இந்தியாவின் பசுமை வளத்தை கொழிக்கச் செய்யும் மிக நீளமான 10 நதிகள்!

Longest rivers of India
Ganga, Godavari, Krishna, Narmada Rivers
Published on

ண்டைய காலம் முதல் விவசாயத்தை வளர்ப்பதிலும் நாகரிகங்களை உருவாக்குவதிலும் ஆறுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட நதிகள் இருக்கின்றன. அதில் இந்தியாவை விவசாயத்திலும் பொருளாதாரத்திலும் வளப்படுத்தும் மிகவும் நீளமான 10 நதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. கங்கை: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையிலிருந்து உருவாகும் கங்கை, இந்தியாவின் மிக நீளமான மற்றும் புனிதமான நதியாகும். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து வங்காள விரிகுடாவில் சென்று கலக்கும் கங்கை நதியின் நீளம் தோராயமாக 2,525 கிலோ மீட்டர்கள். இது பங்களாதேஷில் ‘பத்மா நதி’ என்றும் அழைக்கப்படுகிறது.

2. கோதாவரி: இந்தியாவின் இரண்டாவது பெரிய நதியான கோதாவரி ஆற்றின் நீளம் சுமார் 1,465 கி.மீ. ஆகும். மகாராஷ்டிராவில் உள்ள திரிம்பாக் மலையில் உருவாகி மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் இந்த நதி, லட்சக்கணக்கான மக்களின் உயிர்நாடியாக செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கடல்நீர் நாய்களின் (Sea otter) தனிச்சிறப்பு பற்றி தெரியுமா?
Longest rivers of India

3. கிருஷ்ணா: இந்தியாவின் மூன்றாவது பெரிய நதியான கிருஷ்ணா நதி, மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகும் இந்த நதியின் நீளம் சுமார் 1,400 கி.மீ. ஆகும். இந்த நதி மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்ந்து வங்காளவிரிகுடாவில் கலக்கிறது. துங்கபத்ரா, பீமா, கட்டபிரபா, மலபிரபா மற்றும் மூசி உள்ளிட்ட பல ஆறுகள் கிருஷ்ணா நதியின் துணை நதிகளாகும். கர்நாடகாவில் உற்பத்தியாகும் துங்கபத்ரா நதி கிருஷ்ணா நதியின் மிகப்பெரிய துணை நதிகளில் ஒன்றாகும்.

4. யமுனா: சுமார் 1376 கி.மீ. நீளம் கொண்ட யமுனா நதி இந்தியாவின் நான்காவது பெரிய நதியாகும். உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள யமுனோத்ரி பனிப்பாறைகளில் இருந்து உருவாகும் யமுனா, கங்கையின் துணை நதியாகும். இது இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் வழியாக பாய்ந்து உ.பி.யின் பிரயாக்ராஜ் கங்கை நதியில் கலக்கிறது. பிரயாக்ராஜ் கங்கை, யமுனை சங்கமத்தின் காரணமாக சனகம் நாக்ரி என்று அழைக்கப்படுகிறது.

5. நர்மதா: இந்தியாவின் ஐந்தாவது பெரிய நதியான நர்மதா நதி தோராயமாக 1,312 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்கிறது. நர்மதா நதி மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்கண்டக் பீடபூமியில் இருந்து உருவாகி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் வழியாக மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. தவா, பர்னா, ஷக்கர் மற்றும் ஹிரன் ஆறுகள் முக்கிய துணை நதிகள். நாட்டின் பிரபலமான சர்தார் சரோவர் அணையும் குஜராத்தில் இந்த நதியில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
அதிக ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய நாய் இனங்கள்!
Longest rivers of India

6. சிந்து: இந்தியாவின் ஆறாவது பெரிய நதியாக சிந்து நதி இருக்கிறது. திபெத்திய பீடபூமியில் உள்ள மானசரோவர் ஏரியிலிருந்து உருவாகும் இந்த நதி, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் வழியாகப் பாய்ந்து பாகிஸ்தானை அடைந்து இறுதியில் அரபிக்கடலில் கலக்கிறது. சிந்து நதியின் மொத்த நீளம் 3,180 கிலோ மீட்டர்கள்.

7. பிரம்மபுத்திரா: நாட்டின் ஏழாவது பெரிய நதியான பிரம்மபுத்திரா நதி, இமயமலையில் கைலாஷ் மலைக்கு அருகிலுள்ள செமாயுங்டுங் பனிப்பாறையிலிருந்து உருவாகிறது. இப்பகுதி சீனாவில் உள்ளது. பிரம்மபுத்திரா நதியின் மொத்த நீளம் தோராயமாக 2,900 கிலோ மீட்டர்கள். ஆனால், இந்த நதியின் 918 கிலோ மீட்டர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளது. பிரம்மபுத்திரா அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் சியாங் நதி என்ற பெயரில் நுழைகிறது. இது கங்கை மற்றும் மேக்னா நதிகளுடன் ஒன்றிணைந்து வங்காள விரிகுடாவில் விழுவதற்கு முன் உலகின் மிகப்பெரிய டெல்டாவான சுந்தரவன டெல்டாவை உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
இறைச்சி உண்ணும் தாவரங்கள் பற்றி தெரியுமா?
Longest rivers of India

8. மகாநதி: 858 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் 8வது பெரிய நதியாகும். சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் உருவாகும் இந்த ஆறு கிழக்கு திசையில் பாய்ந்து சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாக வங்காளவிரிகுடாவில் கலக்கிறது. சியோநாத், ஜோங்க், ஹஸ்டியோ, ஓங் மற்றும் டெல் ஆகியவை மகாநதியின் முக்கிய துணை நதிகள் ஆகும்.

9. காவிரி: இந்தியாவின் 9வது பெரிய நதியாக காவிரி உள்ளது. இது கர்நாடகாவின் குடகு மலையில் உருவாகி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் வழியாக கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காளவிரிகுடாவில் கலக்கிறது. இது மொத்தமாக சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. ஹேமாவதி, கபினி, அர்காவதி, ஷிம்ஷா மற்றும் அமராவதி உள்ளிட்ட ஆறுகள் காவிரி ஆற்றின் கிளை நதிகள் ஆகும்.

10. தபதி: இந்த நதி இந்தியாவின் பத்தாவது பெரிய நதியாகும். மத்திய பிரதேசத்தில் உள்ள சத்புரா மலைத்தொடரில் இருந்து உருவாகும் இந்த நதியின் மொத்த நீளம் சுமார் 724 கிலோ மீட்டர் ஆகும். இந்த ஆறு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் வழியாக கடந்து அரேபியக் கடலுக்குள் இருக்கும் கம்பாட் வளைகுடாவில் கலக்கிறது.

ஆறுகள் நாட்டின் விவசாயத்தையும் கலாசாரத்தையும் கட்டிக் காப்பதோடு மனிதர்களின் இன்றியமையாத தேவையான நீர் வளத்தையும் வழங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com