மனித குலத்தையே கூண்டோடு அழிக்கப் பார்த்த கொடூரமான நோய்கள்... இதோ முழு பின்னணி!

Deadly Plagues
Deadly Plagues
Published on

ரலாறு என்றாலே மாமன்னர்களின் போர்களும், அவர்கள் கட்டிய பிரம்மாண்டமான கோட்டைகளும் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், மனித குலத்தின் சரித்திரத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றி அமைத்த பெருமை கண்ணுக்குத் தெரியாத சில கிருமிகளுக்கே சேரும். ஆம், கத்தியின்றி ரத்தமின்றி பல சாம்ராஜ்யங்களை வீழ்த்திய, கோடிக்கணக்கான மக்களை பலிவாங்கிய கொடூரமான தொற்றுநோய்கள் பல நூறு ஆண்டுகளாக உலகை உலுக்கி எடுத்திருக்கின்றன. 

சமீபத்தில் வந்த கொரோனா பெருந்தொற்றுக்கே நாம் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிப் போய்விட்டோம். ஆனால், இதைவிட பல மடங்கு பயங்கரமான 7 வரலாற்று நோய் தொற்றுகள், உலகையே சின்னப் பின்னம் ஆக்கின.  

1. ஜஸ்டினியன் பிளேக் (Plague of Justinian)!

ஆறாம் நூற்றாண்டில் பைசண்டைன் பேரரசை ஆட்டம் காண வைத்த நோய் இது. தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மடிந்து போனார்கள். இந்த நோயின் விளைவாக அந்தப் பெரிய சாம்ராஜ்யம் தனது பலத்தை இழந்தது மட்டுமில்லாமல், உலக வரலாற்றின் போக்கையே இது ஒட்டுமொத்தமாக மாற்றி அமைத்தது.

2. கருப்பு மரணம் (The Black Death)!

பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவைச் சுடுகாடாக மாற்றிய ஒரு நோய்தான் இந்த பிளேக். எலிகள் மூலமாக பரவிய இந்த கொடூர நோய், வெறும் சில ஆண்டுகளில் ஐரோப்பாவின் மக்கள் தொகையில் பாதியை அப்படியே துடைத்து எறிந்தது. தெருக்களில் எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள் கிடந்ததால் இதை 'பிளாக் டெத்' என்று பயத்தோடு அழைத்தார்கள்.

3. பெரியம்மை (Smallpox)!

ஐரோப்பியர்கள் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டு பிடித்து அங்கு சென்றபோது, தங்களோடு சேர்த்து இந்த பெரியம்மை நோயையும் இலவசமாக எடுத்துச் சென்றார்கள். அந்தப் புதிய நிலப்பரப்பில் இருந்த பூர்வகுடி மக்களுக்கு இந்த நோயை எதிர்க்கும் நோய் எதிர்ப்புச் சக்தி துளி கூட இல்லை. இதன் விளைவாக, கோடிக்கணக்கான பூர்வகுடிகள் இந்த ஒற்றை நோயால் பரிதாபமாக அழிந்து போனார்கள்.

4. அன்டோனைன் பிளேக் (Antonine Plague)!

ரோமானியப் பேரரசை கி.பி இரண்டாம் நூற்றாண்டில் உலுக்கிய மிகப்பெரிய தொற்றுநோய் இது. பல நாடுகளுக்குப் போருக்குச் சென்று திரும்பிய ராணுவ வீரர்கள் மூலமாக இது நாடு முழுவதும் பரவியதாகக் கூறப்படுகிறது. பல மாபெரும் ரோமானிய மன்னர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் இதில் பரிதாபமாக பலியாகினர்.

இதையும் படியுங்கள்:
முதல் மரியாதை: காதல் - சுகமாய் வலிக்கும் காயம்!
Deadly Plagues

5. ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish Flu)!

முதல் உலகப்போர் முடிந்து மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், 1918-ல் இந்த நோய் விஸ்வரூபம் எடுத்தது. உலகப்போர் காவு வாங்கிய உயிர்களை விட, இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ பலிவாங்கிய உயிர்கள் பல மடங்கு அதிகம். நவீன மருத்துவம் வளராத அந்தக் காலத்தில் இது மனிதகுலத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது.

6. காலரா பெருந்தொற்றுகள் (Cholera Pandemics)!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அசுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை மூலமாக உலகம் முழுவதும் பரவிய ஒரு கொடிய நோய் காலரா. இந்தியா உட்பட பல நாடுகளில் இது பல லட்சக்கணக்கான உயிர்களை மிக எளிதாகப் பலிவாங்கியது.

7. ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் (HIV/AIDS)!

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இன்று வரை உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு நவீன காலப் பெருந்தொற்று இது. பல கோடிக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த இந்த நோய்க்கு இன்று வரை முழுமையான தீர்வு இல்லை என்றாலும், மருத்துவ வளர்ச்சியால் இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது.

இதையும் படியுங்கள்:
வானத்தில் நடக்கும் மனிதர்கள்: கொக்கலிக்கட்டை ஆட்டத்தின் பின்னணியும் சிறப்புகளும்!
Deadly Plagues

மனிதர்கள் என்னதான் தொழில்நுட்பத்திலும் ஆயுதங்களிலும் அசுர வளர்ச்சி அடைந்தாலும், இயற்கையின் முன்னால் நாம் எப்போதுமே ஒரு சிறிய புள்ளிதான் என்பதை இந்த நோய்கள் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளன. அறிவியல் மற்றும் மருத்துவத் துறையின் அபார வளர்ச்சியால் இன்று நாம் பல கொடிய நோய்களை வென்றுவிட்டோம். இருந்தாலும், எதிர்காலத்தில் வரப்போகும் புதிய சவால்களை எதிர்கொள்ள நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com