இந்தியாவில் மீனவர்களுக்கு எரிச்சல் தரும் பறவை! ஆனால், சீனாவில் மீனவர்களுக்கு மீன் பிடித்துத் தரும் பறவை!

Cormorants
Cormorants
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நீர்க்காகம் என்னும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வாழும். உலகெங்கும் இப்பறவைகள் பரவலாகக் காணப்படுகின்றன. இவை ஆகாயத்திலும் பறந்து செல்லும்; அதேவேளையில், நீரிலும் மூழ்கிச் சென்று மீன்களை வேட்டையாடும். இரண்டு நிமிடம் மூச்சு பிடித்து நீருக்குள்ளே இருக்கும்.

நீண்ட கழுத்து கொண்ட இப்பறவை, மிகுந்த பேராசை கொண்டது. இப்பறவையைக் கண்டால் மீனவர்களுக்கு எரிச்சல்தான். மீனவர்கள் சிரமப்பட்டு பிடிக்கும் மீன்களை இப்பறவைகள் திருடித் தின்றுவிடுவதுதான் மீனவர்களின் எரிச்சலுக்குக் காரணம். இப்பறவைகளால் படகில் மீன்களை வைப்பது என்றால் மீனவர்களுக்குக் கவலை.

ஆனால், சீனா, ஜப்பான் மீனவர்கள் இப்பறவையைப் பிடித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் மீன் பிடிக்கின்றனர். அவர்கள் இப்பறவையைக் கொண்டு கி.பி.960 ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரியமாக மீன்பிடிக்கின்றனர். நீர்க்காகத்தின் நீண்ட கழுத்தில் ஒரு வளையத்தை மாட்டி அதை ஒரு சங்கிலியோடு இணைத்துக் கட்டிவிட்டு, இதை நீரில் மீன்பிடிக்க விடுவார்கள். இப்பறவையும் ஆர்வமாக நீரில் மீன் பிடிக்கும்.

ஆனால் அந்த நீர்க்காகத்தால் அந்த மீனை விழுங்க இயலாது காரணம் கழுத்தில் உள்ள வளையம், அதனை விழுங்க இடம் கொடுக்காது. மீனவர்கள் அதன் வாயில் உள்ள மீனை எடுத்துக் கொண்டு, அதற்குச் சிறிய மீன் ஒன்றை இரையாகக் கொடுத்து மீண்டும் அதை மீன் பிடிக்க அனுப்புவர். இவ்விதமாக இப்பறவையைக் கொண்டு அவர்கள் மீன் பிடிக்கின்றனர்.

நீர்க்காகத்தினைக் கொண்டு மீன்பிடிக்கும் முறையினை ‘தூண்டில் பறவைகள்' (Cormorant Fishing) என்கின்றனர். தூண்டில் பறவைகளாகப் பயன்படுத்தப்படும் நீர்க்காகங்களின் வகைகள் இருப்பிடத்தைப் பொறுத்து வேறுபடுகின்றன.

சீன மீனவர்கள் பொதுவாக பெரிய நீர்க்காகத்தை (Phalacrocorax Carbo) பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் ஜப்பானில், ஜப்பானிய நீர்க்காகம் (Phalacrocorax Capillatus), பெரு நாட்டில் நியோட்ரோபிக் நீர்க்காகம் (Nannopterum Brasilianum) பயன்படுத்தப்படுகிறது. நீர்க்காகங்களின் உறவினர்களான டார்ட்டர்கள் (Anhinga) இனத்தைச் சேர்ந்த பறவைகளும் சில சமயங்களில் இந்த மீன்பிடி நுட்பத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

தெற்கு சீனாவின் பிற இடங்களில், பாய் மக்கள் 9 ஆம் நூற்றாண்டிலிருந்து எர்ஹாய் ஏரியின் கரையில் நீர்க்காக மீன்பிடித்தலைப் பயன்படுத்தி வருகின்றனர். நீர்க்காக மீன்பிடித்தல் ஒரு காலத்தில் வெற்றிகரமான முயற்சியாக இருந்த போதிலும், இன்று அதன் முதன்மை பயன்பாடு சுற்றுலாத் துறையில், சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சிக்காகச் செய்யப்படுவதாக மாறிப் போய்விட்டது.

இதையும் படியுங்கள்:
இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்கள்! நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Cormorants
logo
Kalki Online
kalkionline.com