தைப்பூசம் - 'புதிர் எடுத்தல்', 'புதிர் சமையல்', 'புதிர் விருந்து'! - இது என்ன புதிர்?

Riddle taking ceremony
Riddle taking ceremony
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

உழவர்கள் தம் வயலில் விளைந்த நெல்லை முதன் முதலில் சமைத்து உண்ணும் சடங்கு ‘புதிர் எடுத்தல்’ எனப்படுகிறது. இந்தியாவிலும், இலங்கையிலும் தைப்பூச நாளில் சில இடங்களில் 'புதிர் எடுத்தல்' நடைமுறையில் இருக்கின்றன. இருப்பினும், தற்போது பல இடங்களில் அறுவடையைத் தொடர்ந்து வரும் நாளில் புதிர் எடுத்தல் நடைபெறுகிறது.

இந்நாளில், ‘புதிர் சமையல்’ இறைவனுக்குப் படைக்கப்பட்டு ஏழைகளுக்கு உணவிட்ட பின் உண்ணும் வழக்கம் காணப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு அயலவர்களையும் உறவினர்களையும் அழைப்பர். குத்தகைக்கு வயல் எடுத்து விளைச்சல் செய்பவர்கள் அறுவடையின் பின் நில உடைமையாளருக்கு புதிர் நெல் வழங்குவர். இது தவிர, நெல் விளைச்சல் செய்யாத உறவினர்களுக்கும் புதிர் நெல் வழங்கும் வழக்கம் இருக்கின்றது. தமிழர்கள் வாழும் கிராமங்கள் சிலவற்றில் உழவு செய்யாதவர்களும் மரபுப்படி தம் வீட்டில் புதிர் எடுக்கும் வரை புது நெல்லை உண்ணாத வழக்கமும் உண்டு.

இதையும் படியுங்கள்:
தைப்பூசம் நைவேத்தியம் - திருப்பாகம் - பஞ்சாமிர்தம் - செய்வது எப்படி?
Riddle taking ceremony

இலங்கையில் தைப்பூச நாளன்றுதான் புதிர் எடுக்கும் விழா கடைப்பிடிக்கப்படுகிறது. தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து, வீடு வாசலைப் பெருக்கி, வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் போன்றவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று, ஞாயிறை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க, மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத்தலைவி பெற்று வழிபாட்டு அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி, அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய நண்பகலுணவு சமைக்கப்படுகிறது. சமைக்கப்பட்ட உணவினை அண்டை வீட்டிலிருப்பவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து விருந்தாகப் படைக்கின்றனர். இதற்கு ‘புதிர் விருந்து’ என்று பெயர்.

இந்தப் புதிர் எடுத்தல் விழா, இலங்கையில் பல்வேறு கோயில்களிலும் நடைபெறுகிறது. அறுவடை செய்யப்பெற்ற நெல் மற்றும் நெற்கதிர்கள் குவிக்கப்பட்டு சிறப்புப் பூசைகள் செய்யப்பெற்று, அந்த நெல் மற்றும் நெற்கதிர்கள் அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. கோயில்களில் பெறப்பட்ட நெல்லை வீட்டிற்கு எடுத்துச் சென்று ‘புதிர் சமையல்’ செய்து சாப்பிடுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com