மருத்துவ உலகையே மிரள வைத்த பாம்பு கடி.... தியாகத்தால் விளைந்த ஒரு சூப்பர் மருந்து!

தன் உயிரைப் பறித்த கொடிய பாம்பு கடி மூலம் மருத்துவ உலகில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய 20 வயது இளைஞனின் நெய்சிலிர்க்க வைக்கும் நிஜக் கதை.
பாம்பு கடி Coastal Taipan antivenom
பாம்பு கடி Coastal Taipan antivenomGemini Image
Updated on

பொதுவாக கொடிய விஷம் கொண்ட ஊர்வனவற்றைக் கண்டால் நாம் அனைவரும் சற்று விலகி ஓடிவிடுவோம். ஆனால் ஒரு இளைஞன் தனது உயிரே போகும் தருவாயிலும் மற்றவர்களைக் காப்பாற்ற ஒரு தைரியமான முடிவை எடுத்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் இன்றும் மருத்துவ உலகில் மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வாகப் போற்றப்படுகிறது. இந்த இளைஞனின் அந்த ஒரு செயல் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.

கொடிய விஷம் கொண்ட உயிரினம்!

சுமார் 1950 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கொடிய பாம்பு கடி மரணங்கள் மிக அதிகமாக இருந்தன. குறிப்பாக கோஸ்டல் தைபான் (Coastal Taipan) என்ற வகை மிகவும் ஆபத்தானது. இதன் விஷம் மனிதனின் நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்கி ரத்தம் உறைவதைத் தடுத்து சில நிமிடங்களிலேயே மரணத்தை ஏற்படுத்திவிடும். அந்த காலகட்டத்தில் இதற்கு எந்தவிதமான மாற்று மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்க ஒரு உயிருள்ள தைபான் தேவை என அறிவித்தனர். அதற்காக கெவின் பட்டன் (Kevin Budden) என்ற 20 வயது இளைஞர் 1950 ஜூலை 27 அன்று ஒரு பெரிய பாம்பை உயிருடன் மிகவும் சிரமப்பட்டுப் பிடித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அதனை ஒரு பைக்குள் அடைக்கும்போது அந்தப் கொடிய உயிரினம் அவரது கையில் ஆழமாகக் கடித்துவிட்டது.

உயிர்போகும் நிலையிலும் ஒரு நல்லெண்ணம்!

கொடிய விஷம் உடலில் ஏறிய சில நிமிடங்களிலேயே கெவின் பட்டன் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டார். பொதுவாக நம்மைக் கடித்தால் கோபத்தில் அதை அடித்துக் கொன்றுவிடுவோம். ஆனால் அவர் அந்தப் பாம்பைக் கொல்லக் கூடாது என்றும் அதனைப் பத்திரமாக மெல்போர்ன் நகரத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தனது நண்பர்களிடம் மிகவும் உறுதியாகக் கூறினார்.

இதையும் படியுங்கள்:
கவிதை: கஷ்டங்கள் ஏன் உனக்கு மட்டும் அதிகம் பெண்ணே?
பாம்பு கடி Coastal Taipan antivenom

அவர் 1950 ஜூலை 28 அன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். ஆனால் அவர் பிடித்துக் கொடுத்த அந்தப் பாம்பு டேவிட் ஃப்ளீ (David Fleay), டாக்டர் எஃப் சி மோர்கன் (Dr F.C. Morgan) ஆகியோரால் பத்திரமாக ஆய்வகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதனிடமிருந்து எடுக்கப்பட்ட விஷத்தைக் கொண்டு தொடர்ந்து 5 ஆண்டுகள் தீவிரமான ஆய்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

பாம்பு கடி Coastal Taipan antivenom
பாம்பு கடி Coastal Taipan antivenomGemini Image

பலன் கொடுத்த ஐந்து வருட போராட்டம்! 

அந்தத் தீவிர ஆராய்ச்சியின் முடிவில் 1955 ஆம் ஆண்டில் தைபான் விஷத்திற்கு எதிரான முறிவு மருந்து அதிகாரப்பூர்வமாக வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இந்த மாமருந்து கண்டுபிடிக்கப்பட்ட அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது. கெய்ர்ன்ஸ் என்ற பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த புரூஸ் ஸ்ட்ரிங்கர் (Bruce Stringer) என்ற 10 வயது சிறுவனை ஒரு பெரிய தைபான் கடித்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் உணவுப் பஞ்சத்தைப் போக்கிய எம்.எஸ்.சுவாமிநாதனின் உத்வேகம் தரும் சாதனை வரலாறு!
பாம்பு கடி Coastal Taipan antivenom

சிறுவனின் உடல்நிலை மிக மோசமான நிலையில் மருத்துவர்கள் அந்தப் புதிய முறிவு மருந்தைப் பயன்படுத்தினர். ஆஸ்திரேலியாவிலேயே அந்த மருந்தைப் பெற்ற முதல் நபர் அந்தச் சிறுவன்தான். அந்த மருந்து சிறப்பாக வேலை செய்து அவனது உயிரை முழுமையாகக் காப்பாற்றியது. இந்த பாம்பு கடி சம்பவம் ஒரு மாபெரும் மருத்துவப் புரட்சிக்கு வித்திட்டது.

அந்த 10 வயது சிறுவன் பிற்காலத்தில் ஒரு சிறந்த மருத்துவராக மாறி பல உயிர்களைக் காப்பாற்றினார். தனது சொந்த உயிரைப் பணயம் வைத்து கெவின் பட்டன் செய்த தியாகம் வீண்போகவில்லை. இன்றுவரை இதுபோன்ற அவசர நிலைகளில் இந்த முறிவு மருந்துதான் உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. 

logo
Kalki Online
kalkionline.com