ஜில்லென ஸ்வீட்டான குல்ஃபி ஃபலூடா-பூரான் போலி செய்யலாம் வங்க!

sweet Kulfi Falooda-Puran!
Cool Recipes
Published on

குல்ஃபி ஃபலூடா என்பது இந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு. இது குளிர்ச்சியாகவும், ருசிகரமாகவும் இருக்கும். இது செய்வதற்கு...

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர் (கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்)

சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய பாதாம், பிஸ்தா – 3 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் – ½ டேபிள்ஸ்பூன்

குங்குமப்பூ – சிறிதளவு (விருப்பம் இருந்தால்)

ஃபாலூடா சேமியா – ¼ கப் (நூடுல்ஸ் போல இருக்கும், ரோஸ் வாட்டரில் ஊற வைக்கவும்)

ரோஸ் சிரப் – 2 டேபிள்ஸ்பூன்

சபுதானா (ஜவ்வரிசி) – 1 டேபிள்ஸ்பூன் (வேகவைத்தது)

காய்ச்சி குளிரவைத்த பால் – ½ கப்

நறுக்கிய ட்ரை ஃப்ரூட்ஸ் _சிறிது

ரோஸ் சிரப் மேலே ஊற்ற

செய்முறை:

பாலை நன்றாகக் கொதிக்க வைத்து பாதியாகக் குறைய வரும் வரை கிளறுங்கள். அதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்க்கவும். கலவை கெட்டியாக ஆகும் வரை சிம்மில் வைத்து கிளறவும். பின் இதை molds-இல் ஊற்றி, ஃப்ரீஸரில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.

ஃபாலூடா சேமியாவை வெந்நீரில் 5 நிமிடம் வேக வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி வைக்கவும். சபுதானாவும் இதேபோல் வேக வைத்து, ஆறவைக்கவும். ஒரு நீளமான கண்ணாடி கப்பில், முதலில் ரோஸ் சிரப் ஊற்றவும். அதில் ஃபாலூடா சேமியா மற்றும் சபுதானா போடவும். காய்ச்சி குளிரவைத்த பால் சேர்க்கவும். அதற்கு மேல் குளிர்ந்த குலஃபி வைக்கவும். மேலே நறுக்கிய ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் இன்னும் கொஞ்சம் ரோஸ் சிரப்புடன் அலங்கரிக்கவும். குளிர்ச்சியான சூப்பர் டேஸ்ட் குலஃபி ஃபாலூடா ரெடி

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகளே உங்கள் மனதில் இருக்கும் கேள்வி இதுதானா?
sweet Kulfi Falooda-Puran!

பூரான் போலி

பூரான் போலி என்பது மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பிரபலமான ஒரு இனிப்பு வகை. இது சிறப்பாக தொம்ளியார், தோள் அல்லது பருப்பு பூரண ஓபாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது செய்ய

தேவையான பொருட்கள்:

மைதா (அல்லது கோதுமை மாவு) – 1 கப்

உப்பு – சிறிதளவு

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

நீர் – தேவையான அளவு

கடலை பருப்பு – 1 கப்

வெல்லம் – 1 கப் (அரைத்தது)

ஏலக்காய் தூள் – ½ டேபிள்ஸ்பூன்

நெய் – 1 மேசைக்கரண்டி

செய்முறை:

மைதாவை உப்புடன் சேர்த்து நன்றாக கலந்து, மென்மையான மாவாக நீர் சேர்த்து பிசையவும். மேலே எண்ணெய் தடவி, 30 நிமிடங்கள் மூடி ஊற வைக்கவும்.

கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, பின் வேகவைக்கவும். வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து, வடிகட்டி கொள்ளவும். வெல்லக் கரைசலில் வெந்த பருப்பை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து ஒன்றாக நன்கு கிளறி, தக்க கலவையாக கெட்டியாக ஆனதும், ஏலக்காய் தூள் சேர்க்கவும். பூரணம் குளிர்ந்த பிறகு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
பாட்டியின் பருப்புருண்டை மற்றும் மனோரஞ்சிதக் குழம்பு ரெசிபிஸ்!
sweet Kulfi Falooda-Puran!

மாவில் சிறிய உருண்டை எடுத்து, அதை சிறிது வட்டமாக தேய்க்கவும். அதில் ஒரு பூரண உருண்டையை வைத்து மூடி வைத்து மெதுவாக வட்டமாக அழுத்தவும் (தோசை போல). நன்கு சூடான தவாவில், புரான் போலியை நெய் விட்டு இருபுறமும் வேகவைக்கவும்.

நெய் அல்லது குளிர்ந்த பாலை மேலே ஊற்றி பரிமாறலாம். சூடாக இருக்கும்போது சுவை அதிகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com