செட்டிநாடு ஸ்பெஷல் 'வெள்ளையப்பமும் காரச் சட்னியும்' செய்யலாம் வாங்க!

Chettinad Recipe Vellai Appam and Kara Chutney
Vellai Appam and Kara ChutneyImg Credit:
ராதா ரமேஷ்

வணக்கம். நான் ராதா ரமேஷ். தமிழ் இலக்கியம் பயின்றுள்ளேன். நான் ஒரு தமிழ் ஆசிரியை. பள்ளி காலங்கள் முதலே எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல்வேறு கவிதைகள், கதைகள்,கட்டுரைகள் எழுதி வருகிறேன். மேலும் சிறு சிறு பத்திரிகைகளிலும் எழுதியுள்ளேன்.தற்போது கல்கி இதழிலும் எழுதத் தொடங்கியுள்ளேன். மனித மனங்களை ஒன்று சேர்க்கும் மிகப்பெரிய ஆக்க சக்தியாக எழுத்துக்கள் இருக்கும் என உறுதியாக நம்புவதால் வாழ்வியலோடு சேர்ந்த உணர்வுகளை எழுத்துக்களாக பதிவு செய்து வருகிறேன். நன்றி!

Updated on

தினமும் சாப்பிடும் இட்லி,தோசைக்கு மாற்றாக ஒரு நாள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம் வாங்க!

வெள்ளையப்பம்

தேவையான பொருள்கள்:

  • பச்சரிசி - 1 கப்

  • உளுந்து - 3 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு

  • காய்ச்சிய பசும்பால் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

அரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவி 4 மணி நேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பசும்பால் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். பின் இதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானவுடன் ஒரு குழிகரண்டியில் மாவை எடுத்து அதனை மெதுவாக எண்ணெயில் விட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

  • மாவு புளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • மாவு தோசை மாவை விட சற்று கூடுதலான தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும்.

காரச் சட்னி:

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் - 10

  • பூண்டு - 5

  • புளி - நெல்லிக்காய் அளவு

  • காய்ந்த மிளகாய் - 5

  • தக்காளி - 1

  • உப்பு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் தால் கிச்சடி வித் வெஜிடபிள் துவையல் செய்யலாம் வாங்க!
Chettinad Recipe Vellai Appam and Kara Chutney

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,உளுந்தம் பருப்பு,காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த கலவையில் சேர்த்து நன்கு கலந்து எடுத்தால் சுவையான காரச் சட்னி தயார்!

குறிப்பு:

பச்சை வாசனை இருப்பதாக உணர்பவர்கள் தாளித்தவுடன் சிறிது நேரம் அடுப்பில் வைத்து வதக்கிக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com