

மாடித்தோட்டத்தில் எந்தெந்த மரங்களை வளர்க்கக் கூடாது? தோட்டக்காரர்களின் அதிர்ச்சி அனுபவங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
மாடித்தோட்டம் பார்ப்பதற்கு அழகாகவும், ஒரு கட்டிடத்தின் அழகையும் தூக்கி நிறுத்தும். சரி அதற்கென்று எல்லா செடியையும் மாடியில் வளர்க்கலாமா? அது அழகை தருமா? இல்லை அழிவை தருமா? என்னென்ன செடிகள் இதற்கு செட்டாகாது தெரியுமா? என்னென்ன தாவரங்கள் இதற்கு பொருந்தாது:
மாடித் தோட்டங்களில் இருக்க வேண்டிய செடிகள், எடை குறைந்த, ஆழம் இல்லாத வேர்களைக் கொண்ட தாவரங்களாக இருக்க வேண்டும். அதற்கு எதிர்மறையான வகையில் வளரும் மூங்கில் மிகப்பெரிய நிலத்தடி வேர்த்தண்டுகள் உடையவை. இதனால் மாடியின் கான்கிரீட், கட்டிடத்தின் குழாய்கள் உடைகிறது.
அடுத்தாக யூகலிப்டஸ் செடிகள் அதிகப்படியான நீரை உறிஞ்சி, மண்ணை காயவைத்து, கான்கிரீட் தளங்களை நிலை குலையச் செய்கிறது.
ஆலமரம் மற்றும் அரசமரம் ஆகியவை விரிசல்களுக்குள் ஊடுருவி, அவற்றை அகலப்படுத்தி கட்டிடத்தில் சேதங்களை உருவாக்கும். இறுதியாக ரப்பர் செடிகள் அலங்காரத் தாவரங்களாக இருந்தாலும், அவை தடிமனான வேர்களை கொண்டுள்ளது.
மொட்ட மாடித் தளங்கள் மற்றும் குழாய் பைப்புகளுக்கு இது அழுத்தம் கொடுக்கின்றன. இந்த இனங்களை நட்ட தோட்டக்காரர்கள், நீர் கசிவு, சுவர் விரிசல்கள் மற்றும் அவற்றை அகற்றுவதில் சிரமம் ஆகியவற்றை எதிர் கொண்டதாக தெரிவித்தனர். அதனால் மாடித்தோட்ட செடிகளை தேர்ந்தெடுப்பதில் கைதேர்ந்த நிபுணர்களின் தலையீடு தேவைப்படுகிறது.
மாடித்தோட்டம் - தோட்டக்காரர்களிடமிருந்து கிடைத்த கருத்துகள்:
மாடித் தோட்டங்களில் மூங்கிலை வைத்துப் பரிசோதித்தவர்கள், அதன் வேர்கள் கட்டுப்பாடின்றிப் பரவி, கட்டிடங்கள் சேதப்படுத்துவதையும், பைப் குழாய்களுக்குள் கூட நுழைவதையும் கண்டறிந்தனர். யூகலிப்டஸ் சுற்றியுள்ள மண்ணை காயவைத்து, மற்ற தாவரங்கள் வளராமல் செய்துவிடுவதாகத் தெரிவிதார்கள். ஆலமரம் மற்றும் அரசமரக் கன்றுகள், ஒரு காலத்தில் சிறியதாக இருந்தாலும், கட்டுப்படுத்த முடியாத மரங்களாக வளர்ந்து, அவற்றின் வேர்கள் கான்கிரீட் தளங்களையும், சுவர்களையும் விரிசல் அடையச் செய்தன என்றார்கள். ரப்பர் செடிகள் அதிக இடத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவை என்று பல தோட்டக்காரர்களால் சொல்லப்பட்டுள்ளது.
நட்டால் என்ன நடக்கும்:
மேலே கூறியதுபோல் மூங்கில், யூகலிப்டஸ், ஆலமரம், அரசமரம் அல்லது ரப்பர் போன்ற பொருத்தமற்ற தாவரங்கள் மொட்டை மாடிகளில் வளர்க்கப்படும்போது, அவற்றின் வேர்கள் கட்டிட விரிசல்களுக்குள் ஊடுருவி அவற்றை இன்னமும் விரிவடையச் செய்வதால், கட்டிடம் பலவீனமடைவதே முதல் பொதுவான பிரச்சனையாகும்.
இரண்டாவது விளைவு நீர்க்கசிவு ஆகும், காரணம் வேர்கள் கட்டிட சுவற்றை சீர்குலைக்கின்றன. மூன்றாவது விளைவு மண் சமநிலையின்மையாகும், இதில் யூகலிப்டஸ் போன்ற செடிகள் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, மற்ற தாவரங்கள் வாடிப்போக வழிவிடுகின்றன. நான்காவது பிரச்சனை, மொட்ட மாடியில் உள்ள கான்கிரீட் தளங்களில் ஏற்படும் அதிகப்படியான சுமையாகும். காரணம் கனமான வேர்களைக் கொண்ட மரங்களும், பெரிய அலங்காரச் செடிகளும்; மொட்டை மாடிக்கென்று இருக்கும் ‘பாதுகாப்பு எடை வரம்புகள்’ மீறி எடையை தருகின்றன.
இறுதியாக, அதிக இவை செலவுள்ள ரிப்பேர், பாதுகாப்பு அபாயங்களை தருகிறது. இது வீட்டு உரிமையாளர்களை தேவையற்ற செலவுகளை செலவழிக்கத் தூண்டுகிறது, அதே நேரத்தில் கட்டிடத்தின் நீண்டகால உறுதி தன்மையையும் கேள்விக்குறியாகிறது.
கலாச்சார பரிமாணங்களின் தொடர்பு:
தமிழ் கலாச்சாரத்தில் ஆலமரமும், அரசமரமும் புனித மரங்களாகும். அவை பாரம்பரியமாக வீடுகளுக்கு அருகில் அல்லாமல் கோயில்களுக்கு அருகில் நடப்படுகின்றன. மூங்கில் செழிப்பின் சின்னமாகும்; ஆனால் அதன் தன்மை காரணமாக நெரிசலான நகர்ப்புறங்களில் தவிர்க்கப்படுகிறது. இதேபோல்தான் மாடித் தோட்டமும் அழகியல், பாரம்பரியம், அறிவியல் கலந்த கலவையாக இருக்க வேண்டும்.
சில ஞானகளின் வார்த்தைகள்:
ரவீந்திரநாத் தாகூர் ஒருமுறை கூறினார், “வானத்துடன் பேச பூமி மேற்கொள்ளும் முடிவற்ற முயற்சியே மரங்கள்.” ஆக, மரங்கள் புனிதமானவை என்றாலும், அவற்றை வைக்கும் இடம் இயற்கையையும், மனித கட்டமைப்புகளையும் மதிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை அவரது வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
இந்த செடிகள் கட்டிடப் பாதுகாப்பையும், சுற்றுச்சூழல் சமநிலையையும் சீர்குலைப்பதால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஆக, நாம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயம் ‘சகுனங்களைப் பற்றியது அல்ல’, மாறாக நம் கட்டமைப்பு அறிவியலையும், சுற்றுச்சூழல் பொருத்தத்தையும் பற்றியது.
இந்த இனங்களை நடுவதால் வருத்தம், சேதம் மற்றும் அதிக செலவுகள்தான் ஏற்படுகின்றன என்பதைத் தோட்டக்காரர்களின் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, சில அறிவியல் ஞானத்தையும், பொறியியல் கோட்பாடுகளையும் தெரிந்துகொள்வதன் மூலம், மாடித்தோட்டம் பாதுகாப்பானதாகவும், நீடித்ததாகவும், ஆன்மீக அர்த்தமுள்ளதாகவும் நம்மால் வைத்திருக்க முடியும்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், மரங்களின் இயற்கையான வளர்ச்சி மற்றும் கட்டிடக் கட்டமைப்புக்கு இடையேயான சமநிலையைப் புரிந்து கொண்டு, இயற்கை அழகும் ஆன்மீக ஈர்ப்பும் நிறைந்த பாதுகாப்பான பசுமைச் சூழலை உங்கள் இல்லத்தில் உருவாக்கலாம்.