குழந்தைகளுக்கு கெமிக்கல் இல்லாத அழகு குறிப்புகள்! பாட்டி காலத்து ரகசியங்கள்!

Azhagu kurippugal in tamil
beauty tips for kids
Published on

வை குழந்தைகளின் ஒழுங்கான வளர்ச்சிக்கும், சரும பாதுகாப்புக்கும் உகந்தது.

குழந்தைகளுக்கேற்ற பூ டானிக்:

செய்முறை: மல்லிகைபூ – 6 ஆவாரம்பூ_ 5, துளசிஇலை & பூ– ஒரு கைப்பிடி, இஞ்சி – சிறிய துண்டு, பனைவெல்லம் – 1 மேசைகரண்டி, இவற்றை 300 ml தண்ணீர் விட்டு 10–15 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவும். பின் வடிகட்டி, வெந்நீராக குடிக்கக் கொடுக்கலாம். தினம் ஒருமுறை காலை அல்லது மாலை நேரம் கொடுக்கலாம் (3வயதிற்கு மேல் குழந்தைகளுக்கு).

பயன்:  உடல் சூடு தணிக்கும், உடல் உற்சாகம், நுண்ணுயிர் தொற்று எதிர்க்கும் சக்தி, சளி, இருமல், ஜீரணக் கோளாறுகள் தவிர்க்க உதவும்.,

பசுமை முகக்கிரீம்:

செய்முறை: ரோஜா இதழ் – 5–6 (அரைத்தது), அலோவேரா ஜெல் – 2 மேசை கரண்டி, ஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பனங்கற்கண்டு கரைத்த நீர் – 1 ஸ்பூன். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து க்ரீம் போல் செய்யவும். கண்ணுக்கு அருகே தவிர்த்து, முகத்தில் மெதுவாக பூசவும். 10–15 நிமிடம் விட்டு கழுவவும்.  வாரத்தில் 2 முறை பயன்படுத்தலாம்.

பயன்:  சருமம் மென்மை, ஈரப்பதம், கோடையில் வெப்பத்தால் ஏற்படும் வறட்சி மற்றும் அரிப்புகளைத் தடுக்க உதவும். சுருக்கம், சிவத்தன்மை தவிர்க்கும். 3 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பானது.

மலர் சார்ந்த ஸ்கின் பவுடர்

செய்முறை: ரோஜா இதழ் பொடி – 2 மேசை கரண்டி, வெற்றிலை பொடி – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள்பொடி– 1 சிட்டிகை, நிலவெற்றி கிழங்குபொடி (arrowroot powder) – 4 மேசை கரண்டி, லவங்கப்பட்டை தூள் – சிறிது. அனைத்துப் பொருட்களையும் நன்கு கலக்கவும். நிழலில்  உலர்த்தி, பவுடராக்கி சேமிக்கவும்.  குளியலுக்கு பின் சிறிது தூவி பூசலாம்.

பயன்: உடல் வியர்வை மற்றும் வாசனை கட்டுப்படும். சருமம் மென்மையாக இருக்கும். கசப்பு இல்லாமல் வாசனை பரவும்.

இதையும் படியுங்கள்:
முழங்கை, கழுத்து கருமையா இருக்கா? இதோ நிரந்தர தீர்வு!
Azhagu kurippugal in tamil

மலர் குளியல் பொடி

செய்முறை: ஆவாரம்பூ பொடி– 1 மேசை கரண்டி, துளசிஇலை & பூக்கள் பொடி – 1 மேசை கரண்டி, வேப்பிலைபொடி – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள்பொடி 1 சிட்டிகை, கசகசா – 1 ஸ்பூன் பசுமை மூலிகைதூள் – 1 ஸ்பூன். அனைத்தையும் நன்கு உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து நன்றாக பவுடராக மாற்றவும்.  குளிக்கும் போது சிறிதளவு இந்தப் பொடியை பசும்பாலில் அல்லது வெந்நீரில் கலந்து தேய்க்கலாம். வாரம் 3முறை பயன்படுத்தலாம்.

பயன்: உடலுக்கு குளிர்ச்சி தரும், குளிர்ச்சியான வாசனையும், சரும பாதுகாப்பும் தரும், முடி வளர்ச்சிக்கும் நல்லது.

பசுமை வாசனை எண்ணெய்:

செய்முறை: ரோஜா, மல்லிகை, பவளம் மல்லி – ஒவ்வொன்றும் சிறிது, தேங்காய் எண்ணெய்  – 200  ml, வெற்றிலை – 2, வெந்தயம் – 1 ஸ்பூன், ஏலக்காய் – 1. முதலில் எண்ணெய் வெதும்பும் அளவு மிதமான தீயில் சூடாக்கவும். பூக்கள், இலைகள், வெந்தயம் சேர்த்து 10–15 நிமிடங்கள் மெதுவாக காய்ச்சி எடுக்கவும். வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் வைத்துப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
சமையல் ரகசியங்கள்: உங்க கிச்சனில் நடக்கப்போகும் மாயாஜாலங்கள்!
Azhagu kurippugal in tamil

பயன்: குழந்தைகளுக்கு நல்ல வாசனை, தோலுக்கு ஈரப்பதம் தரும், இரவில் தூங்கும் முன் தேய்த்தால் நன்கு தூக்கம் வரும்.  வலிகள், தொற்றுகள் தடுக்கும். 6 மாதங்களுக்கு மேல் குழந்தைகளுக்கு மட்டும் பயன்படுத்தவும்.

ஒவ்வொரு தயாரிப்பையும் பச்சை சோதனை (Patch test) செய்து பயன்படுத்தவும்.  நேரடியாக கண், நாக்கு, மூக்கு பகுதிக்கு செல்லாமல் பாதுகாத்து பயன்படுத்தவும். பூக்கள் வேதிப்பொருள் இல்லாத, இயற்கையாக வளர்க்கப்பட்டவையாக இருக்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com