அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள பையனூர் புனித மோதிரம்!

பையனூர் புனித மோதிரம்
பையனூர் புனித மோதிரம்
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இந்தியாவில் மூதாதையர்களுக்காகச் செய்யப்படும் முன்னோர் கடன் சடங்கின் போது அல்லது இறந்த மூதாதையர்களுக்கான வேண்டுதலின் போது, மரபு வழியில் தருப்பைப் புல் கொண்டு செய்யப்படும் மோதிரம் அணிவது வழக்கமாக இருக்கிறது.

இச்சடங்குகளில் பயன்படுத்தும் தருப்பைப் புல் மோதிரத்துக்குச் சமமான மோதிரமாக, பையனூர் புனித மோதிரம் அல்லது பையனூர் பவித்திர மோதிரம் (Payyannur Pavithra Ring) பயன்படுத்தப்படுகிறது.

நவீன பவித்திர மோதிரம் தங்கத்தால் ஆனது. மோதிரத்தின் வடிவம் தனித்துவமான ஒரு முடிச்சு போல் தோற்றம் தருவதாகும். தற்காலத்தில் செம்பு, ஐம்பொன், வெள்ளி ஆகியவையும் மோதிரம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

புனித மோதிரத்தின் தோற்றம், கேரளாவிலுள்ள பையனூர் சுப்பிரமண்யர் கோயிலின் வரலாற்றுடன் தொடர்புடையது.

இக்கோயிலில் புனித சடங்குகளைச் செய்யும் போது முன்பு தருப்பைப்புல்லால் ஆன பவித்ர மோதிரங்கள் பயன்படுத்தப்பட்டன.

பின்னர் நீண்ட நாட்கள் நீடித்து இருக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக பூசாரிகள் தங்க மோதிரங்களுக்கு மாறினர்.

ஒரு பாரம்பரியக் கைவினைஞருக்கு, ஒரு தங்க மோதிரம் செய்ய ஒருநாள் முழுவதும் ஆகும்.

இந்தப் புனித மோதிரத்தைச் செய்யும் கைவினைஞர் தனது வாழ்நாள் முழுதும் இறைச்சி சாப்பிடவோ, மது அருந்தவோ கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.

பையனூரில் உள்ள சுப்பிரமண்யர் கோவிலில் புனிதப்படுத்தப்பட்ட பின்னரே வாடிக்கையாளருக்கு இந்த மோதிரம் வழங்கப்படுகிறது.

கேரளாவிலுள்ள பையனூர் இந்துக்களின் நம்பிக்கையின்படி, புனித மோதிரத்தை அணிவது பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு என்ற இந்து மதத்தின் முப்பரும் கடவுள்களின் சக்தியை எழுப்ப முடியும்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் மோதிரத்தை அகற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தெய்வீக அம்சம் கொண்ட மலர்கள் வீட்டில் இருந்தால் என்ன பலன் தெரியுமா?
பையனூர் புனித மோதிரம்

பையனூர் புனித மோதிரத்தை வலது கையில் மோதிர விரலில் மட்டுமே அணிய முடியும்.

இந்த மோதிர வளையத்தின் வெளிப்புற மேற்பரப்பில் மூன்று கோடுகள் உள்ளன. அவை, மனித உடலின் ஐடா, பிங்கலா மற்றும் சுஷும்னா என்ற மூன்று நாடிகளைக் குறிக்கின்றன.

இந்த மூன்று நாடிகளின் அடிப்பகுதியில் குண்டலினி சக்தி அமைந்துள்ளது. மேலும், இது மனித உடலில் சக்தி வாய்ந்த உணர்ச்சிகளைத் தூண்டும் என்றும், மூன்று நாடிகளின் கலவையானது மனிதர்களில் உள்ள உயிர் சக்தியை அல்லது 'குண்டலினி சக்தியை' எழுப்பக்கூடும் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். பையனூர் மோதிரம் இதனை அடிப்படையாகக் கொண்டதே என்கின்றனர்.

பையனூர் புனித மோதிரம் பயன்படுத்தும் நபருக்கு அதிக அளவிலான அறிவொளியையும், உத்வேகத்தையும் கொண்டு வர முடியும் என்று பொதுவாகக் கருதப்படுவதால், இதற்கு வணிக வழியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நெல்லையப்பர் கோயில் இசைத் தூண்களின் தொண்மை வரலாறு!
பையனூர் புனித மோதிரம்

புனித மோதிரத்தின் தரம் மற்றும் வரம்பிற்கு ஏற்ப விலையில் வேறுபாடுகள் இருக்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள பல அருங்காட்சியகங்களில் பையனூர் புனித மோதிரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com