புத்தாண்டை வரவேற்க 'பன்னிரண்டு திராட்சைகள்' விழா!

'Twelve Grapes' Festival to welcome the New Year
'Twelve Grapes' Festival
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஜப்பான் மற்றும் போர்த்துக்கீசியத்தில் புத்தாண்டை வரவேற்கும் 'பன்னிரண்டு திராட்சைகள்' விழா

கிரிகோரியன் நாட்காட்டியின்படி டிசம்பர் 31 ஆம் நாளானது ஆண்டின் கடைசி நாளாக இருக்கிறது. இந்நாளில் ஜப்பான் மற்றும் போர்த்துக்கீசிய வழக்கப்படி, டிசம்பர் 31 அன்று நள்ளிரவில் ‘பன்னிரண்டு திராட்சைகள்’ (Twelve Grapes) எனும் விழா கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வானது, புத்தாண்டை வரவேற்க டிசம்பர் 31 அன்று நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்குக் கடிகார மணி ஒலிக்கும் போது, ஒவ்வொரு மணியோசைக்கும் ஒரு திராட்சையைச் சாப்பிடுவதை மரபு வழியாகக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு திராட்சையும், கடிகார மணியின் பன்னிரண்டும், ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள பன்னிரண்டு மாதங்களைப் பிரதிபலிக்கிறது.

இந்த மரபு வழியிலான நிகழ்வு 1895 ஆம் ஆண்டில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகு 1909 ஆம் ஆண்டில் மக்கள் மத்தியில் ஒருங்கிணைக்கப்பட்டது என்கின்றனர். 1909 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், அலிகாண்டீசு திராட்சை வளர்ப்பவர்கள், அதிக எண்ணிக்கையிலான திராட்சைகளை விற்பதற்காக இந்த வழக்கத்தை பரப்பினர் என்றும் சொல்வதுண்டு.

இதையும் படியுங்கள்:
பிளேடுகளின் நடுப்பகுதி ஏன் ஒரே மாதிரியான வடிவமைப்பைப் பெற்றுள்ளன தெரியுமா?
'Twelve Grapes' Festival to welcome the New Year

ஜப்பானிய மற்றும் போர்த்துக்கீசிய மரபு வழிகளின் படி, பன்னிரண்டு திராட்சைகளைச் சாப்பிடுவது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கிறது என்கிற நம்பிக்கை மிகுதியாக இருக்கிறது. இந்த நடைமுறை, முன்பு மந்திரவாதிகள் மற்றும் தீமைகளை விரட்டுவதாக நம்பப்பட்டது. ஆனால், தற்பொழுது இந்த நிகழ்வு பெரும்பாலும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் வரவேற்பதற்குமான ஒரு மரபு வழியிலான நிகழ்வாக மாற்றம் பெற்றுவிட்டது.

பன்னிரண்டு திராட்சைகளைச் சாப்பிட மக்கள் இரண்டு வகையான இடங்களில் கூடுகின்றனர். நோசெவிஜா எனப்படும் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு உணவிற்குப் பிறகு, இல்லங்களில் குடும்ப உறுப்பினர்கள் கூடி உண்கின்றனர். மற்றொரு வகையாக, நாடு முழுவதும் உள்ள முக்கிய சதுக்கங்களில் மக்கள் ஒன்று கூடி பன்னிரண்டு திராட்சைகளை உண்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
நீதிமன்றத்தில் வழங்கப்படும் வாய்தா பற்றி தெரியுமா?
'Twelve Grapes' Festival to welcome the New Year

மத்ரித் எனும் மரபு வழியைப் பின்பற்றி வருபவர்கள், புவேர்டா டெல் சோலில் உள்ள அரச இல்லத் தபால் நிலையக் கடிகாரத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையதாகக் கொண்டு, அவ்வேளையில் பன்னிரண்டு திராட்சைகள் உண்ணும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இந்நிகழ்வை ஜப்பான் நாட்டின் அனைத்து முக்கியமான தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வானொலி நிலையங்கள் வழியாக ஒளி ஒலி பரப்பு செய்யப்படுகின்றன.

பன்னிரண்டு திராட்சைகள் எனும் இந்நிகழ்வு ஜப்பான் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பரந்த கலாச்சார உறவைக் கொண்ட இடங்களிலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஹிஸ்பானிக் சமூகங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மரபு வழி நிகழ்வுகள் ஹிஸ்பானிக் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் ஒரு பகுதியாக இணைந்திருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com