பறக்கும் விளக்கு பார்த்ததுண்டா?

flying lantern
flying lantern
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

சீனா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படும் கொங்மிங் விளக்கு (Kongming lantern) எனும் ஒரு வகை விளக்கு பறக்கும் விளக்கு (Sky lantern) என்று சொல்லப்படுகிறது. உலகில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பறக்கும் பலூன் என்றும் இதனைக் கூறலாம். இவை வான மெழுகுவர்த்திகள் என்றும், நெருப்புப் பலூன்கள் என்றும், வான விளக்குகள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. சீனாவில் இவ்வகை விளக்குகள் சீனாவின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக இருக்கின்றன.

ஜ்ஹு கே லியாங் எனும் சீனப்பேரரசின் படைத்தளபதியால் கொங் மிங் விளக்குகள் எனப்படும் பறக்கும் விளக்குகள் கி. பி. 3 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விளக்குகள் போர்க் காலங்களில் தகவல்கள் பரிமாற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. சீனப் படைவீரர்கள் ஆபத்துக் காலங்களில் இவ்விளக்குகளைப் பறக்கவிடுவதன் மூலம் பல்வேறு செய்திகளை பறிமாறியுள்ளனர். ஒவ்வொரு வகையான செய்திக்கும் தனித்தனியே நிறத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இவ்விளக்குகள் எண்ணெய் காகிதம் என்று அழைக்கப்படும் மிக மெல்லிய காகிதத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மேலும் மூங்கில் வளையம், காயவைத்த தேங்காய் பருக்கு போன்றவை காங் மிங் விளக்குகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. தேங்காய் பருக்கு அவ்விளக்கு பறப்பதற்கான எரிபொருளாகப் பயன்படுகிறது. சில நேரங்களில் தேங்காய் பருக்குவிற்கு பதிலாக எரியும் தன்மையுடைய வேறு சில பொருட்களையும் பயன்படுத்துவார்கள்.

சீனா, தைவான் மற்றும் தாய்லாந்தில் வான விளக்குகள் பாரம்பரியமாக மூங்கில் சட்டத்தில் எண்ணெய் தடவிய அரிசிக் காகிதத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. சூடான காற்றின் ஆதாரம், ஒரு சிறிய மெழுகுவர்த்தி அல்லது மெழுகு எரியக்கூடிய பொருளால் ஆன எரிபொருள் கலமாக இருக்கின்றன. பிரேசில் மற்றும் மெக்சிகோவில், வான விளக்குகள் பாரம்பரியமாக மெல்லிய ஒளி ஊடுருவக்கூடிய, 'பட்டுக்காகிதம்' என்று அழைக்கப்படும் காகிதத்தின் பல திட்டுகளால் செய்யப்பட்டன.

இதையும் படியுங்கள்:
தஹி ஹண்டி போட்டியைப் பற்றி தெரியுமா?
flying lantern

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மரபு வழியிலான பல்வேறு விழாக்களில் இவ்விளக்குகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் இவ்விளக்குகள் பயன்பாட்டால் பெரும் தீ விபத்துகள் நிகழ்ந்து, உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. எனவே, இவ்விளக்குகள் பயன்படுத்துவதற்குப் பல இடங்களிலும் தடை விதிக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு முதல் வியட்நாம் முழுவதும் வான் விளக்குகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் வெளியிடுதல் தடை செய்யப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இவ்விளக்குகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளனர். பரவலான நெருப்பின் காரணமாக, தற்போது ஆசியாவின் பல பகுதிகளில் வான விளக்குகள் பறக்க அனுமதிக்கப்படுவதில்லை.

இவ்வகை விளக்குகளால் ஏற்படும் நெருப்புகளின் பாதிப்புகளால், மனிதர்களுக்கு மட்டுமில்லாது, காடுகளிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் பெரும் ஆபத்தானதாக இருக்கிறது என்பதால் இவ்வகை விளக்குகள் தடை செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான்.

logo
Kalki Online
kalkionline.com