நிர்மல் ஓவியங்கள், பொம்மைகள் - முகலாயர்கள் ஆதரித்த 14 ஆம் நூற்றாண்டின் கலை!

Nirmal Paintings, Toys
Nirmal Paintings, Toys
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஆதிலாபாத் மாவட்டத்தின் நிர்மல் என்ற ஊர் ஓவியத் தயாரிப்புக்கும், பொம்மைகள் தயாரிப்புக்கும் புகழ் பெற்றதாக இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஓவியங்கள், நிர்மல் ஓவியங்கள் (Nirmal Paintings) என்றும், இங்கு தயாரிக்கப்படும் மரபு வழியிலான இந்திய மர பொம்மைகள், நிர்மல் பொம்மைகள் (Nirmal Toys) என்றும் அழைக்கப்படுகின்றன.

நிர்மல் ஓவியங்கள் தெலுங்கானா மட்டுமின்றி, இந்தியாவின் பல நகரங்களுக்கும், உலகம் முழுவதுமுள்ள ஓவிய ஆர்வலர்களுக்கும் விருப்பமான ஓவியமாக இருந்து வருகிறது. நகாசு என அழைக்கப்படும் கைவினைஞர்களைக் கொண்ட குழுவினர், 14 ஆம் நூற்றாண்டில் இவ்வகையான ஓவியங்களை முகலாயர்கள் ஆதரவுகளோடு வரைந்து வந்தனர்.

அதன் பிறகு, 1950 ஆம் ஆண்டுகளில் சீமாட்டி ஹைதெரி என்பவர் இந்தக் கைவினைஞர்களை ஐதராபாத்து சுதேச மாநிலத்திற்கு அழைத்து வந்து, அவர்களின் வேலைப்பாடுகளை ஊக்குவித்தார். இந்த ஓவியங்களுக்குப் பயன்படுத்தும் நிறங்கள் தாதுக்கள், மூலிகைகள் போன்றவை, பல்வேறு தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகின்றன. இந்த ஓவியங்களின் கருப்பொருட்கள் அஜந்தா குகை ஓவியங்களிருந்தும், பிற முகலாயக் கலைகளிலிருந்தும் பெறப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் கருப்பு நிறப் பின்னணியில் தங்க நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று, நிர்மல் மரப் பொம்மைகள், வெப்பாலை மரத்தினைக் கொண்டு செய்யப்பெற்று, அரக்குப் பூச்சு பூசித் தயாரிக்கப்படுகின்றன. வெப்பாலை மரம் பேச்சுவழக்கில் ஆலே மரா (தந்தம் மரம்) என்று அழைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மர பொம்மைகள், நிர்மல் ஓவியத்தைப் பின் தொடர்ந்தேத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மரபு வழியிலான கைவினைக் கலையும், உலகளவில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை ரகசியம் தெரியுமா?
Nirmal Paintings, Toys

இப்போது உள்ளூரில் கிடைக்கும் மென்மையான மரத்திலிருந்து செதுக்கப்பட்டு டுகோ வண்ணப்பூச்சுகளால் வரையப்பட்டு வருகின்றன. தற்போது, கலைஞர்கள் இயற்கை சாயங்களிலிருந்து டுகோ வண்ணப்பூச்சுகளுக்கு மாறி விட்டனர். டுகோ வண்ணங்களைப் பயன்படுத்துவதால், நிர்மல் ஓவியங்கள் ஒரு பொதுவான ஒளியூட்டத்தைப் பெறுகின்றன. இதனால், இந்த பொம்மைகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. 

தெலங்காணாவில் உள்ள நிர்மல் பகுதி, ஒரு காலத்தில் பீரங்கிகள் மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் உற்பத்தி மையமாக இருந்தது. ஐதராபாத் நிசாமின் இராணுவத்திற்குக் கனரகப் பீரங்கிகளை வழங்கிய அதே வேளையில், கைவினைஞர்களும் கலைஞர்களும் நிர்மல் கலை என்ற பெயரில் நேர்த்தியான மர பொம்மைகளையும் ஓவியங்களையும் கொண்டு வந்தனர்.

நிசாம் ஆட்சி மறைந்த உடனேயே இதுவும் மூடப்பட்டது. தற்போது 4 இடங்களில் மட்டுமே நகாசு கைவினைஞர்களால் நேர்த்தியான பொம்மைகள் மற்றும் ஓவியங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் தோற்றம் தொடர்பான பதிவுகள் எதுவும் இப்போது இல்லை என்றாலும், நகாசு குடும்பங்கள் 17 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தானிலிருந்து நீமா நாயக் (அல்லது வேறொரு பதிப்பின்படி நிம்மா நாயுடு) என்பவரால் இங்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com