பேயை விரட்ட ரத்தத்தை உறிஞ்சிய கொடூர சிகிச்சைகள்... மெடிக்கல் ஹிஸ்டரியின் ஷாக்கிங் உண்மைகள்!

historical medical theories
historical medical theories
Published on

ருத்துவத்துறை இப்போது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் நிலைமை அப்படி இல்லை. அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலகட்டத்தில், நோய்களை குணப்படுத்த மருத்துவர்கள் செய்த சில விஷயங்களை இப்போது கேட்டால் நமக்கு மயக்கமே வந்துவிடும். 

நோயை சரி செய்கிறேன் பேர்வழி என்று மனிதர்களை வைத்து எக்கச்சக்கமான கொடூரமான மற்றும் விசித்திரமான பரிசோதனைகளை செய்துள்ளார்கள். அப்படி வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட, கேட்கவே படு பயங்கரமான 5 விசித்திரமான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம் வாங்க!

வரலாற்றின் 5 விசித்திரமான மருத்துவ முறைகள்!

1. ரத்தம் வெளியேற்றுதல் (Bloodletting): உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும் கெட்ட ரத்தத்தை வெளியேற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்று அந்த காலத்தில் ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தது. இதற்காக நோயாளிகளின் நரம்புகளை வெட்டி ரத்தத்தை வெளியேற்றுவார்கள், அல்லது அட்டைகளை உடம்பில் விட்டு ரத்தத்தை உறிஞ்சச் சொல்வார்கள். காய்ச்சல் முதல் மனநோய் வரை அனைத்திற்கும் இதுதான் அவர்களின் முதல் சிகிச்சையாக இருந்தது.

2. மண்டையோட்டில் துளையிடுதல் (Trepanation): இன்றைய காலத்தில் மூளை அறுவை சிகிச்சை என்பது எவ்வளவு சிக்கலானது என்பது நமக்கு தெரியும். ஆனால் பழங்காலத்தில் யாருக்காவது தீராத தலைவலி அல்லது வலிப்பு நோய் வந்தால், அவர்களின் தலையில் உள்ள மண்டையோட்டில் எந்த ஒரு மயக்க மருந்தும் இல்லாமல் நேரடியாக ஒரு பெரிய துளையை போடுவார்கள். உடம்பில் இருக்கும் தீய ஆவிகள் அந்த துளை வழியாக வெளியேறிவிடும் என்று அவர்கள் மிக ஆழமாக நம்பினார்கள்.

3. அலைந்து திரியும் கர்ப்பப்பை (Wandering Womb): பண்டைய கிரேக்க மருத்துவர்கள் பெண்களின் உடற்கூறியல் பற்றி ஒரு மிக விசித்திரமான தியரியை வைத்திருந்தார்கள். பெண்களின் கர்ப்பப்பை அவர்களின் உடலுக்குள் ஒரு மிருகம் போல அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். அது தொண்டை பகுதிக்கு நகர்ந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதால்தான் பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் ஹிஸ்டீரியா போன்ற பிரச்சனைகள் வருகிறது என்று மிகவும் சீரியஸாக நம்பி அதற்கு ஏற்றார்போல வினோதமான சிகிச்சைகளை அளித்தார்கள்.

இதையும் படியுங்கள்:
விநாயகர் வழிபாடு: எந்தப் பொருளால் விநாயகர் செய்தால் என்ன பலன்?
historical medical theories

4. சாணத்தில் செய்த மருந்துகள் (Animal Dung Therapy): எகிப்து போன்ற பழங்கால நாகரிகங்களில், காயங்களை ஆற்றவும் நோய்களை குணப்படுத்தவும் முதலை, நாய், கழுதை போன்ற விலங்குகளின் சாணத்தை ஒரு பெரிய மருந்தாக பயன்படுத்தி வந்தார்கள். களிம்பு போல அந்த சாணத்தை காயங்களின் மேல் அப்படியே தடவி விடுவார்கள். இதனால் குணமாகும் நோய்களை விட, பாக்டீரியா தொற்றுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கைதான் பல மடங்கு அதிகமாக இருந்தது என்பதுதான் இதிலிருக்கும் மிகப்பெரிய சோகம்.

5. நான்கு திரவக் கோட்பாடு (Four Humors): மனித உடல் ரத்தம், கபம், மஞ்சள் பித்தம் மற்றும் கருப்பு பித்தம் ஆகிய நான்கு திரவங்களால் ஆனது என்ற ஒரு தியரி பல நூற்றாண்டுகளாக மருத்துவ உலகையே ஆட்டிப்படைத்தது. ஒருவருக்கு உடம்பில் எந்த பிரச்சனை வந்தாலும், இந்த நான்கு திரவங்களில் ஏதோ ஒன்றின் அளவு கூடிவிட்டது அல்லது குறைந்துவிட்டது என்று கணக்கு போட்டு, அதை சமன்படுத்த நோயாளிகளுக்கு கடுமையான பேதி மருந்துகளை கொடுப்பது அல்லது பட்டினி போடுவது போன்ற கொடூரமான வேலைகளை செய்தார்கள்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் போறீங்களா? அப்படின்னா இந்த 7 விஷயத்தை கண்டிப்பா செய்யாதீங்க!
historical medical theories

இந்த மருத்துவ முறைகளை எல்லாம் படிக்கும்போது, நாம் எவ்வளவு ஒரு பாதுகாப்பான, அதிநவீனமான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மிக தெளிவாக புரிகிறது. பழங்கால மனிதர்கள் நோயோடு போராடியதை விட, இந்த மாதிரி விசித்திரமான மருத்துவர்களிடம் இருந்து தப்பிக்கவே பாதி உயிரை விட்டிருப்பார்கள் போல.  நல்ல வேளையாக நாம் அந்த காலத்தில் பிறக்கவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com