உங்கள் சருமம் பளபளக்கணுமா? முகப்பரு, கரும்புள்ளி தொல்லையா? உப்பு நீர் மேஜிக்!

உப்பு சருமத்தால் உறிஞ்சப்பட்ட தீங்கு விளைவிக்கும் நச்சுக்களையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்றி, இளமையான மற்றும் பளபளப்பான சருமத்தை வழங்குகிறது.
salt for skin care
saltfreepik
Published on

உப்பு நீரை முகத்திற்குப் பயன்படுத்துவது உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் இதன் மூலம் உங்கள் சருமத்தில் பல அற்புதங்களைச் செய்ய முடியும்.

உப்பு நீரின் நன்மைகள்:

உப்பு நீரில் உள்ள கனிமங்கள் உங்கள் சருமத்திற்குப் பல வழிகளில் உதவுகின்றன. இது சருமத்தின் தோற்றத்தை மீட்டெடுத்து, சரிசெய்து, பளபளப்பாக மாற்றுகிறது.

1. பருக்களை நீக்குகிறது:

உப்பு நீர் இயற்கையாகவே சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை உறிஞ்சுகிறது. இது சருமத்தை இறுக்கி, சருமத் துளைகளைச் சுருக்குகிறது. மேலும், துளைகளை அடைக்கும் எண்ணெய் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் முகப்பருக்களின் அளவு  குறைந்து, தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற முடிகிறது.

2. சரும நோய்களைச் சரிசெய்கிறது:

எக்ஸிமா, சொரியாசிஸ் மற்றும் அதிக வறட்சி போன்ற சரும நோய்கள் அசௌகரியமானவை, விரும்பத்தகாதவை மற்றும் வலி நிறைந்தவை. உப்பு நீரைக் கொண்டு சருமத்தை முறையாகக் கழுவுவது இந்த நோய்கள் வராமல் பாதுகாத்து, சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுகிறது.

கடல் உப்பில் பொட்டாசியம், கால்சியம், மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய குணப்படுத்தும் கனிமங்கள் உள்ளன. இது சருமத்தில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, சரும நோய்களை எளிதாக சரி செய்கிறது.

3. ஒரு ஃபேஷியல் டோனராகச் செயல்படுகிறது:

தினமும் முகத்தைக் கழுவிய பிறகு, மேக்கப் போடும் முன், உப்பு நீரைத் தெளித்து வந்தால் நாள் முழுவதும் உங்கள் சருமம் எண்ணெய் பசையின்றி மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

4. ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலியன்ட்:

உப்பு ஒரு சிறந்த இயற்கை எக்ஸ்ஃபோலியன்ட். இது இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்தைப் புத்துணர்ச்சியடையச் செய்து, பிரகாசமாக்குகிறது. மேலும் ஒட்டுமொத்தமாக ஒரு மென்மையான சருமத்தைக் கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
தலை முதல் கால் வரை - கடுகு செய்யும் மாயம்!
salt for skin care

5. சருமத்தைத் தூய்மைப்படுத்துகிறது:

உறிஞ்சும் தன்மை அதிகம் இருப்பதால், உப்பு ஒரு இயற்கையான டிடாக்ஸிஃபையராகச் செயல்படுகிறது. இது சருமத்தால் உறிஞ்சப்பட்ட தீங்கு விளைவிக்கும் நச்சுக்களையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்றி, இளமையான மற்றும் பளபளப்பான சருமத்தை வழங்குகிறது.

a cup of salt, essential oils and skin care product
salt for skin carefreepik

உப்பு நீரை எப்படிப் பயன்படுத்துவது?

உப்பு நீரை வீட்டிலேயே தயாரித்து, உங்கள் தினசரி சருமப் பராமரிப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

உப்பு நீர் கலவை:

நான்கு கப் கொதிக்க வைத்த நீரில் (குறைந்தது 20 நிமிடங்கள்) இரண்டு டீஸ்பூன் அயோடின் சேர்க்காத உப்பைச் சேர்க்கவும். இதை ஒரு காற்று புகாத மூடியுள்ள பாத்திரத்தில் ஊற்றி, உப்பு முழுவதுமாகக் கரையும் வரை கலக்கவும். கலவை குளிர்ந்த பிறகு சருமத்தில் பயன்படுத்தலாம்.

ஃபேஷியல் டோனராக:

ஒரு டீஸ்பூன் கடல் உப்பை நான்கு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து, உப்பு முழுமையாகக் கரையும் வரை குலுக்கவும். இதைச் சுத்தமான, உலர்ந்த சருமத்தில் கண்களைத் தவிர்த்து, தினமும் இருமுறை பயன்படுத்தவும்.

பாடி ஸ்க்ரப்:

கால் கப் உப்பையும், அரை கப் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயையும் சேர்த்து ஒரு கெட்டியான பசை போல் கலக்கவும். இதனுடன் நீங்கள் விரும்பினால், 10 துளிகள் ஏதேனும் ஒரு எசென்ஷியல் எண்ணெயைச் சேர்க்கலாம். குளிக்கும்போது, ஒரு துணி, அல்லது உள்ளங்கைகளைப் பயன்படுத்தி, வட்ட இயக்கத்தில் மெதுவாகத் தேய்க்கவும்.

உப்பு குளியல்:

உப்பு குளியலுக்கு, வெதுவெதுப்பான நீர் நிரம்பிய வாளியில் மூன்றில் ஒரு பங்கு உப்பு சேர்த்து கலக்கவும். 15 முதல் 30 நிமிடங்கள் வரை இதில் ஊறிய பிறகு, அந்த நீரைப் பயன்படுத்தி குளிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சருமம் பளபளக்க இதுதான் ரகசியமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
salt for skin care

சமநிலைப்படுத்தும் மாஸ்க்:

இரண்டு டீஸ்பூன் பொடியாக அரைத்த கடல் உப்பை, நான்கு டீஸ்பூன் சுத்தமான தேனுடன் கலந்து ஒரு மென்மையான பசை போன்ற கலவையை உருவாக்கவும். இதை (கண்களைத் தவிர்த்து) சுத்தமான, உலர்ந்த சருமத்தில் சமமாகப் பூசவும். 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, முகத்தின் மீது 30 விநாடிகள் வைக்கவும். பின் மெதுவாக வட்ட இயக்கத்தில் தேய்த்து, மிதமான நீரில் நன்கு கழுவவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com