அதிசயமான துள்ளுகுரங்குகள்: இவ்வளவு சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

Interesting information
Callicebus monkeys
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

தென் அமெரிக்காவில் கொலம்பியா முதல் பிரேசில் வரையிலும், வடக்கே, பெரு முதல் தெற்கே பராகுவே வரையிலும் உள்ள அமேசான் காடுகளில் துள்ளுகுரங்குகள் (Callicebus) எனும் அணில்கள் போன்ற மிகச்சிறிய குரங்குகள் இருக்கின்றன. இவை அணில்களைப் போன்றிருப்பதால், இதனை அரிங்குகள் என்றும் அழைக்கின்றனர்.

குரங்குகள் இனத்தில், காலிசெபெனே (Callicebinae) என்னும் துணைக்குடும்பத்தில் இன்று எஞ்சியிருக்கும் ஒரே உயிரினம் இது மட்டும்தான். கிளைக்குக் கிளை துள்ளித் தாவுவதால், இவை துள்ளுகுரங்கு என்று அழைக்கப்படுகின்றன. ஜெர்மன் மொழியில் இதனை Springaffen (குதிக்கும் குரங்குகள்) என்று அழைக்கின்றனர்.

இத்துள்ளுகுரங்கின் தலையும் உடலும் சேர்ந்து 23 முதல் 46 செ.மீ  (9 முதல் 18 அங்குலம்) அளவே இருக்கும். இதன் வால்கள் தலை மற்றும் உடலை விட நீளமானதாகும். இதன் வாலானது, ஏறத்தாழ 26 முதல் 56 செ.மீ (10 முதல் 22 அங்குலம்) இருக்கும்.

இதன் உடல் மயிர் சற்று நீளமானதாகவும் மென்மையானதாகவும் இருக்கும். சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்திலோ, சாம்பல், கருஞ்சாம்பல் நிறத்திலோ இருக்கும். இதன் வாலில் நிறைய முடி இருக்கும். இக்குரங்குகளுக்குப் பிற குரங்குகளிடம் வாலின் அடிப்பகுதியில் வலுவாகப் பிடித்துக்கொள்ளும் பற்றுவால் இல்லை.

இக்குரங்குகள் அடர்ந்த காடுகளில் நீர் நிலைகளுக்கு அருகிலேயேப் பெரும்பான்மையாக வாழ்கின்றன. பகலில் உணவு தேடி இரவில் உறங்கும் பகலாடி உயிரினமாகவே இவை இருக்கின்றன. இவை பெரும்பான்மையாகப் பழங்களையே விரும்பி உண்கின்றன. மரத்தின் இலைகள், பூக்கள், சிறு பூச்சிகள் போன்றவைகளையே உண்கின்றன. பறவைகளின் முட்டைகள், சிறு முதுகெலும்பு உயிரிகளையும் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மிதக்கும் மரங்களும், மர்மங்களும் நிறைந்த அதிசய சதுப்புநிலம்: ஒகேபெனோகி ஸ்வாம்ப்!
Interesting information

இவ்வகைக் குரங்குகள் சிறு குடும்பமாக, ஏறத்தாழ 7 உறுப்பினர்கள் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன. ஒன்றையொன்ன்று வருடிக்கொண்டும், இணைகள் ஒன்றோடு ஒன்று வாலை முறுக்கிக்கொண்டும், உறங்கிக்கொண்டும் இருப்பதைப் பார்க்க முடியும். இவை தங்கள் வாழிடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் போராடுகின்றன.

இவ்வினக் குரங்குகளின் இனப்பெருக்கத்தில், பெண் அரிங்குகள் ஐந்து மாதங்கள் வரை கருவுற்று இருக்கும். பெரும்பான்மையாக, ஒரு குட்டியையே ஈனுகின்றன. அரிதாக, சில குரங்குகளுக்கு இரண்டு குட்டிகள் பிறப்பதுண்டு. இரண்டாவது குட்டி பெரும்பாலும் உயிர் பிழைப்பது இல்லை எனினும், அந்த இரண்டாம் குட்டியை அருகில் உள்ள மற்றொரு குடும்பம், வளர்க்க எடுத்துக் கொள்கின்றன.

இந்த அரிங்கு இனத்தில் ஆண் அரிங்கே பெரும்பாலும் குட்டி வளர்ப்பில் பங்கு கொள்கின்றது. குட்டிகள் தாய்ப்பால் குடிப்பதை ஐந்து மாதத்திற்குப் பிறகு விட்டு விடுகின்றன. அதன் பின், அவை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆன பின் முழுவளர்ச்சி அடைந்த அரிங்காக மாறிவிடுகின்றன.

இதையும் படியுங்கள்:
ரஷ்யாவின் ரகசிய பொக்கிஷங்கள்: யூரல் மலைத்தொடரின் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள்!
Interesting information

மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆன பிறகு தன் துணையயைத் தேர்ந்தெடுப்பதற்காக குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்கின்றன. இவற்றின் வாழநாள் எவ்வளவு” என்று கண்டறியப்படவில்லை.  இதைப் போன்ற டார்க்குவாட்டசு (Torquatus) என்னும் உயிரினம் 12 ஆண்டுகள் வரை இயற்கையில் வாழ்வதாகக் கணித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com