நாவின் சுவை கூட்டும்: ஆந்திரா ஸ்பெஷல் ஒக்காணி (பொரி உப்புமா) - அரிசி உப்புமா!

Upma recipes
Andhra Special Okkani (Pori Upma) - Rice Upma!
Published on

ப்புமா என்றால் முகம் அளிப்பவர்களுக்கு நாவின் சுவை கூட்டும் வகையில் இருக்கும் இந்த உப்புமா வகைகள்.

ஒக்காணி (பொரி உப்புமா)

இந்த உணவு ஆந்திர மாநிலத்திலுள்ள இந்துப்பூரில் மிகவும் பிரபலமான சிற்றுண்டியாகும். நம் ஊரின் Instant உப்புமா போல, திடீர் விருந்தினர்களுக்கு செய்து பரிமாறுவர்.

தேவையான பொருட்கள்:

பொரி – 1 பக்கெட்

வேர்கடலை – ஒரு கைப்பிடி

பொரித்த கடலை – ஒரு கைப்பிடி

பெரிய வெங்காயம் – 2 (நறுக்கி வைப்பு)

பச்சை மிளகாய் – 5

பூண்டு – 5 பல்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி தழை – சிறிதளவு

புதினா இலை – சிறிதளவு

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு – 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை::

வாய் அகன்ற பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, பொரி மற்றும் கடலையை சேர்த்து உடனே நனையவைத்து பிழிந்து எடுத்துவைக்கவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய்களை பொடியாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு பொரிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா இலை சேர்த்து நன்கு கிளறி, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பும் சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்கு வதங்கியதும், முன்பே நனையவைத்து பிழிந்து வைத்துள்ள பொரி, கடலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அடி பிடிக்காமல் கிளறிக்கொண்டு வரவும்.

இறுதியில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான, ஆரோக்கியமான “ஒக்காணி (பொரி உப்புமா)” தயார்!

விருப்பப்பட்டால் சிறிது தேங்காய் துருவலும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான சுவை: நேந்திரம் பழத்தைக் கொண்டு ஜாம் செய்வது எப்படி?
Upma recipes

அரிசி உப்புமா

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி அல்லது பச்சரிசி – 500 கிராம்

துவரம்பருப்பு – 100 கிராம்

தேங்காய் துருவல் – 1 கப்

பெரிய வெங்காயம் – 2

மிளகாய்வற்றல் – காரத்திற்கு ஏற்ப

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு – 1/4 ஸ்பூன்

பூண்டு – 5 பல்

புதினா இலை – சிறிதளவு (விருப்பத்தேர்வு)

கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை கழுவி நன்கு காயவைத்து வாணலியில் சிவக்க வறுத்து எடுக்கவும். வறுத்த அரிசியை மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து வைக்கவும்.

அதே வாணலியில் துவரம்ப ருப்பை சிவக்க வறுக்கவும். வறுத்த பருப்புடன் தேங்காய் துருவல், மிளகாய்வற்றல், சீரகம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
உணவிலும் மருந்திலும் மிளகாய்: அதன் வரலாறு மற்றும் வகைகள்!
Upma recipes

கொதிக்கும் நீரில் அரைத்த அரிசி ரவைபோல் சேர்த்து, உப்பும் போட்டு நன்கு கலக்கவும்.

அரிசி மாவு இட்லி மாவு பதத்திற்கு வந்ததும், கொஞ்சம் கெட்டியாக இருக்கும்போது எடுத்து இட்லி தட்டில் போட்டு ஆவியில் வேகவைக்கவும். வேகவைத்த இட்லிகளை நன்கு உதிர்த்து ஆறவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை வதக்கவும்.

அதனுடன் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின், உதிர்த்த இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, தேவையான உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

இறக்கும்போது புதினா, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.சூடான அரிசி உப்புமாவை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com