
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் பலரை வெளியில் தலை காட்ட முடியாமல் செய்துவிடும். அதுவும் சவந்த நிறத்தில் இருப்பவர்களுக்கு இந்த புள்ளிகள் முக அழகையே மாற்றிவிடும்.
கரும்புள்ளிகளுக்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன ஊட்டச்சத்து குறைபாடு செரிமான கோளாறு போன்ற காரணங்களால் கூட கரும்புள்ளிகள் வரலாம் என்கின்றனர்.
சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொண்டால் கரும்புள்ளிகளை தவிர்க்கலாம் என்கின்றனர்.
முகத்தில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகளுக்கு சில எளிமையான வீட்டு சிகிச்சைகள் என்ன என்று பார்க்கலாம்.
கோதுமை தவிடு, பால் இரண்டையும் சமஅளவு எடுத்துக் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வரவேண்டும். சில நாட்களில் கரும்புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்துவிடும்.
வெள்ளரிச்சாறு, புதினாசாறு, எலுமிச்சம் பழச்சாறு மூன்றையும் சம அளவில் கலந்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
முருங்கை இலை சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் கழுவவும். இப்படி சில நாட்கள்செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
முற்றிய வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு, அந்த நீராவியில் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
தக்காளியும், வெள்ளரிக்காய் சம அளவு எடுத்து நன்கு கூலாக அரைத்து முகத்தில் பூசி கால்மணி நேரம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நாளடைவில் குறைந்துவிடும்.
வெந்தயக்கீரையை மையஅரைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவி வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் நீங்கும்.
சந்தனத்தூள்மற்றும் மஞ்சள் தூள் சம அளவு எடுத்துக்கொண்டு அதில் பால் கலந்து பசை போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி சில நிமிடங்கள் காயவிட்டு பிறகு கழுவ வேண்டும். நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
ஊறவைத்த பாதாம் பருப்புடன் ரோஜா இதழ் கலந்து மைய அரைத்து இந்த பசையை முகத்தில் கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவி 10 நிமிடம் கழிந்த பின் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
வாழைப்பழத்தை மசித்து அதனுடன் பால் கலந்து முகத்தில் பூசி சில நிமிடங்கள் ஊறவைத்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சிடும்.
உருளைக்கிழங்கு சாறு எடுத்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்துவிடும்.
கரும்புள்ளிகளை போக்குவதில் முல்தானி மெட்டி முதல் இடம் வகிக்கிறது. கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் ஃபேஷியல் பேக் போல கனமாக போடவேண்டும். இதை நன்றாக காயவிட்டு பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்.
வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.