தொழுநோயாளி மன்னனின் மொட்டை மாடி! (Terrace of the Leper King)

Terrace of the Leper King
Terrace of the Leper King
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

கம்போடியாவின் அங்கோர் தோம் நகரின் அரச சதுக்கத்தின் வடமேற்கு மூலையில் தொழு நோயாளி மன்னனின் மேல் தளம் (Terrace of the Leper King) ஒன்று அமைந்துள்ளது. இது ஏழாம் செயவர்மனின் கீழ் பேயோன் பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. அமர்ந்த நிலையில் இருக்கும் இந்த சிலையினை இந்து சமய மரணக் கடவுளான எமன் சிலை என்று ஒரு பிரிவினரும், இந்தச் சிலை, தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதலாம் யசோவர்மன் சிலை என்று ஒரு பிரிவினரும் தெரிவிக்கின்றனர். 

முதலாம் யசோவர்மன் சிலைதான்:

கடுமையான வெயில் மற்றும் வெப்பமண்டல வானிலை காரணமாக இந்தச் சிலையில் ஏற்பட்டிருக்கும் அரிப்பு மற்றும் திட்டுகளால் ஏற்பட்ட பாதிப்பு போன்றவை, இச்சிலை மனிதர்களுக்கான சரும நோய் ஏற்பட்ட சிலை போன்ற தோற்றத்தைத் தருகிறது. எனவே, இந்தச் சிலை தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதலாம் யசோவர்மன் சிலையே என்றும், அந்தச் சிலையில் அடியில் பொறிக்கப்பட்டிருக்கும் 'தர்மராசன்' எனும் பெயர், கம்போடியர்கள் அவனை அன்புடன் அழைத்த பெயர் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதற்கு ஆதாரமாக, கம்போடிய புராணக்கதை ஒன்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சு அறிஞர்கள், கம்போடியாவில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு அரசன் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன என்று தெரிவிக்கின்றனர். எனவே, இந்தச் சிலை தொழுநோய் மன்னன் முதலாம் யசோவர்மன் சிலைதான் என்று ஒரு பிரிவினர் சொல்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
இயற்கையோடு இணைந்த 'நிப்பா குடிசை வீடுகள்' பற்றித் தெரியுமா?
Terrace of the Leper King

எமனின் சிலைதான்:

நிர்வாண ஆண் உருவமாக அமைந்த இந்தச் சிலை, வலிமையான உடல், தட்டையான முடி, முகத்தில் மீசை, உதடுகளில் இருந்து இரண்டு கோரைப் பற்கள் கொண்டதாக இருக்கிறது. மேலும் இந்தச் சிலையானது, வலது முழங்காலை உயர்த்தி, வலது கை  ஒரு ஆயுதத்தைப் பிடித்திருப்பதைப் போன்ற நிலையிலும், இடது கை அவரது இடது காலில் பதிந்திருப்பது போன்று அமர்ந்த நிலையிலும் இருக்கிறது. இந்தச் சிலையின் தோற்றம், இதே போன்று அமர்ந்த நிலையில், வலது தோளில் சூலாயுதத்தை ஏந்திய நிலையில் இருக்கும் எமன் சிலையுடன் ஒத்திருக்கிறது. எமனைத் தர்மராசன் என்ற பெயரில்தான் அழைப்பார்கள். மேலும், அந்தக் காலத்தில் அரச குடும்பத்தினர்களின் தகனச் சடங்குகள் மேலே மொட்டை மாடியில் நடத்தப் பெறும் என்பதால், அங்கு மரணக் கடவுளான எமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு, இச்சிலை எமனின் சிலைதான் என்று மற்றொரு பிரிவினர் சொல்கின்றனர். 

இதையும் படியுங்கள்:
நெல்லைக்கு புகழ் சேர்க்கும் இருட்டுக்கடை அல்வா உருவான வரலாறு தெரியுமா?
Terrace of the Leper King

பதின்மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த மொட்டை மாடியில் அமைந்திருக்கும் ஒரு கல்வெட்டில், “மாட்சிமை பொருந்திய தர்மாதிபதி - ஆதிராஜாவுக்கு (எமன் என்று பொருள்) சிறிய தட்டில் பிரசாதம் அளித்தார். இந்தக் காணிக்கையை யார் எடுத்துக்கொள்கிறார்களோ அவர் நரகத்தில் ஒப்படைக்கப்படுவர். மேலும், எதிர்காலத்தின் சக்திவாய்ந்த புத்தர்களால் அவர்களை விடுவிக்க முடியாது” என்ற செய்தி இடம் பெற்றிருக்கிறது.

கல்வெட்டிலுள்ள செய்தி, இந்தச் சிலை ‘எமன் சிலை’ என்பதை உறுதிப்படுத்துகிறது என்று சிலர் சொல்கின்றனர். இந்தக் கல்வெட்டு, 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், 13 ஆம் நூற்றாண்டிலேயே இந்த மொட்டை மாடி அமைக்கப்பட்டுவிட்டதால், இந்தச் சிலையின் பாதுகாப்பிற்காக, இந்தச் செய்திக் குறிப்பு கல்வெட்டு பிற்காலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்று சிலர் அதை மறுக்கின்றனர்.    

இந்தச் சிலை குறித்து, இருவேறான கருத்துகள் சொல்லப்பட்டாலும், கம்போடிய மக்களால், இந்தச் சிலை அமைந்திருக்கும் இடம், 'தொழு நோயாளி மன்னனின் மேல் தளம்' (Terrace of the Leper King) அல்லது 'தொழு நோயாளி மன்னனின் மொட்டை மாடி' என்றேச் சொல்லப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com