1,00,000 சிலுவைகளுக்கும் மேல் நிறுவப்பட்டுள்ள சிலுவைகளின் குன்று ’ - Hill of Crosses!

Hill of Crosses
Hill of Crosses
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

வட லித்துவேனியாவில் அமைந்துள்ள சியாவுலியாய் நகரின் வடக்கில் 12 கிலோ மீட்டர் தொலைவில் ‘சிலுவைகளின் குன்று’ (Hill of Crosses) அமைந்திருக்கிறது. இங்கு சிலுவைகள் மட்டுமின்றி, பெரிய திருச்சிலுவை, லித்துவேனியாப் மறை பிதாக்களின் செதுக்கிய உருவங்கள், மரியாளின் சிலைகள், ஆயிரக்கணக்கான சிறிய உருவச்சிலைகள், ஜெபமாலை போன்றவற்றை அங்கு கத்தோலிக்க யாத்திரிகர்கள் எடுத்துச் சென்று வைக்கின்றனர். இங்குள்ள சிலுவைகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. 1990 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி கிட்டத்தட்ட 55,000 ஆகவும், 2006 ஆம் ஆண்டில் 1,00,000 என்றும் கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். 

சிலுவைக் குன்றின் சரியான தோற்றம் குறித்த தகவல்கள் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் குன்று சிலுவைக் குன்றாகத் தொடங்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, லிதுவேனியாவை சோவியத் ஒன்றியத்தில் கட்டுப்பாட்டிலிருந்தது. சோவியத் ஒன்றியத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இப்போராட்டத்தில் பலர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பங்கள் அவர்களை நினைவு கூரச் சிலுவைகளை நிறுவ விரும்பினர். சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்திருந்த பகுதிக்குள் ​​சிலுவைகளை வைப்பது மற்றும் பிரார்த்தனை செய்வது போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. சோவியத் ஒன்றியம், போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் சிலுவை, வைக்கும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றை அழிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.

இதையும் படியுங்கள்:
Our Lady of Perpetual Help - சதா சகாய மாதா ஓவியம் உணர்த்தும் ஆழ்ந்த பொருள் என்ன?
Hill of Crosses

இருப்பினும் மக்கள், தங்கள் அன்புக்குரியவர்களுக்காகச் சிலுவைகளை நிறுவுவதற்குத் தொலை தூர இடங்களைத் தேடினர். அப்போது அவர்களுக்கு, சியாலியாய் நகருக்கு அருகில் உள்ள டோமந்தை மலைக்கோட்டையில் உள்ள குன்று ஏற்றதாகத் தெரிந்தது. சோவியத் ஒன்றியத்தின் அரசியல் அடக்குமுறைகள் இருந்த நிலையில், தங்களுடைய அன்புக்குரியவர்கள் இறந்த பின்பு, அவர்களுடைய நினைவாக அந்தக் குன்றின் மேல் சிலுவைகளை நிறுவத் தொடங்கினர். சோவியத் ஒன்றிய அரசியலாளர்கள், அக்குன்றில் நிறுவப்பட்ட சிலுவைகளை எடுத்துச் சென்று, அதற்குச் செல்லும் சாலைகளை மூடிவிட்டனர். ஆனால், மக்கள் நள்ளிரவில் புதிய சிலுவைகளை மீண்டும் மீண்டும் அக்குன்றில் கொண்டு போய் நிறுவி வருவார்கள். 

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, லிதுவேனியா விடுதலை அடைந்ததிலிருந்து, அந்தக் குன்று அதிக முக்கியத்துவம் பெற்றது. அந்தக் குன்றும், சிலுவைக் குன்று என்றாகிப் போனது.

சிலுவைக் குன்று சமய சுதந்திரத்தை அடக்குவதற்கான வீர எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளது.  1993 ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் அவர்களின் வருகையால், அதன் முக்கியத்துவம் முடிசூட்டப்பட்டது. இப்போதெல்லாம், இது ஒரு பிரபலமான பயணத் தலமாக மாறிப் போய்விட்டது. தற்போது இக்குன்று, கிறித்தவ சமயக் கொண்டாட்டங்களுக்கும், புனிதப் பயணங்களுக்கும் மிகவும் பிரபலமான இடமாக மாறியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com