முகத்தில் தக்காளி பூசும் பழக்கம் உள்ளதா.. இந்த அதிர்ச்சியான உண்மையை உடனே தெரிஞ்சிக்கோங்க!

இயற்கை அழகு என்ற பெயரில் தக்காளி, பூண்டு மற்றும் எலுமிச்சை போன்ற சமையலறை பொருட்களை நேரடியாக முகத்தில் தடவுவதால் ஏற்படும் ஆபத்தான பக்கவிளைவுகள் குறித்த நிபுணர்களின் எச்சரிக்கை.
Skin care tips
Skin care tips
Updated on

Skin care tips: இன்றைய காலகட்டத்தில் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள பலரும் இயற்கை வைத்தியங்களை அதிக அளவில் நாடிச் செல்கின்றனர். சமையலறையில் இருக்கும் காய்கறிகளை எடுத்து அப்படியே முகத்தில் பூசிக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது என்ற ஒரு தவறான எண்ணம் நம்மிடையே பரவலாக நிலவுகிறது. இயற்கை பொருட்கள் அனைத்தும் சருமத்திற்கு நன்மை பயக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 

சில காய்கறிகளை நேரடியாக முகத்தில் தடவும்போது, அது அலர்ஜி மற்றும் கடுமையான எரிச்சலை உண்டாக்கும் என சரும நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி முக அழகைக் கெடுக்கும் 5 ஆபத்தான காய்கறி வைத்தியங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

1. தக்காளி!

சருமத்தில் உள்ள கருமையைப் போக்க தக்காளி சாற்றை முகத்தில் தேய்ப்பது பலரின் வழக்கம். இதில் உள்ள வைட்டமின் சி முகத்திற்குப் பொலிவைத் தரும் என நம்பப்படுகிறது. ஆனால், தக்காளி அதிக அளவிலான அமிலத்தன்மை கொண்டது. இதனை நேரடியாக முகத்தில் தடவும்போது, அது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசையை முற்றிலுமாக உறிஞ்சிவிடுகிறது. இதனால் முகம் அதிக வறட்சி அடைவதுடன், அரிப்பு மற்றும் சருமம் சிவந்து போதல் போன்ற தேவையற்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.

2. உருளைக்கிழங்கு!

கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்களை நீக்க உருளைக்கிழங்கு சாறு மிகச் சிறந்த ஒரு தீர்வாகப் பலரால் கருதப்படுகிறது. உருளைக்கிழங்கில் சில என்சைம்கள் இருந்தாலும், அவை கரும்புள்ளிகளை முழுமையாகப் போக்கும் என்பதற்கு எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இதுவரை இல்லை. குறிப்பாக, முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் இதனை நேரடியாக முகத்தில் தடவும்போது, சருமம் மேலும் எரிச்சலடைந்து பருக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

3. வெங்காயம்!

முடி வளர்ச்சியைத் தூண்ட வெங்காயச் சாறு பெரிதும் உதவுகிறது என்பது உண்மைதான். ஆனால் அதையே சருமத்தில் பயன்படுத்துவது மிகப் பெரிய ஆபத்தை வரவழைக்கும். இதில் உள்ள சல்பர் சேர்மங்கள் மிகவும் வீரியம் மிக்கவை. இதை முகத்தில் பூசும்போது கடுமையான எரிச்சல் மற்றும் தோல் அழற்சி போன்ற தொந்தரவுகள் மிக எளிதாக உருவாகும்.

இதையும் படியுங்கள்:
வெயிலில் கருகிய சருமம் வெள்ளையாகணுமா? இதை மட்டும் தடவுங்க போதும்!
Skin care tips

4. எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய்!

வெள்ளரிக்காய் முகத்திற்கு நல்ல குளிர்ச்சியைத் தந்தாலும், அதனை எலுமிச்சையுடன் கலந்து பேஸ் பேக்காகப் பயன்படுத்துவது முற்றிலும் தவறான ஒரு முறையாகும். எலுமிச்சையின் மிகக் குறைந்த pH அளவு முகத்தின் இயற்கையான சமநிலையை முற்றிலுமாகக் குலைக்கிறது. எலுமிச்சையில் உள்ள சோரலென் (Psoralen) எனப்படும் வேதிப்பொருள் சூரிய ஒளியுடன் சேரும்போது Phytophotodermatitis என்ற கடுமையான சரும பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் முகம் கறுத்துப் போவதுடன், கடுமையான எரிச்சலும் உண்டாகும்.

5. பூண்டு!

பூண்டில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்புத் திறன் இருந்தாலும், அதனை ஒருபோதும் நேரடியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. பருக்களைக் குறைக்க பச்சைப் பூண்டை அப்படியே வைக்கும்போது, அது சருமத்தில் கெமிக்கல் பர்ன் எனப்படும் ரசாயனத் தீக்காயங்களை ஏற்படுத்துகிறது. இதனால் தீவிரமான ஒவ்வாமை மற்றும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படும் என மருத்துவ ஆய்வாளர்கள் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
வேர்வை வந்தாலும் மேக்கப் கலையாது: நிபுணர்கள் கூறும் கோடைக்கால அழகு குறிப்புகள்!
Skin care tips

சமையலறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் நாம் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ மட்டுமே உருவாக்கப்பட்டவை. முகத்தில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அனைத்தையும் நேரடியாக முகத்தில் பூசுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

சோசியல் மீடியாவில் வைரலாகும் இதுபோன்ற தவறான ஹேக்ஸை நம்பி, உங்களின் அழகான முகத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

logo
Kalki Online
kalkionline.com