
-நாகஜோதி கிருஷ்ணன்
திருச்செந்தூர் திருபாகம்
பால், கடலை மாவு, சர்க்கரை- தலா 1 கிண்ணம் பொடித்த முந்திரிப் பருப்பு, நெய்-தலா கால் கிண்ணம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம்- தலா 2 சிட்டிகை
செய்முறை:
சலித்த கடலைமாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். அடுப்பில் வைத்து, கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்து எடுக்கும்போது, சர்க்கரை சேர்க்கவும். முந்திரிப்பருப்பு, நெய், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து கிளறவும். அல்வா பதத்துக்கு வரும்போது. அடுப்பை அணைக்கவும்.
*****************************
சிதம்பரம் கல்கண்டு சாதம்
தேவையானவை:
கல்கண்டு, பச்சரிசி- 1 கிண்ணம்
பாசிப் பருப்பு-2 தேக்கரண்டி
பச்சை கற்பூரம்-2 சிட்டிகை
பால்- 3 கிண்ணம்
நெய்- கால் கிண்ணம்
செய்முறை:
பாலுடன் பச்சரிசி பாசிப்பருப்பு. தண்ணீர் சேர்த்து குழைய வேகவைக்கவும் சூடாக இருக்கும்போது, மசிக்கவும். பொடித்த கல்கண்டுடன் கால் கிண்ணம் தண்ணீர் சேர்த்து விடவும், கெட்டியாகக் கொதித்து வரும்போது, வெந்த கலவை சேர்த்துக் கிளறவும். நெய், பச்சைக் கற்பூரம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
*****************************
அழகர்கோவில் தோசை
தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 1 கிண்ணம்
கறுப்பு உளுந்து - கால் கிண்ணம்
கறிவேப்பிலை-2 ஆர்க்குகள்
இஞ்சி, மிளகு, சீரகம் - தலா 1 மேசைக் கரண்டி
நெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, உளுந்து, இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஊறவைக் கவும். இரண்டு மணிநேரம் கழித்து அரைக்கவும். தவாவை சூடாக்கி, சிறிய தோசைகளாக்கி சுற்றிலும், நெய் சேர்த்து இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
அரவணைப் பாயசம்
தேவையானவை:
சிவப்பு அரிசி, வெண்ணெய் - தலா 1 கிண்ணம்
வெல்லம் - 3 கிண்ணம்
ஏலக்காய்த் தூள்- அரை மேசைக்கரண்டி
செய்முறை:
2 மேசைக்கரண்டி நெய்யில் அரிசி சேர்த்து வறுக்கவும் 4 கிண்ணம் தண்ணீர் சேர்த்து கரையவிடவும். வடிகட்டி, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். வெந்த அரிசி, வெண்ணெய், ஏலக்காய்த்தூள் வைத்து கெட்டியாகும்வரை கிளறவும்.
திருப்பதி கதம்ப சாதம்
தேவையானவை:
பச்சரிசி- 1 கிண்ணம் பூசணிக்காய், கத்தரிக்காய், வாழைக் காய், பறங்கிக்காய் (துண்டுகளாக அரிந்து) - தலா 3 கிண்ணம் புளி - எலுமிச்சைஅளவு மஞ்சள் தூள்- அரை மேசைக்கரண்டி பச்சைப்பயிறு- கால் கிண்ணம் கறுப்பு உளுந்து, கறுப்பு எள், மிளகு- தலா மேசைக் கரண்டி நெய் - 4 மேசைக்கரண்டி உப்பு - சுவைக்கேற்பு கறிவேப்பிலை-2 ஆர்க்குகள்
செய்முறை:
பச்சைப் பயிறு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். புளியுடன் 2 தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். மேலும், 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். காய்கறிகள், அரிசி, நெய் சேர்த்து கிளறவும். வெந்து வரும்போது, பொடி சேர்த்துக்கிளறி அடுப்பை அமைக்கவும்.