சிந்து நதி வெறும் ஆறு அல்ல; ஆதி நாகரிகத்தின் தாய்! நீங்கள் அறியாத பக்கங்கள்!

Indus River is the mother of ancient civilization
Indus River
Published on

சிந்து நதி (Indus River) என்பது உலகின் மிக முக்கியமான நதிகளில் ஒன்றாகும். இது பரந்த பரப்பளவைக் கொண்ட ஒரு நதி மற்றும் ஆதிகால நாகரிக வளர்ச்சியைக் கொண்டது. இந்த நதி திபெத்தின் கஞ்சன் ஜங்கா மலைத்தொடரில் உள்ள காங்ரியாங் குளத்தில் தோன்றுகிறது. பின்னர் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளைக் கடக்கிறது. பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்த் பகுதி வழியாக ஓடி, கடைசியாக கராச்சி அருகே அரேபியக் கடலில் கலக்கிறது.

சிந்து நதிக்கு பல துணை நதிகள் உள்ளன. அதில் முக்கியமானவை, ஜெலம்மு (Jhelum), சின்து (Chenab), ராவி (Ravi), பியாஸ் (Beas), சத்லெஜ் (Sutlej) இவை சேர்ந்து ‘பஞ்ச நதிகள்’ (Five Rivers) என்று அழைக்கப்படும். பஞ்சாப் மாநிலத்தின் பெயருக்கு இதுவே அடிப்படை.

சிந்து நதிக்கரையில்தான் மனித நாகரிகங்களில் ஒன்று முதலில் தோன்றியது. இதன் முக்கிய நகரங்கள் மொகன்ஜோ-தரோ, ஹரப்பா. இதன் காலம் கி.மு. 3300 முதல் கி.மு.1300. இதன் நகரமைப்பு (drainage system, streets), சீரான செருகுபொருள் அளவுகள், விவசாய வளர்ச்சி, வணிகம் மற்றும் விவசாயத்தில் முக்கிய பங்களிப்புகள் இதன் சிறப்பாகும். சிந்து நதி மற்றும் அதன் கிளைகள் பாகிஸ்தானின் மொத்த பாசன நீரின் அளவில் 90 சதவிகிதத்தை அளிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
உருகும் பனிப்பாறைகள் உருக்குலையப்போகும் பூமி; வேண்டும் எச்சரிக்கை!
Indus River is the mother of ancient civilization

இந்நதியை ஒட்டிய பகுதியில் உள்ள மண் மிகவும் வளமானது. இதனால் பல வகையான பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. ஆற்றின் கரைகளில் உள்ள கிராமங்கள், நகரங்களில் உள்ள மக்கள் இந்நதியை அடிப்படையாக வைத்தே வாழ்கின்றனர். ஆற்றில் உள்ள மீன்கள், சிறு தொழில்கள் மற்றும் உணவுத் தேவைக்குப் பெரும் பங்காற்றுகின்றன. சில பகுதிகளில் சிறிய கடல் போக்குவரத்துக்கும் உதவுகிறது.

சிந்து நதியே பாகிஸ்தானின் முதன்மையான விவசாய ஆதாரம். இந்த நதி மற்றும் அதன் கிளைகள் மூலம் நீர்ப்பாசனம், மண் வளம் அதிகரித்து தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் பயிர்கள் ஆகியவை பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1947 இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவுக்குப் பிறகு நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் ஏற்பட வேண்டிய நிலை வந்தது. அதன் விளைவாக, 1960ம் ஆண்டில் Indus Water Treaty உருவாக்கப்பட்டது. இது உலகின் மிக நீடித்த நீர் பங்கீட்டு ஒப்பந்தமாகும்.

இதையும் படியுங்கள்:
ஃபெங்சுயி வாஸ்து மூலம் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் 10 வகை ஜேட் செடிகள்!
Indus River is the mother of ancient civilization

சிந்து நதிக்கரையோர மக்கள் பசு, காளை ஆகியவற்றை புனிதமாகக் கருதினர். அப்பகுதி மக்களிடையே சக்தி வழிபாடு இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிந்து நதியின் பெயர் ‘இந்தியா’ என்ற நாட்டுப் பெயருக்கும் அடிப்படையாக உள்ளது. ஸமஸ்கிருதத்தில் ‘சிந்து’ என்றால் ‘பெரிய நதி’ என்று பொருள். பாரசீகர்கள் அதை ‘ஹிந்து’ என அழைத்தனர். இதிலிருந்து ‘இந்தியா’ என்ற பெயர் உருவாயிற்று.

நீர்மட்டக் குறைபாடு, குடிநீர் மாசுபாடு, நீர் வழிநடத்தும் அணைகளால் அரசியல் முரண்பாடுகள், புவி வெப்பமயமாதலால் உண்டாகும் மாற்றங்கள் ஆகியவை சமகால சவால்களாக உள்ளன. சிந்து நதி என்பது ஆதி நாகரிக வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்தது. நவீன வாழ்வியல் வளர்ச்சிக்கும் முக்கியமாய் இருக்கிறது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் உறவுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com