கர்நாடகாவின் கலாச்சார அடையாளம் - 250 ஆண்டுகள் பழமையான 'பட்டேடா அஞ்சு புடவைகள்'!

patteda anchu sarees
patteda anchu sarees
Published on

கர்நாடகாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக இல்கல் சேலை, குலேத்குடா கானா, மைசூர் சேலை, பட்டேடா அஞ்சு சேலைகள் இருக்கின்றன. இதில் பட்டேடா அஞ்சு புடவை குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பட்டேடா அஞ்சு புடவைகள் வடக்கு கர்நாடகாவின் கஜேந்திரகாட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களால் தயாரிக்கப்படுகின்றன.

இது 250 ஆண்டுகள் பழமையான சேலை. இது ஆரம்பத்தில் ஒரு கைவினைஞரால் தனது மகளுக்கு பரிசளிக்க நெய்யப்பட்டது. பின்னர் இது கோயில்களில் தெய்வத்திற்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சவுதட்டியில் உள்ள எல்லம்மா கோவிலில் பிரசாதம் வழங்கிய பிறகு எல்லம்மா தெய்வத்தின் மகள்களாக கருதப்படும் தேவதாசிகளுக்கு பட்டேடா அஞ்சு சேலைகள் ஒரு காலத்தில் வழங்கப்பட்டன என புராணக்கதை கூறுகிறது.

முதலில் மணப்பெண்களுக்காக தயாரிக்கப்பட்ட இப்புடவைகள் பின்பு அரச குடும்பத்தினராலும் பிரபுத்துவத்தாலும் பயன்படுத்தப்பட்டு வந்தன, மேலும் அவற்றின் நேர்த்தியான தோற்றம் மற்றும் சிக்கலான வேலைப்பாடுகளில் அவை தெளிவாகத் தெரிகின்றன.

இயற்கை வண்ணங்களை கொண்டு பருத்தித் துணிகளால் பாரம்பரியமாக இப்புடவைகள் கையால் நெய்யப்படுகின்றன . பிரகாசமான வண்ணங்களுக்கும் எளிமையான வடிவமைப்பிற்கும் இப்புடவைகள் பெயர் பெற்றவை.

பட்டேடா அஞ்சு புடவைகள் மிகவும் பிரபலமடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவற்றின் ஒப்பற்ற ஆறுதல். பருத்தி மற்றும் பட்டு கலவையானது துணியை மிகவும் சுவாசிக்கக்கூடியதாகவும், இலகுவாகவும் ஆக்குகிறது. அதாவது புடவையை அழகாக போர்த்திக்கொள்ள முடியும், கனமாக உணர முடியாததால் வெப்பமான காலநிலைக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இத்தகைய சிறப்புகள் காரணமாகபட்டேடா அஞ்சு புடவை புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை ரசிக்க போய்வருவோம் ஒரு உலா… சுற்றுலா!
patteda anchu sarees

பட்டேடா அஞ்சு சேலை சாதாரண, பெரிய கட்டங்கள் மற்றும் சிறிய கட்டங்கள், பெரிய பார்டர் கொண்ட கோடுகள் கொண்ட டிசைன்களில் வருகிறது.

'கரடுமுரடான பயன்பாட்டு சேலை' என்று அழைக்கப்படும் இப்புடவை தற்போது விவசாய தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்களின் அன்றாட உடையாக உள்ளது . இது வீட்டில் எளிதாக துவைத்து உலர்த்தக்கூடிய கரடுமுரடான பருத்தி இழைகளால் ஆனது. மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் மெரூன் நிறங்கள் மட்டுமே சாயமிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன . கருப்பும், சாம்பல் நிறங்களும் 'அசுபமானவை' என்று கருதப்படுவதால் அவை பயன்படுத்தப்படுவதில்லை.

பட்டேடா அஞ்சு புடவைகளை வாங்குவது, பாரம்பரிய கைவினைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களை ஆதரிப்பதோடு, பாரம்பரிய நுட்பங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவி, நியாயமான வேலை வாய்ப்புகள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும் என்பதால் அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவோம்.

இதையும் படியுங்கள்:
சித்ரா பௌர்ணமி - சித்திரகுப்தர் வரம் பெற்ற தலம் - பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் கோயில்
patteda anchu sarees

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com