தேவையானவை:
கேரட் – 5, வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், பச்சை மிளகாய் – 7, கடுகு – 2 ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையானது.
செய்முறை:
கேரட்டைத் துருவி வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் போட்டு மிளகாய், புளி இவற்றுடன் சேர்த்து சிவக்க வதக்க வேண்டும். வேர்க்கடலையை பொடி செய்து போட்டு சேர்த்து அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்த கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சட்னியில் போட்டு கலக்க வேண்டும்.