பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை - முத்திரைக் குறியீடுகள் பற்றித் தெரியுமா?

Toxicity label
Toxicity label
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இந்தியாவில் பூச்சிக்கொல்லிக் கொள்கலன்களில் அதன் நச்சுத்தன்மை அளவினை அடையாளம் காண்பதற்காக, இந்திய அரசின் பூச்சிக்கொல்லிகள் சட்டம் - 1968 மற்றும் பூச்சிக்கொல்லி விதிகள் - 1971 ஆகியவற்றின் படி, பூச்சிக் கொல்லிக் கொள்கலன்களில் நிறுவனத்தின் பெயர், உற்பத்தியாளரின் பெயர், தற்செயலான நுகர்வு ஏற்பட்டால் மாற்று மருந்தின் பெயர் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். நச்சுத்தன்மையின் அளவை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையாக ஒரு வண்ணக் குறியீடு மூலம் உணர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதன்படி, சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை என்று நான்கு நிறங்களிலான நச்சுத்தன்மை முத்திரைகள் (Toxicity Labels) பூச்சிக் கொல்லிக் கொள்கலன்களில் ஒட்டப்படுகின்றன. இவற்றுள்;

1. சிவப்பு நிறக் குறியீடு:

மோனோக்ரோடோபாஸ், துத்தநாக பாஸ்பைடு, எத்தில் மெர்குரி அசிடேட் மற்றும் பிற பட்டியலிடப்பட்ட வேதிப்பொருட்களைக் கொண்டது. இவை மிகவும் நச்சு கொண்டவை. 1 மில்லி கிராம் முதல் 50 மில்லி கிராம் வரை வாய்வழி உட்கொண்டால் மரணம் ஏற்படுத்தும் தன்மையுடையவை.

2. மஞ்சள் நிறக் குறியீடு:

எண்டோசல்பன், கார்பரில், குயினல்போஸ் மற்றும் பிற பட்டியலிடப்பட்ட வேதிப்பொருட்களைக் கொண்டது. இவை அதிக நச்சு கொண்டவை. 51 மில்லி கிராம் முதல் 500 மில்லி கிராம் வரை வாய்வழி உட்கொண்டால் மரணம் ஏற்படுத்தும் தன்மையுடையவை.

3. நீல நிறக் குறியீடு:

மாலதியோன், தீரம், கிளைபோசேட் மற்றும் பிற பட்டியலிடப்பட்ட வேதிப்பொருட்களைக் கொண்டது. இவை மிதமான நச்சு கொண்டவை. 501 மில்லி கிராம் முதல் 5000 மில்லி கிராம் வரை வாய்வழி உட்கொண்டால் மரணம் ஏற்படுத்தும் தன்மையுடையவை.

இதையும் படியுங்கள்:
தோட்டக்கலையில் வேப்ப எண்ணெய் செய்யும் 8 மாயங்கள்!
Toxicity label

4. பச்சை நிறக் குறியீடு:

மான்கோசெப், ஆக்ஸிஃப்ளூர்பென், கொசு விரட்டும் எண்ணெய்கள் மற்றும் திரவங்கள் மற்றும் பிற வீட்டு பூச்சிக்கொல்லிகள். இவை சிறிய அளவிலான நச்சு கொண்டவை. 5000 மில்லி கிராமுக்கு மேல் வாய்வழி உட்கொண்டால் மரணம் ஏற்படுத்தும் தன்மையுடையவை.

இதையும் படியுங்கள்:
பிரானா மீன்கள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!
Toxicity label

மேற்காணும் நச்சுத்தன்மையின் நிறக் குறியீட்டு அடிப்படையிலான வகைப்பாடு, இந்தியாவில் விற்க அனுமதிக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளுக்கு மட்டுமேப் பொருந்தும். வகைப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகள் சில மாநில அரசுகளின் முடிவால் தடை செய்யப்படலாம். 2011 ஆம் ஆண்டின் எண்டோசல்பன் போராட்டங்களைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் சில சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் குறியீட்டிலான பூச்சிக்கொல்லிகள் தடை செய்யப்பட்டன என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com