சிவப்புதான் சீனாவுக்கு பிடித்த கலரு!

Paper cutting art in China
Paper cutting art in China
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

சீனாவில் காகிதங்கள் எப்போதும் அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கின்றன.

சீனாவின் காகித வெட்டுக் கலை (Chinese Paper Cutting) என்பது, சீனப் பண்பாட்டின் மரபு வழியிலான நாட்டுப்புற கலைகளில் ஒன்றாக உள்ளது.

சீனாவில் உள்ள கிழக்கு ஹான் வம்சத்தைச் சேர்ந்த சாய் லுன் என்பவரால் முதலில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் காகித வெட்டுக் கலை, இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று கருதப்படுகிறது. 

காகிதம் மிகவும் மலிவானதாக மாறியதால், காகித வெட்டுதல் சீன நாட்டுப்புற கலையின் மிக முக்கியமான வகைகளில் ஒன்றாக மாறியது. பின்னர், இந்தக் கலை வடிவம் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. வெவ்வேறு பகுதிகள் தங்கள் சொந்தப் பண்பாட்டுப் பாணியை ஏற்றுக் கொண்டன.

இக்கலை வடிவங்கள் பெரும்பான்மையாக, கதவுகள் மற்றும் ஜன்னல்களை அலங்கரிக்கப் பயன்படுவதால், அவை சில நேரங்களில் சுங் ஹு, ஜன்னல் பூக்கள் அல்லது சாளர காகித வெட்டுக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. மக்கள் காகிதக் கட்டைகளை ஜன்னல்களின் வெளிப்புறத்தில் ஒட்டினர். எனவே, வெளியே இருந்து வரும் வெளிச்சம் காகித வடிவமைபின் எதிர்மறை இடத்தின் வழியாக வீட்டினுள்ளே விழுகிறது. 

காகித வெட்டு என்பது சீனாவின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும். இதைப் புவியியல் வழியாக, தெற்கு மற்றும் வடக்குப் பாணியாகப் பிரிக்கலாம். தெற்குப் பாணி, சியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்ஜோ மற்றும் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள லெக்கிங்கின் படைப்புகளால் குறிப்பிடப்படுகிறது. இதில் தனித்துவமான மற்றும் அழகான வடிவமைப்புகள், நேர்த்தியான செதுக்குதல் மற்றும் சுவாரசியமான வடிவங்கள் உள்ளன.

சீனக் காகித வெட்டுக் கலை செய்முறைக்கு இரண்டு வழிகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று கத்தரிக்கோலையும், மற்றொன்று கத்திகளையும் பயன்படுத்திக் காகிதத்தை வெட்டும் முறையாகும்.

இதையும் படியுங்கள்:
இன்றுவரை ஒரு ரயில் நிலையம் கூட இல்லாத இந்திய மாநிலம்! நிஜமாகவா?
Paper cutting art in China

கத்தரிக்கோல் முறையில், பல காகிதத் துண்டுகள் (இரண்டு முதல் எட்டு எண்ணிக்கை வரை) ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. பின்னர் கூர்மையானக் கத்தரிக்கோலால் வெட்டப்படுகிறது.

கொழுப்பு மற்றும் சாம்பல் கலவையை உள்ளடக்கிய ஒப்பீட்டளவில் மென்மையான அஸ்திவாரத்தில் பல அடுக்குக் காகிதங்களை வைப்பதன் மூலம் கத்தி வெட்டல் வடிவமைக்கப்படுகிறது. ஒரு மாதிரியைப் பின்பற்றி, கலைஞர் ஒரு கூர்மையான கத்தியால் காகிதத்தில் மையக்கருத்தை வெட்டுகிறார். இது பொதுவாக செங்குத்தாக வைக்கப்படுகிறது. திறமையான கைவினைஞர்கள் கூட வெவ்வேறு வரைபடங்களை இந்த முறையில் செய்கின்றனர்.

வடக்குப் பாணி, முக்கியமாக ஏபெய் மாகாணத்தில் உள்ள யூக்ஸியன் மற்றும் ஃபெங்கிங் மற்றும் வடக்கு சேன்ஸ்கி, படைப்புகளால் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. இது, மிகைப்படுத்தப்பட்ட வடிவங்கள், வீரியம், தெளிவான சித்தரிப்புகள் மற்றும் மாறுபட்ட வடிவங்களைக் கொண்டுள்ளது.

சாளரக் காகித வெட்டுக்களில் மிகவும் பிரபலமானது பாரம்பரிய சீன கதைகளை அடிப்படையாகக் கொண்டது ஆகும். பெரும்பாலான நுகர்வோர்கள் விவசாயிகள் என்பதால், இதன் விலை குறைவாக உள்ளது. இதில், பொதுவாக விவசாயம், நூற்பு, மீன்பிடித்தல் மற்றும் கோழி வளர்ப்பை விவரிக்கும் கதைகள் காணப்படுகிறது.

சீனாவில் வழக்கமாக, கலைப்படைப்புகள் சிவப்புக் காகிதத்தால் செய்யப்படுகின்றன. ஏனெனில், சிவப்பு என்பது சீனப் பண்பாட்டில் பண்டிகைகள் மற்றும் மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. ஆனால், மற்ற வண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, காகிதம் வெட்டும் கலைப்படைப்புகள் வசந்த விழா, திருமணங்கள் மற்றும் பிரசவம் போன்ற பண்டிகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று, காகித வெட்டல் முக்கியமான அலங்காரப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. அவை, வீடுகளில் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள், நெடுவரிசைகள், கண்ணாடிகள், விளக்குகளில் அலங்காரமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் அவை பரிசுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அல்லது பரிசுகளாக வழங்கப்படுகின்றன.

சீனாவில், நுழைவாயில்களில் அல்லது அதற்கு அருகில் ஒட்டப்பட்ட காகித வடிவமைப்புகள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com