இயற்கைச் சீற்றம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம்!

விருது பெறும் டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கர்
விருது பெறும் டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கர்
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

ந்தியாவின் முன்னோடி வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சுற்றுச் சூழல் விருது பெங்களூரைச் சேர்ந்த பத்மஸ்ரீ டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கருக்கு வழங்கப்பட்டது.

சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் பல்வகையான சமூக நலன், பெண்கள் முன்னேற்றம்  மற்றும் விளிம்பு நிலை மக்கள் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முன்னணி ரோட்டரி சங்கமாகும்.

உலகின் எந்தப் பகுதியிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தனி நபர், நிறுவனம் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான  விருது பெற்ற  பத்மஸ்ரீ டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கர்  இந்திய மருத்துவ பாரம்பரியத்தை புதுப்பிக்கும் பாதையில் ஒரு முன்னோடி. அவர் இந்திய ஆயுர்வேத மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தின் தலைவர். டிரான்ஸ்-டிசிப்ளினரி ஹெல்த் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் துணைவேந்தர்.

இவர் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவற்றில் வன மூலிகைகளைப் பாதுகாப்பதில்  பங்களித்ததற்காக இவருக்கு நார்மல் போர்லாக் விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கொலம்பியா பல்கலைக் கழகத்தின் விருது  போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் செந்தில் குமார் ராமமூர்த்தி  இந்த விருது வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, “என் பெற்றோர்கள் இருவருமே அரசுப் பணியாற்றிய மருத்துவர்கள். எனவே, இந்த சமூகத்தில் உடல் நலம் மற்றும் மருத்துவம் எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை நான் அறிவேன். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றை, நவீன அறிவியலோடு இணைத்து மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யும் டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்” என்று கூறி விருதினை வழங்கினார்.

இதையும் படியுங்கள்:
சோலார் எனர்ஜியால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
விருது பெறும் டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கர்

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்கிப் பேசுகையில், “இன்று இயற்கையை மதிக்காமல், செயல்படுவதால், இயற்கை தனது சீற்றத்தை நம் மீது காட்டுகிறது. அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இயற்கையை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை” என்று  குறிப்பிட்டார். நம் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தை, தாவரவியலுடன் இணைத்து பல்வேறு மூலிகைகள் குறித்தும் நவீனமான ஆய்வுக் கூடங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ள வழிவகுத்தவர் டாக்டர் ஆனந்த தர்ஷன் சங்கர்” என்று பாராட்டினார்.

விருது பெற்ற பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த தர்ஷன் சங்கர் தனது ஏற்புரையில், “கொரோனா தொற்றுக் காலத்தில் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது” என்று சுட்டிக் காட்டினார். பெங்களூரில் உள்ள டிரான்ஸ்-டிசிப்ளினரி ஹெல்த் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி பல்கலைக்கழகத்துடன் இணைந்த நூறு படுக்கைகள் கொண்ட பாரம்பரிய மருத்துவமனையில் கர்நாடகாவிலிருந்து மட்டுமில்லாமல், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், 30க்கும் மேற்பட்ட அயல் நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று, குணமடைந்து செல்கிறார்கள்” என்று கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com