வௌவால்கள் நோய்களைப் பரப்புவதன் பின்னணி என்ன?

Bats
Bats
Published on

'வௌவால்' என்ற பெயரைச் சொன்னாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படும். இருட்டோடு தொடர்புடையதாலும், கொரோனா போன்ற நோய்களுக்கும் வௌவால்கள்தான் காரணம் என்று கூறப்படுவதாலும் இந்த பயம் இன்னும் அதிகமாகிறது. ஆனால், வௌவால்கள் உண்மையிலேயே கெட்டவையா?

வௌவால்களின் வியக்க வைக்கும் சக்தி!

வௌவால்கள் நோய்களை எதிர்க்கும் ஒரு அபாரமான சக்தியைக் கொண்டுள்ளன. பல கோடி ஆண்டுகளாக, அவை பலவிதமான நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி, தங்களை வலிமையாக்கிக் கொண்டுள்ளன. ஒரு புதிய வைரஸ் தாக்கினால், அதிலிருந்து தப்பிப் பிழைக்கும் சக்தி வாய்ந்த வௌவால்கள், அந்த சக்தியைத் தங்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்றன. 

இப்படி, தலைமுறை தலைமுறையாக அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலிமையாகிவிட்டது. மற்ற விலங்குகளையும் மனிதர்களையும் எளிதில் தாக்கும் வைரஸ்களைக் கூட அவற்றால் எளிதாகத் தாங்கிக்கொள்ள முடியும்.

நோய்கள் பரவக் காரணம் என்ன?

அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த வௌவால்கள் எப்படி நோய்களைப் பரப்புகின்றன? இதற்குக் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, அவை எப்போதும் கூட்டமாக, ஆயிரக்கணக்கில் நெருக்கமாக வாழும். இதனால், ஒரு வௌவாலுக்கு நோய் வந்தால், அது மிக வேகமாக மற்ற வௌவால்களுக்குப் பரவிவிடும். 

இதையும் படியுங்கள்:
வௌவால்களை வழிபடும் கிராமம்; மக்களைக் காக்கும் வௌவால்கள்!
Bats

இரண்டாவது காரணம், அவற்றின் நீண்ட தூரப் பயணம். வௌவால்கள் உணவுக்காகவும், தகுந்த இடத்திற்காகவும் பல நூறு கிலோமீட்டர்கள், சில சமயங்களில் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குக் கூட பறந்து செல்லும். அப்படிப் பயணம் செய்யும்போது, அவை தங்களுக்குள் இருக்கும் நோய்க்கிருமிகளையும் தங்களுடன் எடுத்துச் செல்கின்றன.

மனிதர்களின் பங்கு என்ன?

வௌவால்கள் நோய்களைச் சுமந்து சென்றாலும், அவை பரவுவதற்கு அவை மட்டுமே காரணமல்ல. உண்மையான காரணம் மனிதர்கள்தான். நாம் நம்முடைய தேவைக்காகக் காடுகளை அழித்து, வௌவால்களின் வீடுகளைப் பறிக்கிறோம். இதனால், வாழ்வதற்கு இடமில்லாமலும் உணவு கிடைக்காமலும் அவை நம்முடைய ஊர்களுக்குள் வரத் தொடங்குகின்றன. 

இதையும் படியுங்கள்:
மன அமைதிக்கு வழிகாட்டும், ‘காட்டு விநாயகா; வழிகாட்டு நாயகா!’
Bats

இப்படி மனிதர்களும், காட்டு விலங்குகளும் மிக அருகில் வரும்போதுதான், விலங்குகளிடமிருந்து நோய்கள் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் (Zoonotic Transmission) அதிகரிக்கிறது.

எனவே, வௌவால்களை நோயின் அடையாளமாகப் பார்ப்பது தவறு. அவை இயற்கையின் ஒரு முக்கிய அங்கம். நாம் அவற்றின் வாழ்விடங்களான காடுகளை அழிக்காமல் பாதுகாத்தாலே போதும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com