இந்தியாவின் பெருமைமிகு வாகா எல்லையும் அதன் வரலாறும்!

வாகா எல்லை
வாகா எல்லை
Published on

மது நாட்டின் பெருமையாகக் கருதப்படுவது வாகா எல்லை. இந்த வாகா எல்லையின் பெருமை என்ன? இங்கு தினமும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

வாகா என்ற வார்த்தை இந்தியா மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்தியா தனது அமைதி பேச்சுவார்த்தையை பாகிஸ்தானுடன் நடத்தும்போதெல்லாம் வாகா வழியாகத்தான் பல நல்ல விஷயங்கள் நடைபெறுவது வழக்கம். மேலும், லாகூருக்கும் இந்தியாவுக்கும் பேருந்து சேவை கூட வாகா வழியாகத் தொடங்கி வைக்கப்பட்ட வரலாறு உண்டு. ஆனால், இப்போது இரு நாடுகளுக்கு இடையே அமைதிக்கான எந்தச் சூழலும் இல்லாதபோது வாகா எல்லையை பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரித்ஸர் நகருக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகருக்கும் இடையில் அமைத்துள்ள ஒரு சிறிய கிராமம்தான் வாகா. பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் இங்குள்ள எல்லையே வாகா எல்லையாகும். 1947ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனியாகப் பிரிக்கப்பட்டபோது கிழக்கு வாகா இந்தியாவுக்கும் மேற்கு வாகா பாகிஸ்தான் நாட்டுக்கும் என வகுக்கப்பட்டது. அதன்படியான ராட்கிளிஃப் கோடு இந்த கிராமத்தின் வழியாகச் செல்கின்றது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தனித்தனியாக பிரிய முடிவு செய்தபோது இரு நாட்டுக்கும் பொதுவான எல்லையை வகுப்பதில் இங்கிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞரான சிரில் ராட்கிளிஃப் முக்கிய பங்காற்றினார். அவர் நினைவாகவே இந்தக் கோடு ராட்கிளிப்ஃ கோடு எனப்படுகிறது. இந்த வாகா எல்லை இந்தியாவின் அம்ரித்ஸரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும் பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

வாகா எல்லை ராணுவ அணிவகுப்பு
வாகா எல்லை ராணுவ அணிவகுப்பு

இந்த எல்லையில் தினமும் இருநாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பை பார்ப்பதற்காக இருநாட்டு எல்லைகளிலும் ஏராளமான மக்கள் குவிவார்கள். தினமும் சூரிய அஸ்தமனத்துக்கு 2 மணி நேரம் முன்பாக இந்த அணிவகுப்பு தொடங்கும். இதில் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் கலந்துகொண்டு தங்களின் கம்பீரமான அணிவகுப்பை நடத்துவார்கள்.

அமைதி சின்னம்
அமைதி சின்னம்

இருநாட்டு எல்லையிலும் கூடியிருக்கும் மக்கள் தங்கள் நாட்டு வீரர்களின் அணிவகுப்பின்போது மகிழ்ச்சியாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் ஜெய்ஹிந்த் என்றும் கோஷமிட்டு அவர்களை உற்சாகப்படுத்துவார்கள்.

இதையும் படியுங்கள்:
பெண்களை அதிகம் பாதிக்கும் 'லூபஸ் நோய்' என்றால் என்ன தெரியுமா? ஜாக்கிரதை! 
வாகா எல்லை

அணிவகுப்பு முடிந்த பின்னர் தங்களது நாட்டின் கொடியை இரு நாட்டு வீரர்களும் கம்பத்தில் இருந்து இறக்குவார்கள். பின்னர் இரு நாட்டு வீரர்களும் பரஸ்பரமாகக் கைகுலுக்கிக் கொள்வார்கள்.

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாட எதிர்நோக்கிக் காத்திருக்கும் நமக்கு வாகா எல்லையை பற்றி அறிந்துகொள்வது அவசியம் ஆகும். மொழியால், இனத்தால், ஜாதியால் வேறுபட்டிருந்தாலும் இந்தியனாய் ஒன்றுபடுவோம். ஜெய்ஹிந்த்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com