யானையின் நெற்றிப்பட்டம்!

Elephant Nettipattam
Elephant Nettipattam
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நெற்றிப் பட்டம் என்பது கோயில் யானைகளை அலங்கரிக்கக் கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் ஓர் ஆபரணம். இதனைத் தமிழில் ‘முகப்படாம்’ என்கின்றனர். யானைகளின் நெற்றியில் அணிவிக்கப்படும் இந்த நெற்றிப்பட்டம் தங்கம் மற்றும் செப்பு ஆகிய உலோகங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. கேரளப் பண்பாட்டில் ஒருங்கிணைந்த ஒன்றாகக் கருதப்படும் நெற்றிப்பட்டமும், முத்துக்கூடும் புத்த சமயத்தின் பங்களிப்பு என்கின்றனர்.

பெளத்த சமயத்தில், சிறப்பு மரியாதையினைக் கொடுக்க, ஆலமர இலை ஒன்றினை நெற்றியில் வைத்திருப்பார்கள். இது 'பட்டம்' கொடுப்பதாக அறியப்பட்டது. கோயில் திருவிழாக்களின் போது பயன்படுத்தப்படும் யானைகள் ஆலமர இலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் இலைகளுக்குப் பதில் ஆபரணமாக மாறியது. இதற்கு நெற்றிப்பட்டம் என்ற புதிய பெயரும் வந்தது என்கின்றனர். நெட்டிப்பட்டம் என்ற சொல் பாலி மொழியில் இருந்து வந்தது. அதாவது 'இலை' என்று பொருள் தரக்கூடியது என்பர். கேரளாவின் மலையாள மொழியில் நெற்றிப்பட்டை என்றிருந்து, அதிலிருந்து நெற்றிப்பட்டம் என்றாகி விட்டது என்றும் சிலர் சொல்கின்றனர்.

யானையின் நெற்றிப்பட்டங்களில் சூரல்போலி, நாகபதம், வென்டோட் என பல்வேறு வகையான நெற்றிப்பட்டங்கள் உள்ளன. இவையனைத்தையும் பொதுவாக நெற்றிப்பட்டம் என்று அழைத்தாலும், கோயில்களில் தலைகெத்து என்றே அழைக்கப்படுகிறது. இந்து சமயப் புராணங்களில் இந்திரனின் போர் யானையான ஐராவதம் எனும் வெள்ளை யானைக்கு, பிரம்மன் முதன் முதலில் நெற்றியில் அலங்கார அணிகலை வடிவமைத்து அணிவித்திருக்கிறார் என்கிற குறிப்பு காணப்படுகிறது என்கின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் எனுமிடத்திலேயே நெற்றிப்பட்டம் அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது. கேரளாவிலுள்ள திரிப்பூணித்துறை எனுமிடத்திலும் நெற்றிப்பட்டம் தயாரிக்கப்படுகிறது. உலோக பந்துகளைச் சிறப்பு வடிவங்களில் பருத்தி மற்றும் சணல் சாக்குகளில் தைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. பெரும்பான்மையாக செப்பு (தாமிரம்) பயன்படுத்தியேத் தயாரிக்கப்படுகிறது. பித்தளை அரிதாக இருந்தாலும் பயன்படுத்தப்படுகிறது. செம்பு அல்லது பித்தளை பயன்படுத்தி தயார் செய்த பின்னர் மஞ்சள் பிரகாசத்திற்குத் தங்க முலாம் அல்லது வண்ணம் தீட்டப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் - காரணம் தெரியுமா?
Elephant Nettipattam

நெற்றிப்பட்டம் தயாரிப்பு: மூன்றரைக் கிலோ செம்பு, 3 சவரன் (24 கிராம்) தங்கம் ஆகியவை கலந்து ஒரு சாதாரணமான நெற்றிப்பட்டம் செய்யப்படுகிறது. ஒரு ஆபரணம் செய்யக் குறைந்தது 20 நாட்கள் ஆகும். நெற்றிப்பட்டத்தின் அளவு யானைக்கு யானை வேறுபடும். 9 லிருந்து 10 அடி உயரம் உள்ள யானைக்கு 60 அங்குலம் நீளம் உள்ள நெற்றிப்பட்டம், அதில் குறைந்தது 11 சந்திரக்கலா (பிறைநிலா) இருக்க வேண்டும் என்கின்றனர். மேலும் இதில், கூம்பன் கிண்ணம் என்று அழைக்கப்படும் ஒரு கூர்மையான பொருள், 2 சுற்று ஒன்று, 37 அரை பந்துகள், 40 முழு பந்துகள், 1 கலாஞ்சி மற்றும் 5000 சிறிய குமிழ்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு குமிழியும் பஞ்ச பூதங்கள், திரிமூர்த்திகள், நவக்கிரகங்கள், அஷ்ட வசுக்கள், சப்தரிஷிகள், மூலகணபதி போன்றவர்களைக் குறிப்பிடுகிறது. நெற்றிப் பட்டம் செழிப்பு, அமைதி மற்றும் ஆசீர்வாதத்தைத் தருகிறது என்று நம்பப்படுவதால், இது மங்களகரமான வேளைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com