மன்னர் சுவாதித் திருநாள் கட்டிய ‘குதிரை மாளிகை’: 122 சிரிக்கும் குதிரைகள் கொண்ட அரண்மனை!

Swathi Thirunal palace
Swathi Thirunal palace Img credit: The new indian express
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் 19 ஆம் நூற்றாண்டில் மன்னர் சுவாதித் திருநாள் பலராம வர்மா என்பவரால் ‘குதிர மாளிகா’ அல்லது ‘குதிரை மாளிகை’ (Kuthira Malika) கட்டப்பட்டது. பத்மநாபசுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள அரசக் கட்டிடங்களின் வளாகத்திலிருக்கும் பல கட்டிடங்களில் இந்த அரண்மனையும் ஒரு பகுதியாக இருக்கிறது.

தேக்கு மரம், ரோஸ்வுட், பளிங்கு மற்றும் கிரானைட் ஆகியவற்றைக் கொண்டு, கேரளக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கட்டிடம், அதிகாரப்பூர்வமாக ‘புத்தன் மாளிகை’ என்று அழைக்கப்படுகிறது. இக்கட்டிடத்தின் கூரைப்பகுதிக்குக் கீழே 122 சிரிக்கும் மரக்குதிரைகள் அமைந்திருப்பதன் காரணமாக இது பெரும்பாலும் ‘குதிரை மாளிகை’ என்றே அழைக்கப்படுகிறது. முற்றிலும் மர வீடுகளால் ஆன கூரை, வெவ்வேறு செதுக்கப்பட்ட வடிவங்களைக் காட்டும் 42 விட்டங்கள் மற்றும் முன்பகுதியில் கூரை, மலர் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கூரையைத் தாங்கும் கிரானைட் தூண்களும் பல்வேறு கலை வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த அரண்மனையில் 16 அறைகள் உள்ளன. அவை அனைத்தும் வெவ்வேறு வடிவங்களில் கட்டப்பட்டுள்ளன. மன்னர் சுவாதித் திருநாள் இந்த அரண்மனையில் வசித்து வந்தார். அவர் இறந்த பிறகு ஒரு வருடம் மட்டும் அவரது இல்லம் மூடப்பட்டிருந்தது. அதன் பிறகு, அண்மைக் காலம் வரை அரசக் கட்டிடம் பூட்டியே இருந்தது. இசை ஆர்வலர் சுவாதித் திருநாள் தனது முக்கியமான தொகுப்புகளில் சிலவற்றை இந்த அரண்மனையின் உள்ளே ஒரு அறையில் அமர்ந்து எழுதியதாக வரலாறு கூறுகிறது. அங்கிருந்து பத்மநாபசுவாமி கோயிலின் அரியக் காட்சியைப் பார்க்க முடியும்.

இந்த அரண்மனை ஒவ்வொரு ஆண்டும் முன் முற்றத்தில் நடத்தப்படும் புகழ்பெற்ற சுவாதி திருநாள் இசை விழாவின் போது உயிர் பெறுகிறது. ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும் ஐந்து நாள் விழாவில் கருநாடக மற்றும் இந்துஸ்தானி இசை உலகின் முன்னணி இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். உஸ்தாத் பிஸ்மில்லா கான், கங்கு பாய் ஹங்கல், கிஷோரி அமோன்கர், டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா, டி.கே.பட்டம்மாள் போன்ற பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்று நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஜப்பானில் செய்ய கூடாத தப்பான விஷயங்கள்!
Swathi Thirunal palace

இந்த அரண்மனையில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா, தென்னிந்தியாவின் சிறந்த இசை விழாக்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. இங்குள்ள சூழல், இசை நிகழ்ச்சிகளின் மகிழ்ச்சிக்கு மேலும் வசீகரத்தை அளிக்கிறது. குளிர்காலத்தின் குளிர்ந்த காற்றுடன், நட்சத்திரங்கள் நிறைந்த மாலை வானம், பின்னணியில் பத்மநாபனைப் புகழ்ந்து பாடல்களுடன் கூடிய ஒளிரும் அரண்மனையின் மங்கலான ஒளி ஆகியவை ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

அரண்மனையின் ஒரு பகுதி, திருவாங்கூர் அரச குடும்பத்தின் படங்கள், தனிப்பட்ட உடைமைகள் மற்றும் கலைப்பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. சுவாதித் திருநாளின் தந்த சிம்மாசனம், பளிங்குச் சிலைகள், சீனக் கலைப்பொருட்கள் மற்றும் அரிய இசைக்கருவிகள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com