கடலைத் தாண்டி ரகசியத் தீவுகளுக்குச் செல்லும் தவளைகள்… 3800 தீவுகளில் நடந்த பிரம்மாண்ட ஆய்வின் அதிரடி முடிவுகள்!

frogs colonize islands
frogs colonize islands
Published on

தவளைகள் மற்றும் தேரைகளின் தோல் எளிதில் நீரை ஊடுருவ அனுமதிக்கக் கூடியது என்பதால், நன்னீர் இல்லாமல் அவற்றால் ஒருபோதும் உயிர்வாழவே முடியாது. அப்படியிருக்க, கடலில் இருக்கும் கடுமையான உப்பு நீர் அவற்றின் உடலுக்கு ஒரு மிகப்பெரிய எமன் ஆகும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நிலப்பரப்பை விட்டு பல 100 கிலோமீட்டர் தள்ளி நடுக்கடலில் தனியாக இருக்கும் பல மர்மத் தீவுகளில் இந்த தவளைகள் எப்படிச் சென்றன? இந்த ஆச்சரியமான மர்ம முடிச்சை அவிழ்க்க சுமார் 3800-க்கும் மேற்பட்ட கடல் தீவுகளில் ஒரு மாபெரும் ஆய்வை சமீபத்தில் நடத்தியுள்ளனர். 

கப்பலாக மாறும் மரக்கட்டைகள்!

தவளைகளுக்குக் கடலில் பல மைல் தூரம் நீந்திச் செல்லும் அளவுக்குப் பெரிய உடலமைப்போ அல்லது ஆற்றலோ கிடையாது. நிலப்பரப்பில் மிகக் கடுமையான புயல், பெருவெள்ளம் வரும்போது, மரக்கட்டைகள் மற்றும் பெரிய செடி கொடிகள் அப்படியே வேரோடு அடித்துச் செல்லப்பட்டு கடலில் மிதக்கத் தொடங்கும். 

இந்த மிதக்கும் மரக்கட்டைகளைத் தான் தவளைகள் ஒரு பாதுகாப்பான படகு போலப் பயன்படுத்தி நடுக்கடல் தீவுகளுக்குப் பயணம் செய்துள்ளன. இது ஏதோ அவை முன்கூட்டியே பிளான் செய்து நடக்கும் ஒரு பயணம் கிடையாது. இயற்கை சீற்றங்களால் முற்றிலும் எதிர்பாராமல் நடக்கும் ஒரு ஆச்சரியமான நிகழ்வாகத் தான் இந்த இடமாற்றம் நடந்துள்ளது.

எல்லா தீவுகளிலும் தவளைகள் ஒரே மாதிரியாக ஜாலியாக வாழ்ந்துவிட முடியாது. நிலப்பரப்புக்கு மிக அருகில் இருக்கும் தீவுகளுக்கு இந்த மரக்கட்டைகள் ஈஸியாகச் சென்றுவிடுவதால் அங்கு நிறைய உயிரினங்களைக் காண முடிகிறது. ஆனால் நிலப்பரப்பை விட்டு தள்ளி இருக்கும் கடல் தீவுகளுக்குத் தவளைகள் சென்று சேர்வது ஒரு பெரிய லாட்டரி அடித்தது போல அபூர்வமான விஷயம் தான். 

இதையும் படியுங்கள்:
சாலமன் தீவுகளை பாதுகாக்க ரூ1000 கோடி வழங்கும் ஆஸ்திரேலியா!
frogs colonize islands

இதில் ஆராய்ச்சியாளர்கள் தீவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். ஒன்று பல காலத்திற்கு முன்பு நிலப்பரப்பில் இருந்து உடைந்து தனியாகப் பிரிந்து சென்ற தீவுகள். இவற்றில் ஏற்கனவே நிலத்தில் இருந்த உயிரினங்கள் அப்படியே தொடர்ந்து வாழும். மற்றொன்று கடலுக்கு அடியில் இருந்து புதிதாக உருவான தீவுகள். இந்த புதிய தீவுகளுக்குத் தவளைகள் கடல் வழியாகப் பயணித்துச் செல்வது அதிசயமான ஒன்றாகும்.

தட்பவெப்ப நிலை!

தவளைகள் ஒரு புதிய தீவை அடைந்தாலும் அங்குள்ள தட்பவெப்ப நிலை அவற்றுக்கு செட் ஆக வேண்டும். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தொடர்ந்து நல்ல ஈரப்பதமாகவும் மிதமான வெப்பத்துடனும் இருக்கும் தீவுகள் தவளைகளுக்கு ஒரு பெரிய சொர்க்கம் என்றே சொல்லலாம். தங்களின் உடலின் வெப்பநிலையைச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை தவளைகளுக்கு இருப்பதால், அந்த ஈரப்பதம் மிகவும் அவசியமான ஒன்றாகும். 

குறிப்பாக, பெரிய தீவுகளில் நிறைய நன்னீர் கிடைப்பதால் அங்கு இவை ஈஸியாகப் பல்கிப் பெருகி சந்தோஷமாக வாழ்கின்றன. வறண்ட மற்றும் சிறிய தீவுகளில் இவற்றால் ஒருபோதும் தாக்குப் பிடிக்கவே முடியாது.

இதையும் படியுங்கள்:
கின்னஸ் உலக சாதனை படைத்த இன்சூரன்ஸ் நிறுவனம்!
frogs colonize islands

உலக உருண்டையில் உள்ள இந்த நடுக்கடல் தீவுகளில் வாழும் தவளைகள் உலகிலேயே மிகவும் தனித்துவமானவை. பல லட்சம் ஆண்டுகளாகத் தங்களைச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட தீவில் மட்டுமே வாழும் இந்த அரிய வகை உயிரினங்கள் இன்று ஒரு பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளன. 

தற்போதைய மோசமான பருவநிலை மாற்றத்தால் இந்தத் தீவுகளின் வெப்பநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com