சின்னச் சின்ன செயல், பெரிய மாற்றம்: சுற்றுச்சூழலைக் காக்க 10 எளிய வழிகள்!

Ways to protect the environment
Environmental protection
Published on

சுற்றுச்சூழல் என்பது உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படை நிலை. நம்மைச் சுற்றி உள்ள காற்று, மண், நீர், மரங்கள், விலங்குகள் ஆகியவை அனைத்தும் இந்த சுற்றுச்சூழலின் பகுதிகளாகும். இந்த வளங்களைச் சீராக வைத்திருப்பது நம்முடைய கடமை. இன்று சுற்றுச்சூழல் பலவிதமான அழிவுகளுக்கு ஆளாகி வருகிறது. ஆனால், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு பெரிய திட்டங்கள், அரசியல் அறிவிப்புகள் மட்டும் போதாது, ஒரு சிறு செயலும் பெரிய மாற்றத்துக்கான தூணாக அமையலாம்.

சுற்றுச்சூழலை பாதிக்கும் முக்கிய காரணங்கள், மரங்களின் பாரம்பரிய அழிப்பு, அதிகமான பிளாஸ்டிக் பயன்பாடு, தொழில் துறைகளின் வேதிக்கழிவுகள், சாலைகளில் கூடும் குப்பைகள், தண்ணீர், மண், காற்று மாசுகள் விலங்குகள் வாழும் இடங்கள் அழிவடைவது என இவை அனைத்தும் மனிதர்கள் உருவாக்கும் செயல்களின் விளைவுகளே. இதை மாற்றும் ஒரே வழி ஒவ்வொரு நபரும் சிறு சிறு நல்ல செயல்களைத் தொடர்ச்சியாக செய்வது.

இதையும் படியுங்கள்:
தேனீக்களின் நடனம்: நோபல் பரிசு வாங்கிய ரகசியம்!
Ways to protect the environment

சிறு செயல்களின் உதாரணங்கள்:

1. ஒரு மரம் நடுங்கள்: ஒருவர் ஒரே ஒரு மரமாவது நடக்க வேண்டும். அது வளரும்போது ஒரு குடும்பத்திற்கே ஆக்ஸிஜன் தரும் திறன் உண்டு.

2. பிளாஸ்டிக் தவிர்த்து துணி பைகள் பயன்படுத்துங்கள்: ஒரு துணி பையை தொடர்ந்து பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பைகள் பயன்படாமல் தடுக்கப்படும்.

3. மழை நீர் சேகரிப்பு அமைப்புகள்: வீட்டில் மழை நீர் சேகரிப்பதற்கான அமைப்புகளை அமைத்தால் தண்ணீர் தொடர்ச்சியாக நிலத்தில் சென்று நிலத்தடி நீர் குறைபாடு தீரும்.

4. சைக்கிள், நடை, பொதுப் போக்குவரத்து: தினமும் சைக்கிள் அல்லது நடந்து செல்வது, காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறது. இதனால் உடலையும் நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
கியூட்னஸின் உச்சம்: மனதை உருக வைக்கும் 10 குட்டி பறவை மற்றும் விலங்குகள்!
Ways to protect the environment

5. குப்பைகளை தனித்தனியாகத் தரம் பிரித்தல்: மாற்றி உபயோகிக்கக்கூடிய பொருட்கள், வேதிப் புழுக்கமற்ற கழிவுகள் என்பவற்றை தனித்தனியாக கையாள வேண்டும்.

6. மின், நீர் சேமிப்பு: பொய் கடிகாரம் போல் விழும் நீர் துளிகள், சுடுகின்ற விளக்குகள் அனைத்தும் தேவைக்கு ஏற்றாற்போல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

7. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: பள்ளி, கல்லூரி, சமூகங்கள் ஆகியவற்றில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல். குழந்தைகளுக்கு இயற்கையை மதிக்கும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே உருவாக்குதல்.

8. விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு: வன விலங்குகளின் வாழ்விடங்களை அழிக்காமல் காத்தல். வேட்டை, சட்டவிரோத வேட்டைகளைத் தடை செய்தல்.

இதையும் படியுங்கள்:
பால் தவளைகளின் சூப்பர் பவர்: அமேசான் மழைக் காடுகளின் ராஜாக்கள்!
Ways to protect the environment

9. பயிரிடும் முறைகள்: வேளாண்மையில் அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் பயன்படுத்தாமல், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்.

10. ஒலி மாசு தடுப்பு: தேவையற்ற இடங்களில் அதீத சத்தம் எழுப்பாமல் இருத்தல். பண்டிகைகளில் சத்தம் அதிகமாக்கும் பட்டாசுகளைத் தவிர்த்தல்.

சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள்:

சுற்றுச்சூழல் தூய்மையாகும், உயிரினங்கள் பாதுகாக்கப்படும், மழை மற்றும் நிலத்தடி நீர் அளவு அதிகரிக்கும், காற்று, நீர், மண் மாசு குறையும், எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு பாதுகாப்பான உலகம் உருவாகும், வியாபார நிறுவனங்கள், அரசுத் திட்டங்கள் என்று எதிர்பார்ப்பதற்குப் பதிலாக நாம் ஒவ்வொருவரும் நம் பங்களிப்பை சிறு அளவிலாவது செய்யத் தொடங்க வேண்டும்.

ஒருவர் ஒரு மரம், ஒருவர் ஒரு துணிப்பை, ஒருவர் ஒரு பசுமை முயற்சி, இதுவே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பெரும் அடித்தளம். இதை முறையாகப் பின்பற்றினால் சுற்றுச்சூழல் சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ‘சிறு சின்ன செயல் இன்று, மிகப்பெரிய மாற்றம் நாளை!’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com