நாணயங்களை எண்ண பயன்படுத்தப்பட்ட காசு பலகை (Coin Board) அல்லது பண பலகை (Pana Palakai)! உங்க வீட்டில் இருக்கா?

Coin Board
Coin Board
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இன்று ரூபாயை எண்ணுவதற்கு மின்னணுச் சாதனங்கள் வந்துவிட்டன என்று பெருமை கொள்கிறோம். ஆனால், 19 ஆம் நூற்றாண்டுக் காலத்திலேயே, திருவாங்கூர் சமஸ்தானத்தில் பயன்பாட்டிலிருந்த காசுகளை எண்ணுவதற்கு என்று ஒரு மரப்பலகை இருந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அதன் பெயர் காசு பலகை (Coin Board).

காசு பலகை (Coin Board) அல்லது பண பலகை (Pana Palakas) என்பது நாணயங்களை எண்ணுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மரப் பலகையாகும். மரப்பலகையில் 50, 100 என காசுகளின் அளவிலான குழிகள் தேவைக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும். ஒரு முறை அக்குழிகளில் காசுகளை இட்ட பிறகு 50 காசுகள், 100 காசுகள் என ஒரு சேர எண்ண ஏதுவாக இந்தப் பலகைகள் பயன்படுத்தப்பட்டன.

காசு குவியல்களுக்குள் இந்தக் காசு பலகையை விட்டு, சலிப்பது போல காசுகளைப் பலகையின் மேற்புறத்தில் தடவினால் குழிகளுக்குள் காசுகள் நிரம்பிவிடும். இவ்வாறு நிரம்பும் போது விடுபட்ட சில குழிகளில் காசுகளை நிரப்பி முழுமையான எண்ணிக்கையை விரைவாகவும், சரியாகவும் கணக்கிட இந்தக் காசு பலகை பயன்பட்டிருக்கிறது. வெவ்வேறு அளவுள்ள நாணயங்களுக்கு தனித்தனி காசு பலகைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதையும் படியுங்கள்:
அட, காசு வேஸ்ட் பண்ணாதீங்க… வீட்டிலேயே Tan Removal கிரீம் செய்யலாம்! 
Coin Board

19 ஆம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பண மதிப்பில் ஒரு ரூபாய் பணம் என்பது 28 சக்ரம் நாணயங்கள் இணைந்ததாகும். இந்நாணயங்களை எண்ணுவதற்காக 28 குழிகள் கொண்ட காசு பலகைகள் உருவாக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் காசு பலகைகள் செம்மரங்களால் ஆனவை. இதனை அளவு பலகை என்று அழைத்துள்ளனர். திருவிதாங்கூர் அரசு காசுகள் மிகச் சிறியதாக இருந்துள்ளன. எனவே, அவற்றை துல்லியமாகக் கணக்கிட காசு பலகைகள் உதவியிருக்கின்றன.

திருவாங்கூர் சமஸ்தானத்தில்,

28 குழிகள் கொண்ட காசு பலகை சக்ர நாணயங்களை எண்ணுவதற்காகவும்,

100 குழிகளைக் கொண்ட காசு பலகை பணம் நாணயங்களை எண்ணுவதற்காகவும்,

300 குழிகளை கொண்ட காசு பலகை காசு நாணயங்களை எண்ணுவதற்காகவும்,

400 குழிகளை கொண்ட காசு பலகை வெள்ளி சக்ர நாணயங்களை எண்ணவும்

பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
மறுசந்திப்புகள் - முதியவர்களின் மிக மகிழ்ச்சியான தருணங்கள்!
Coin Board

இந்தக் காசு பலகையில் திருவாங்கூர் ரூபாயை பிரிட்டிஷ் ரூபாயாக மாற்றுவதற்கான மாற்று அட்டவணையும் பொறிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ரூபாய் என்பது திருவாங்கூர் ரூபாயை விட அரை சக்ரம் அதிகம், அதாவது 28 சக்ரம் என்பது ஒரு திருவிதாங்கூர் ரூபாய்க்கு சமம், 28 ½ சக்ரம் என்பது பிரிட்டிஷ் ஒரு ரூபாய். திருவிதாங்கூருக்கு ஒரு ரூபாய் நாணயம் இல்லாததால் திருவாங்கூர் 1 ரூபாய் என்பது ஒரு கருத்து மட்டுமே.

கேரள மாநிலம், திருவனந்தபுரம், நந்தன்கோடு, கனகா நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நேப்பியர் அருங்காட்சியகத்தில் இந்த காசு பலகை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com