அண்டார்டிகா பனிக்கட்டி முழுவதும் உருகினால் என்ன நடக்கும்? - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Antartica
Antartica
Published on

நம்மில் பலரும் அண்டார்டிகா என்றாலே, அழகிய பனிச்சறுக்கு விளையாடும் இடம் அல்லது பெங்குவின்கள் கூட்டம் கூட்டமாக வாழும் ஒரு ஜாலியான பிரதேசம் என்றுதான் நினைக்கிறோம். ஆனால், அந்தப் பனிக் கண்டம் உலகின் 90% பனிக்கட்டியையும், 70% நன்னீரையும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? "சரி, அது பாட்டுக்கு உருகிட்டு போகுது, நமக்கு என்ன?" என்று நீங்கள் நினைத்தால், அதுதான் தவறு. அந்தப் பனி மட்டும் ஒரே இரவில் உருகினால், நம் வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறும் என்பதைப் பற்றிய ஒரு கற்பனை கலந்த நிஜத்தைக் காண்போம்.

கடல் மட்டம் 200 அடி உயரும்!

அண்டார்டிகாவில் உள்ள அனைத்து பனியும் உருகினால், உலகெங்கிலும் கடல் மட்டம் சுமார் 200 அடி வரை உயரும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதன் அர்த்தம் என்னவென்றால், நாம் இப்போது வரைபடத்தில் பார்க்கும் பல கடற்கரை நகரங்கள் வரலாற்றில் மட்டுமே இருக்கும். நியூயார்க், லண்டன், டோக்கியோ போன்ற மெகா சிட்டிகள் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். நம் ஊரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களின் தரைத்தளங்கள் மீன்களின் வசிப்பிடமாக மாறிவிடும்.

வாழிடம் இழக்கும் கோடிக்கணக்கான மக்கள்!

கடலோரப் பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழப்பார்கள். இதனால் உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அகதிகள் இடப்பெயர்வு நடக்கும். உள்நாட்டுப் பகுதிகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுப்பார்கள். இதனால் நிலப்பற்றாக்குறை, உணவுத் தட்டுப்பாடு மற்றும் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும். எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்திருந்தாலும், குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகலாம். காரணம், பனி உருகி கடலில் கலப்பதால் உப்புத் தண்ணீர் நன்னீர் ஆதாரங்களை அழித்துவிடும்.

இதையும் படியுங்கள்:
சம்பளம் வந்ததும் இதை மட்டும் செய்யுங்க... அப்புறம் பணக்கஷ்டமே வராது!
Antartica

பூமியின் சுழற்சியே மாறலாம்!

இது வெறும் தண்ணீர் பிரச்சனை மட்டுமல்ல. அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் இமயமலை போன்ற எடையைக் கொண்டவை. இந்த மிகப்பெரிய எடை திடீரெனக் குறையும்போது அல்லது இடம் மாறும்போது, பூமியின் அச்சில் மாற்றம் ஏற்படலாம். இது பூமியின் சுழற்சி வேகத்தையும், நாம் கணக்கிடும் நாட்களின் நேரத்தையும் கூட மாற்றக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, பனிக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் பழைய கிருமிகள் மற்றும் மீத்தேன் போன்ற வாயுக்கள் வெளியேறி, புதிய நோய்களையும், கடும் வெப்பத்தையும் உருவாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் உங்களை அட்ராக்ட் செய்ய இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
Antartica

இதைப் படிக்கும்போது ஏதோ ஹாலிவுட் படக் கதை போலத் தோன்றலாம். ஆனால், இது நடக்கவே நடக்காது என்று நம்மால் அலட்சியமாக இருக்க முடியாது. நிச்சயமாக, ஒரே இரவில் அனைத்து பனியும் உருகாதுதான். ஆனால், நாம் தொடர்ந்து இயற்கையை மாசுபடுத்திக் கொண்டிருந்தால், இந்தப் பேரழிவின் தொடக்கத்தை நம் தலைமுறையிலேயே பார்க்க நேரிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com