்புகள் இதன் சிறப்பான அம்சங்களாகும். திருவிதாங்கூரின் சின்னமான சங்கு கிரானைட் அனைத்துப் பக்கங்களிலும் சுவர்களில் காணப்படுகின்றன.

சீனா கொட்டாராம், 'தேசிய மரபுவழி நினைவுச் சின்னம்' என்ற அங்கீகாரத்தை இன்னும் பெறவில்லை.

logo
Kalki Online
kalkionline.com