ஜின்டோ தீவில் நடைபெறும் அலைகளின் அற்புதம்: கடல் பிரியும் அதிசயம்!

The miracle of the parting of the sea
Jindo Sea Parting Festival
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

லகின் சில இயற்கை நிகழ்வுகள் மனிதர்களை அதிசயத்தில் ஆழ்த்தும் வல்லமை கொண்டவை. அதில் ஒன்று தென் கொரியாவின் ஜின்டோ தீவில் ஆண்டுதோறும் நிகழும் ‘கடல் பிரியும்’ நிகழ்ச்சி. புராணக் கதைகளில் சொல்லப்படும் மோசஸ் அதிசயத்தைப் போலவே, உண்மையிலேயே கடல் நீர் விலகி, நிலப்பாதை வெளிப்படும் இந்தத் தருணம், இயற்கையின் அதிசயத்தையும், உள்ளூர் நம்பிக்கைகளையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறது.

ஜின்டோ கடல் பிரியும் நிகழ்வு:

1. நிகழ்வின் இடம்: தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜின்டோ தீவில் (Jindo Island) இந்த இயற்கை அதிசயம் நிகழ்கிறது. இது ஜின்டோ தீவு (Jindo) மற்றும் மோடோ தீவு (Modo) இடையே நடைபெறும்.

2. இயற்கை நிகழ்வின் காரணம்: இது ஒரு அலைச்சல் (Tidal Phenomenon). வருடத்தில் சில நாட்களில் சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரே கோட்டில் வரும்போது, கடல் நீர் மிக வலுவாக விலகி, சுமார் 2.8 கி.மீ. நீளமும், 40 முதல் 60 மீட்டர் அகலமும் கொண்ட நிலப்பாதை வெளிப்படும். அந்தப் பாதை ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை மட்டுமே வெளிப்படும்.

இதையும் படியுங்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்: வேப்ப மரத்தின் அற்புதங்கள்!
The miracle of the parting of the sea

3. உள்ளூர் நம்பிக்கை - விரிவான கதை: பழங்காலத்தில் ஜின்டோ தீவில் மக்கள் வாழ்ந்தனர். ஆனால், புலிகள் அடிக்கடி தாக்குவதால், அவர்கள் பாதுகாப்புக்காக மோடோ தீவுக்கு குடிபெயர்ந்து சென்றனர். அப்போது, Bbyong (ப்யோங்) என்ற மூதாட்டி மட்டும் ஜின்டோவில் சிக்கிக் கொண்டார். தனிமையில் தவித்து, குடும்பத்துடன் சேர வேண்டும் என விரும்பிய அந்தப் பெண், கடல் தெய்வம் ‘சமுடோக்’ (Samdok Goddess) என்பவரை வழிபட்டார். தெய்வம் அவளது பிரார்த்தனையை ஏற்று, கடலைப் பிரித்து நடந்து செல்லக்கூடிய பாதையை உருவாக்கியது. அந்தப் பாதையில், மூதாட்டி தனது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தாள். இதுவே இன்று மக்கள் நம்பும் ‘ஜின்டோ கடல் பிரிவு’ புராணம்.

4. திருவிழா (Festival): இந்த இயற்கை நிகழ்வை நினைவுகூர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் ‘Jindo Sea Parting Festival’ நடத்தப்படுகிறது. பாரம்பரிய இசை மற்றும் நாட்டியம், வழிபாடு மற்றும் சடங்குகள், கடல் பாதை நடை பயணம், மக்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து, கொடியுடன் கடல் பாதையில் நடந்து செல்கின்றனர். இச்சமயம் உள்ளூர் கடல் உணவுகள் மற்றும் பாரம்பரிய கொரிய உணவுகள் விருந்தளிக்கப்படுகின்றன. அதேபோல், கலை, கைத்தொழில் கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
இயற்கையின் படைப்பு: அழகான கொம்புகள் கொண்ட விலங்குகள்!
The miracle of the parting of the sea

5. சுற்றுலா சிறப்பு: இது உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. மக்கள் இதை ‘மோசஸ் அதிசயம்’ (Miracle of Moses) என்று அழைத்து ரசிக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் கடல் பிரியும் தருணத்தில் புகைப்படம் எடுக்க, கடல் உயிரினங்களை (சிறிய மீன்கள், நண்டுகள் போன்றவை) பார்வையிட அந்தப் பாதையில் நடந்து அனுபவிக்கிறார்கள்.

6. நிகழ்ச்சியின் காலம்: கடல் முழுவதும் பிரிந்து சுமார் 1 மணி நேரம் மட்டுமே பாதை தெளிவாக இருக்கும். ஆனால், விழா 3 முதல் 4 நாட்கள் வரை நடைபெறும். இந்த நாட்களில், தினமும் பல முறை மக்கள் கடல் பிரியும் தருணத்தை அனுபவிக்க முடியும்.

சிறப்பு: இயற்கை அதிசயம் + உள்ளூர் நம்பிக்கை + உலக சுற்றுலா ஈர்ப்பு, மூன்றையும் இணைக்கும் நிகழ்வு. இது தென் கொரியாவின் பெரிய கலாசார சுற்றுலா விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com