
ஆன்மீக மாதமாக கருதப்படும் ஆடி மாதம் வங்துவிட்டாலே, விசேஷங்கள் களைகட்டும். இதில் முக்கியமானது என்றால் கூழ் தான். ஆடி மாதம் கூழ் வாங்குவதற்காகவே கோயில்களில் கூட்டம் முந்தியடிக்கும். அதுவும் குறிப்பாக ஆடி வெள்ளி - செவ்வாய்க்கிழமைகளில் தான் கூழ் ஊற்றுவார்கள். ஆடிக்கூழ் ஊற்றுதல் என்பது, எளியவர்களின் பசிப்பிணியை போக்கி, அவர்தம் மகிழ்ச்சியில் இறைவனைக் காண்போம் என்ற வழிபாட்டின் தாத்பரியம்.
ஆடி மாத வழிபாடு வேப்பிலைக்கும், எலுமிச்சைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புண்ணிய மாதத்தில் தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது நம்பிக்கை.
ஆடிக்கூழ் ஊற்றுவதன் கதை:
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை, பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதைகேட்டு ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி துக்கம் தாங்காமல், தன் உயிரை விட முடிவு செய்து, தீயை மூட்டி அதில் இறங்கிவிட, அப்போது இந்திரன் மழை பொழியச் செய்து, தீயை அணைத்தான். இருந்த போதிலும் சில தீக்காயங்களால் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டதால், வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமரத்தின் இலைகளை பறித்து ஆடையாக அணிந்துள்ளார் ரேணுகாதேவி.
பசியைப் போக்க அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உணவு கேட்க, அங்குள்ள கிராம மக்கள் அவளுக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக தந்துள்ளனர். அதைக் கொண்டு கூழ் தயாரித்து சாப்பிட்டார்.
அவர் முன், சிவபெருமான் தோன்றி, "உலக மக்களின் அம்மை நோய் நீங்க, நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும்" என வரம் அளித்தார்.
இதனால்தான் இதனை நினைவு கூறும் வகையில், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதை கோயில்களில் தான் சென்று வாங்க வேண்டுமா? வீடுகளிலேயே செய்யக்கூடாதா?
இதோ எளிமையான ரெசிபியை பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
1 கப் ராகி மாவு
1/4 கப் பச்சை அரிசி
சுமார் 2 கப் தண்ணீர் + தேவைக்கேற்ப
1 கப் தயிர்
சிறிய வெங்காயம் 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்
சுவைக்கு உப்பு
செய்முறை:
ராகி மாவில் 4 கப் தண்ணீரைச் சேர்த்து, முழுமையாகக் கலந்து கட்டி இல்லாமல் கிளறி ஒதுக்கி வைக்கவும்.
பச்சை அரிசியை மிக்ஸியில் எடுத்துக் கொள்ளவும். ரவா போல் கரடுமுரடான கலவையாக அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில், 2.5 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அரிசியைச் சேர்த்து, கஞ்சி போன்ற நிலைத்தன்மைக்கு வரும் வரை மென்மையாக சமைக்கவும்.
பிறகு கலந்து வைத்திருக்கும் ராகி மாவு கலவை மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில், அது கெட்டியாகும் வரை மற்றும் பச்சை வாசனை போகும் வரை கலந்து சமைக்கவும். இது பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாறும்.
இந்த கட்டத்தில், அதை அணைத்து, பரந்த வாய் கொள்கலனில் பரப்பி, அதை முழுமையாக குளிர்விக்க விடவும். தயிரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி ஒதுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கரடுமுரடான விழுதாக அரைக்கவும். இப்போது ராகி கூழில், மோர், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும். கட்டிகள் இல்லாமல் நன்றாக அடிக்கவும்; ஒரு மெல்லிய கூழ் நிலைத்தன்மைக்கு தண்ணீர் சேர்க்கவும். இது மிகவும் சரியாக இருக்க வேண்டும். வெங்காயம் மற்றும் மிளகாயுடன் ஆடி கூழ் பரிமாறவும்.