

வயலின் என்பது தந்திகளை வில் கொண்டு மீட்டுவதன் மூலமோ அல்லது விரல்களால் தட்டுவதன் மூலமோ ஒலியை உருவாக்கும் ஒரு நரம்புக் கருவியாகும். இது கச்சிதமான ஐந்தாம் சுருதியில் அமைக்கப்பட்ட நான்கு தந்திகளையும், அதிர்வுக்காக உள்ளீடற்ற சில்வர் ஓக், பைன், மேப்பிள் போன்ற மரங்களால் செய்யப்படுகிற மர உடலையும் கொண்டுள்ளது. இதை வாசிக்கும்போது தோளுக்கும் தாடைக்கும் இடையில் பிடித்துக்கொள்ளப்படுகிறது.
வயலின் தயாரிப்பு எப்போது அறிமுகமானது என்பதற்கு இதுவரை தெளிவான பதில் இல்லை. ஆனால், 500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. வயலின் போன்ற பிடில் என்ற நரம்பிசைக் கருவி, இந்தியாவில் தோன்றியது. பின், மேலை நாடுகளுக்குப் பரவியது. அங்குள்ள அறிஞர்கள் பல மாற்றங்கள் செய்தனர்.
மாற்றங்களுடன் வந்த வயலின் கருவியை, இந்திய கலைஞர்கள், இசைக் கச்சேரிகளில் பயன்படுத்து கின்றனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிராமம் திருமகூடலு. இங்கு, அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இது, 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இங்குள்ள கருங்கல் துாணில், வில்லைக் கொண்டு, ஒரு இசைக் கருவியை வாசிப்பது போன்ற புடைப்புச் சிற்பம் உள்ளது. அக்காலத்திலே வயலின் போன்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டதற்கு சான்று இது.
நவீன வயலின் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கு இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இடைக்கால ஃபிடில், ரெபெக் மற்றும் லிரா டா பிராச்சியோ போன்ற முந்தைய வில் இசைக்கருவிகளிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது. இத்தாலி நாட்டின் கிரெமோனாவைச் சேர்ந்த ஆண்ட்ரியா அமாட்டி மற்றும் பிற்காலத்தில் அன்டோனியோ ஸ்ட்ராடிவாரி, ஜியோவானி குவார்னேரி போன்ற பிற்கால தயாரிப்பாளர்கள் அதன் வடிவமைப்பையும் ஒலித் தரத்தையும் மேம்படுத்தினர்.
இத்தாலியைச் சேர்ந்த ஸ்ட்ராடிவரிஸ் என்பவர், இப்போது புழக்கத்தில் உள்ளது போன்ற வயலினை உருவாக்கினார். சில்வர் ஓக், பைன், மேப்பிள் போன்ற மரங்களில் உருவாகும். நவீன வயலின்கள் இத்தாலி நாட்டின் கிரிமோனா' என்ற சிற்றூரில்தான் முதலில் உருவாக்கப்பட்டது.
இன்றும் உலகின் புகழ்பெற்ற வயலின்கள் அங்குதான் தயாரிக்கப்படுகிறது. இக்கருவி ஐரோப்பாவில் தோன்றினாலும், 1821-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த பால ஸ்வாமி தீட்சிதர் அவர்களால் கர்நாடக இசையில் பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் வில்லில் (Bow) 150 முதல் 200 வரையிலான குதிரை முடிகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் மிகச்சிறந்த வயலின்கள் 'ஸ்ட்ராடிவரி' (Stradivari) குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டவை. குளிர் காலங்களில் குதிரைகளின் வால் தடிமனாக மாறுவதால், அப்போதைய முடிகள் வயலின் வில் செய்வதற்கு உகந்ததாகக் கருதப்படுகின்றன.
இத்தாலியின் கிரெமோனா (Cremona) நகரைச் சேர்ந்த ஸ்ட்ராடிவாரி, குர்னேரி போன்ற மாஸ்டர்கள் செய்த வயலின்கள் இன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போகின்றன. மரத்தால் செய்யப்பட்டவை மட்டுமல்லாமல், தற்காலத்தில் எலக்ட்ரிக் வயலின்களும் புழக்கத்தில் உள்ளன.
வயலின் தயாரிப்பது ஒரு எளிதான வேலை அல்ல! லூதியர்கள் என்று அழைக்கப்படும் வயலின் தயாரிப்பாளர்கள், வயலின்களை எப்படிச் செய்வது என்பதைக் கற்றுக்கொள்வதற்காக இரண்டு ஆண்டுகள் வரை பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்த வயலின்கள் பொதுவாக 70-க்கும் மேற்பட்ட ஸ்ப்ரூஸ் அல்லது மேப்பிள் மரத் துண்டுகளிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
தற்காலத்தில், பெரும்பாலான வயலின் தந்திகள் எஃகினால் செய்யப்படுகின்றன. இருப்பினும், 1900-ஆம் ஆண்டிற்கு முந்தைய அனைத்து வயலின்களும் அதன் தந்திகள் செம்மறியாட்டின் குடலிலிருந்து செய்யப்பட்டன; அவை நீட்டப்பட்டு, உலர்த்தப்பட்டு, முறுக்கப்பட்டன. குடல் தந்திகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
வாசிக்கும் வில்களில் பெரும்பாலும் சைபீரியா, மங்கோலியா அல்லது கனடா போன்ற குளிர் காலநிலையில் உள்ள ஒரு குதிரையிடமிருந்து முடிகள் எடுத்து உருவாக்கப்பட்டது.
உலகின் மிக அரிய வயலின்கள், இன்று இசைக் கருவிகளாக மட்டுமல்லாமல், மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்புகளாகவும் பார்க்கப்படுகின்றன. 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டில் இத்தாலிய கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஸ்ட்ராடிவாரி, குவார்னேரி , அமாட்டி (Stradivari, Guarneri, Amati )போன்ற வயலின்கள், இன்று 34 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.280 கோடி) வரை விலை மதிப்பிடப்படுகின்றன.
அரிய வயலின்களை வாங்கும் முதலீட்டாளர்கள், இசைக் கலைஞர்களுக்கு அவற்றை கடனாக வழங்கி இசைக்க அனுமதிக்கின்றனர். யோசுவா பெல் (Joshua Bell), சாரா சாங் (Sarah Chang) போன்ற பிரபல அமெரிக்க இசைக் கலைஞர்கள் பயன்படுத்திய கருவிகள், மேலும் மதிப்பை பெறுகின்றன.
பழங்கால வயலின்கள் அதன் காலத்தின் தாக்கத்தால், தனித்துவமான ஒலியை உருவாக்குகிறது. இன்றைய நவீன கருவிகள் கூட, அந்த பழமையான ஒலியை உருவாக்க முடியவதில்லை.
அரிய வயலின்கள், இசை உலகின் உயிர் எனக் கருதப்படுகின்றன. அவற்றை வைத்திருப்பது, வெறும் சொத்து அல்ல, கலைக்கு அரணாக இருக்கும் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இந்த அரிய வரலாற்றுப் பதிவின் மூலம் வயலின் எவ்வாறு ஒரு எளிய நரம்பிசைக் கருவியிலிருந்து சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முதலீட்டுப் பொக்கிஷமாக உயர்ந்தது என்ற அரிய ஞானத்தை நீங்கள் பெறுகிறீர்கள். இசை உலகில் இந்த பாரம்பரியக் கருவிக்கு இருக்கும் அசாத்திய மதிப்பை உணர்ந்து, கலை மற்றும் முதலீட்டு உலகை ஒரு புதிய கோணத்தில் பார்க்கும் தெளிவு உங்களுக்குக் கிடைக்கும்.