புலிகளின் எல்லைகளை வரையறுக்கப் பயன்படுத்தும் மரம்!

The tree used to define the tigers' boundaries!
Bischofia Javanica Tree
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

சோழவேங்கை (Bischofia Javanica) என்பது பி பிலேகாபா பேரினத்தைச் சேர்ந்த ஒருவகை மரமாகும். இதற்கு மலைப் பூவரசு, மிலச்சடையான், மூலா மரம் என்ற வேறு சில பெயர்களும் உண்டு. இந்தியா உள்ளிட்ட தெற்காசியா, தென்கிழக்கு ஆசியாவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் பொலினீசியா வரையுள்ள பகுதிகளில் இம்மரம் அதிக அளவில் இருக்கின்றன.

இந்த மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் உயரமான பகுதிகளில் நன்கு வளர்கின்றன. சோலைக்காடுகளில் மிகவும் வயதான மரங்களைக் காணலாம். இந்த மரங்கள் 12 முதல் 50 மீட்டர் உயரம் வரை வளரும். எப்போதும் பசுமையாகக் காணப்படும். இம்மரத்தில் பச்சை நிறத்தில் பூக்களும், இளம் சிவப்பு பழுப்பு நிறத்தில் கொத்தாகப் பழங்களும் இருக்கும். இந்த மரங்கள் அதிகபட்சமாக 10 அடி விட்டமும், 20 அடி சுற்றளவும் கொண்டவையாக இருக்கும். இதைவிட அதிகச் சுற்றளவு கொண்ட மரங்களும் சில இடங்களில் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், ஏற்காடு மலையிலுள்ள அசம்பூர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய ஒரு பழமையான மரம் இருக்கிறது. இம்மரத்தின் தூண் பகுதியானது 15 மீட்டர் உயரம்வரை உள்ளது. அதன் பிறகேக் கிளைகள் பிரிகின்றன. மரத்தூண் பகுதியானது அடியில் பெருத்தும், மேலேச் செல்லச் செல்லப் புணல் வடிவிலும் உள்ளது.

அடிப்பகுதி மிகவும் அகன்று இருக்கிறது. தரையுடன் ஒட்டிய பகுதியின் சுற்றளவு 66 அடி கொண்டதாக, 10 பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் அளவுக்கு இந்த மரம் மிகப்பெரியதாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
அதிசயங்கள் நிறைந்த கருப்பு மணல் கடற்கரை பற்றி தெரியுமா?
The tree used to define the tigers' boundaries!

சிவப்பு நிறம் கொண்ட இந்த மரம் உறுதியானது என்பதால், பாலங்கள் கட்டுல், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்தல் போன்றவைகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் பழங்களைக் கொண்டு ஒயின் தயாரிக்கப்படுகிறது.

மேலும், இதன் விதைகளில் 30 முதல் 54 % எண்ணெய்ப் பொருள் இருப்பதால், இவ்விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உயவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பட்டையில் இருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கப்படுகிறது. இந்தச் சாயத்தைப் பிரம்பு கூடை போன்றவற்றில் நிறமேற்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றனர்.

அசாம் காடுகளில் இந்த மரத்தைப் புலிகள் தங்கள் எல்லைப்பகுதியை வரையறுத்துக் கொள்வதற்காகக் கால் நகங்களால் மரத்தின் பட்டையைப் பிறாண்டிக் கீறுகின்றன. இந்தக் கீறல்கள் கொண்ட மரப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் புலிகள், அந்த எல்லைக்குள் மற்ற புலிகளை அனுமதிப்பதில்லை என்கின்றனர். 

இம்மரங்களைத் தென்மேற்கு, நடு, கிழக்குச் சீனாவிலும், தைவானிலும் வாழும் மக்கள் புனித மரமாகக் கருதி வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
சவூதி அரேபியாவில் நதிகள் ஏன் உருவாகவில்லை?
The tree used to define the tigers' boundaries!
logo
Kalki Online
kalkionline.com